Posts

Showing posts from July, 2023

k.a.THANGAPANDIYAR..DEVARAM.....VEERALAKSHMI AKKA.UPDATION

 உண்மையில் அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு திருமணம் ஆன பிறகு தான் அவரை பற்றி எனக்கு தெரிய வந்தது....அவர் என் மாமியார் அண்ணன் மற்றும் என் கணவரின் சகோதரி அவரது மகனுக்கு திருமணம் செய்து கொண்டார் மற்றும் கணவர் இளைய சகோதரர்கள் மகள் அவரது 2 வது பேரனுக்கு திருமணம் செய்து கொண்டார் ... நான் என் மாமனார் அவரிடம் இவ்வளவு மரியாதை காட்டுவதைப் பார்த்திருக்கிறேன் இவரது மனைவி போடி ஜமீன்தாரின் சகோதரி.   நான் கவனித்த வரையில் அவர் அதிகம் பேசமாட்டார். அவர் காலில் நாம் விழும் போது, உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்று கூறுகிறார். தேவாரத்தின் ஜமீனை காலூன்றி நிற்க வைத்ததற்குக் காரணம் அவர்தான் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன் ஒரு வணிகரிடம் அடகு வைக்கப்பட்ட ஜமீன் சொத்தை அவர் மீட்டெடுத்தார் அவர் தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிக்கப்படும் நபராக இருந்தார். குடும்பத்தில் அவரை வேண்டாம் என்று சொல்லும் துணிச்சல் உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். உண்மையில் அவரால் நமக்கு ஒரு அடையாளம் கிடைக்க...

ஆ .ரஞ்சித் அவர்களுக்கு பாராட்டு

Image
 ஆ .ரஞ்சித்  அவர்களுக்கு  பாராட்டு திண்டுக்கல் மாவட்டம்  வத்தலக்குண்டு வட்டம்  கோ.காமாட்சிபுரத்தை சேர்ந்த A.அஜீத்குமார் என்கிற ரஞ்சித்குமார் அவர்கள் Group 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்...தற்பொழுது கல்வித்துறையை தேர்ந்துடுத்துள்ளார் . பாராட்டுவதற்கு ..சமுதாய கல்வி வளர்ச்சிக்கு ..ஊக்குவிப்பதற்கு ... உங்களை பார்த்து ..நம் இளைய சொந்தங்கள் முன்னேறுவதற்கு ....ஒரு சிறு பதிவு.. கோ .காமாட்சிபுரத்தை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் அவர்கள் தன் விடாமுயற்சி மூலம் அரசு பள்ளியில் படித்து பத்தாம்வகுப்பு ,பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ,பொறியியல் துறை   எஸ்.பி.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (SBM COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) திண்டுக்கல் படித்து ..சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே ,எந்த ஒரு பயிற்சி கூடம் செல்லாமல் பணிநேரம் முடிந்து தன் நண்பர்கள் மூலம் வடநாட்டு மகேந்திர இன்ஸ்டிடியூட் நடத்தும் யூடூபில் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகள் மூலம் படித்து ,இரண்டு மூன்று துறைவாரியான தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றார், நண்பர்களுக்கு ம்...

ஆடி 18 நோம்பி 😍"தேங்காய் சுடும்" பண்டிகை🥥.🥰📗🖋️📡🌈🥥🥥

Image
ஆடி 18 நோம்பி 😍"தேங்காய் சுடும்" பண்டிகை🥥.🥰📗🖋️📡🌈🥥🥥 ஆடி மாதத்தில் வரும் பண்டிகை  நான் சேலத்தில் வங்கி பணியில் இருக்கும்பொழுது சேலத்தில் நண்பர்கள் வீட்டில் கொண்டாடியது மலரும் நினைவுகளாக உள்ளது .. ஆடிமாதப் பண்டிகைக்கு தென்னிந்தியா முழுமைக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் அரச விடுமுறை இருந்திருக்கின்றது. தென்னிந்திய மக்களால் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஆடிமாத முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைதான் இந்த "தேங்காய் சுடும்" பண்டிகை. தேங்காய் சுடுதல் பண்டிகை சேலம் மாவட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் சேலத்தைச் சுற்றியுள்ள ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ம...

சூலை 15 , 16 ஓசூர் தொல்லியல் கருத்தரங்கு சென்று வந்த பயணக்கட்டுரை...15-07-2023

 சூலை 15 , 16 ஓசூர் தொல்லியல் கருத்தரங்கு சென்று வந்த  பயணக்கட்டுரை தொல்லியல் கழகத்தில் 2019 ஆம் ஆண்டு  கோவை பி.எஸ். ஜி.கலந்து கொண்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும்  நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். 2020 மற்றும் 2021 ல் கொரோனாவால் நிகழ்வு நடத்தப்படவில்லை.  2022 ல் சூலை 15 புதுக்கோட்டையில் நிகழ்வு அதற்கு இதே போல் நானும் பாப்பா, சிவா மூன்று பேர் மட்டுமே சென்று வந்தோம். இந்த ஆண்டு யாரேனும் இருவரை அழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தபோது இறுதி வரை  யாரும் ஒத்துவரவில்லை. சரி நாமே செல்வோம் என்று சிவாவுடன் பேசி முடிவு செய்தோம். அதிலும்  மலையாண்டிபட்டணம் கல்விப்பரிசளிப்பு விழா இதற்காக காலையில் வைத்து  அதற்கெனப் பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து நேரில் அழைத்து அவரும்வருவதாகச் சொல்லி மிகச்சரியாக காலை  8.28 க்கு வந்து பேசிவிட்டு பரிசளித்துவிட்டுச் செல்ல மணியோ 10.40 ஆகிவிட்டது.  சரியென்று  வீட்டுக்கு வந்தால் அப்பொழுதுதான் அறிவு  எலுமிச்சை சாப்பாடு தாளித்துக்கொண்டிருந்தார். கோபத்தோடு சத்தம் போட காலை 7.20 க்கு வந்துவிட்ட நிகழ்வு முட...
Image
 ஓசூரில் இனிய தோழர் தேனீ  மோகன் குமார மங்களம் முதன் முதலாக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..நம் சமுதாய மக்கள் இவருக்கு நண்பர்கள் வட்டம் என்று  என்னிடம் தெரிவித்தார் ..நம் சொந்தம் எழுத்தாளர் தங்கபாண்டியன் அவர்களும் இவரின் தோழர் என்று கூறியது மற்றட்ட மகிழ்ச்சி ... ஓசூர் தொல்லியியல் சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது .. உலக புகழ் பெற்ற டைட்டன் கடிகார நிறுவனத்தில் பணிபுரியும் தோழர்  ஓசூர் ஒப்புரவாளன் அவர்களின் இல்லம் வரவழைத்து தேனீர் விருந்து அளித்து ..ஓசூரில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அழைத்து சென்று ஓசூர் நண்பர்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி .. உலக புகழ்பெற்ற Ashokleyoland -ல் பணிபுரியும் அதிகாரி செம்பருதி சந்தித்தது மிக்க மகிழ்ச்சி இவர்கள் உடுமலை பற்றியும் வரலாற்றை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் ..அடுத்த முறை வரும்பொழுது உடுமலை சுற்றி இருக்கும் வரலாற்று இடங்களை பார்வையிடவேண்டும் தனது வேண்டுகோள்களை வைத்தது மிக்க மகிழ்ச்சி .
  கேள்வி :  மார்வாடிகள் , குஜராத்திகள் இனத்தவர்கள் பின்பற்றும் நிதி மேலாண்மை பண்புகளில் நீங்கள் அறிந்தவை எவை என்று கூறமுடியுமா  ?    என் பதில் : எனக்கு தெரிந்து  கோவையில் வங்கிப்பணியில் இருக்கும்பொழுது என் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் உள்ளனர் . . வாடகை வீடுகளில் எதிர் வீடு பக்கத்து வீடு என பழக்கம் . பொதுவா நாம கொஞ்சம் பணம் வந்தாலே இடம் வாங்குவோம் அப்புறம் நகை நட்டு லாம் வைச்சி கடன் வாங்கி வீடு கட்டுவோம் நம்ம இப்படி தானே . ஆனா அவங்க பணத்தை வைச்சிட்டு நகை அடகு கொடுத்து பணம் சம்பாரிப்பாங்க திரும்ப திரும்ப அந்த பணம் பணத்தை சம்பாரிக்கும் அதிக வருடம் கழித்து தான் ஒரே இடத்துல கடை வீடு னு கட்டிப்பாங்க தூர ஊருக்கு போனாலும் முக்கிய இடத்துல இடம் வாங்குவாங்க . எல்லாத்துக்கும் கணக்கு இருக்கும் . கணக்குபதிவு இல்லாம ஒரு பிஸ்கட் ஐஸ்க்ரீம் கூட வாங்க மாட்டாங்க .  ஆனா விருந்தாளிகளை நல்லா கவனிப்பாங்க இன்னிக்கு அடகு கடைல இருந்து மாறி டெக்ஸ்டைல்ஸ் எலக்ட்ரிகல்ஸ் மாறினாலும் அவங்க ...