Posts

Showing posts from November, 2022

உலக புகழ்பெற்ற டெய்லர் பல்கலைக்கழகம் மலேசியாவில் நம் கம்பள சமுதாய பேராசிரியர் !!!

Image
உலக புகழ்பெற்ற டெய்லர்  பல்கலைக்கழகம் மலேசியாவில்  நம் கம்பள சமுதாய பேராசிரியர் !!! உலக புகழ் பெற்ற டெய்லர் பல்கலைக்கழகம் (பொதுவாக டெய்லர்ஸ் என குறிப்பிடப்படுகிறது) மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின் அடிப்படையில் மலேசியாவில் மலேசியாவின் முதன்மையான தனியார் பல்கலைக்கழகமாக இது பெரும்பாலும் கருதப்படுகிறது.  இது ஒரு கல்லூரியாக 1969 இல் நிறுவப்பட்டது, 2006 இல் பல்கலைக்கழக கல்லூரி அந்தஸ்து மற்றும் 2010 இல் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் டெய்லரின் கல்விக் குழுவில் உறுப்பினராக உள்ளது, இதில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் வியட்நாம், டெய்லர்ஸ் கல்லூரி, கார்டன் இன்டர்நேஷனல் பள்ளி, நெக்ஸஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஆஸ்திரேலியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் மலேசியா மற்றும் டெய்லர்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவை அடங்கும். ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் டெய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் நிறுவனத் துறை மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஆராய்ச்சி மூலம் உயர் பட்டங்களுக்கான மையம் (CHDR) - பள்ளிகளுடன் ...
  'தமிழக நடுகல் மரபு'கண்காட்சி- மதுரை திருமலை நாயக்கர் மஹால் உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்று வந்த நமது 'தமிழக நடுகல் மரபு'கண்காட்சி இன்றுடன் வெற்றிகரமாக முடிந்தது. நிறைவு விழாவில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும் மூத்த வரலாற்றாளருமான முனைவர் சொ.சாந்தலிங்கம் ஐயா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது ஆக்கமும் ஊக்கமும் தான் மதுரையில் இக்கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்த காரணமாக அமைந்தது. திருமலை நாயக்கர் மஹாலில் நடத்த அனுமதி அளித்து அதற்குறிய உட்கட்டமைப்பு வசதிகளை முன்னின்று செய்து தந்து உதவிய மாண்புமிகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அமைச்சர் பெருமகனார் திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் மற்றும் ஆணையர் (மு.கூ.பொ) முனைவர் இரா‌.சிவானந்தம் அவர்களுக்கும் எங்களின் நன்றியினை உரித்தாக்குகிறோம். சென்னையிலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் தற்போது மதுரையிலும் இக்கண்காட்சியினை எங்களுடன் இணைந்து நடத்திய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் திரு சுந்தர் கணேசன் அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை...

ஹேப்பி பர்த்டே கோவை..

  ஹேப்பி பர்த்டே கோவை.. அன்பு,பாசம்,மரியாதைக்கு பெயர் பெற்ற எங்க கோவை.. கோவையின் சிறப்பு.. எங்கூரு சிறுவாணித் தண்ணி கல்கண்டு மாதி இனிக்கும்..எவ்ளோ வெய்யில் பொளந்து கட்டினாலும்,எப்டியாச்சும் காத்து தழுவிட்டுப் போகும்..பத்து வயசு ஆளைனாலும்,ங்கப் போட்டு மரியாதையா கூப்பிடுறது எங்க சனத்தோட சிறப்பு..எங்க ஊரு காவல் தெய்வம் கோணியம்மன் தேர் மாசி மாசம் பெரிய திருவிழாவா நடக்கும்..இவகிட்ட என்ன கேட்டாலும் தருவா, ப்ரூக்பீல்ட்ஸ்,ஃபன் மால், ஃப்ரோசோன் மால்,பொழுது போக்குத்தளம் வந்தாரை வாழ வைக்கும் ஊரு எங்க ஊர்..வெள்ளந்தியான மக்கள்..யாருக்கு என்ன எந்த ஊர் நாட்டுல ப்ரச்னைனாலும் மொதல்ல நிக்குறது எங்க ஊரு சனம்..எங்க ஊரின் ஸ்பெஷல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,அன்னபூர்ணா,ஆனந்தாஸ் வயசுக்கேத்த மாதி யாராருந்தாலும்,ஆத்தா,அப்பா,அக்கா,அம்முச்சி,அப்புச்சி,தம்பி,அண்ணானு மொற வெச்சு கூப்பிடறது,ஆரு வூட்டுல நல்லது கெட்டதுனாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யறவங்க எங்க சனம்..நொம்ப கவலை சோர்வுன்னா,ரேஸ்கோர்ஸ் சாலைல பத்து நிமிசம் நடந்தா ரெக்க கட்டி பறக்கும் மனசு..பேரூர்,மருதமலை,ஈச்சனாரி,ஆனைக்கட்டி,சாரதாம்பாள் கோயில்,மகாலட்சுமி ...
  கேள்வி :  உங்களுடைய சம்பளத்தால் நீங்கள் அடைந்தது என்ன ?   என் பதில் : அது ஒரு கனாக்காலம் ஒரு கம்பெனியில் வேலை . காலை கீழே வைக்கவில்லை . எங்கே போனாலும் கேப் (cab). ரயிலா இரண்டாம் வகுப்பு ( ஏசி ) தான் . சீக்கிரம் போக வரணுமா புக் பண்ணு ஃப்ளைட் . வெளிய வந்தியா ? வீடு வரைக்கும் cab தான் . சம்பளம் ? ம்ம் அது முக்கால் சதம் . ராஜயோகம் தான் . மனைவியின் நிறுவனம் ..என்று  இது   6   வருட வாழ்க்கை . அப்புறம் ? ஆனா அன்னிக்கு தெரியாது . அடுத்து என்ன நடக்கும்னு . சனி பகவான் வந்தால் ஒரு ஏழரை வருடங்கள் தான் . ஆமாம் . சொர்க்கத்திற்கு பிறகு நரகம் தானே . ஒரு வருடம் அல்ல இரண்டு வருடங்கள் அல்ல . ஏழு வருடங்கள் . படாத பாடு படுத்திவிட்டார் . எந்த வேலையும் கிடைக்கவில்லை . கிடைத்த வேலை மூன்று மாதம் அ ஆறு மாதங்கள் . வீட்டில் வேறு பிரச்சினைகள் . சண்டை சச்சரவு எல்லாம் நடந்தது . வாழ்க்கையின் விளிம்பிற்கே வந்து விட்டேன் . எழுதக் கூட முடியாத வெவ்வேறு எண்ணங்கள் . நிற்க . இதற்கு பிறகு நல்லதே நட...
  குடும்ப ஆதிக்கத்தால் குலைந்து போன நாயக்கர் ஆட்சி ! - பொ . வேல்சாமி   சோழ ராச்சியத்தை ஆண்ட நாயக்கர் ஆட்சி ஒரே இரவில் கவிழ்ந்து , மராட்டியர் கைவசம் போன   வரலாறு இன்றைக்கும் ஒரு படிப்பினை தான் ! திறமையாளர்களையும் , விசுவாசமானவர் களையும் புறக்கணித்து , வாரிசுகளை பட்டத்துக்கு கொண்டு வந்ததால் , தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியை இழந்தது கவனத்திற்குரியது ! தென்னிந்தியாவை ஆண்ட நாயக்கர் அரசர்களுக்குள் ஒற்றுமையின்றி பல போர்கள் நடைபெற்று இவர்களுடைய பலம் குறைந்து கொண்டே வந்துள்ளதாகப் பல நிகழ்வுகளை நாயக்கர் வரலாறுகளில் பார்க்க முடிகின்றது . அப்படியான நிகழ்வுகளில் நாயக்கர் அரசுகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கிய நிகழ்வாக ஒருநிகழ்ச்சி 1675 இல்நடைபெறுகின்றது . மதுரை நாயக்கர் அரசுக்கும் , தஞ்சைநாயக்கர் அரசுக்கும் தொடர்ந்து பல புகைச்சல்கள் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் சிலபல போர்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்புகள் உள்ளன . அப்படி நிகழ்ந்த போர்கள் சிலவற்றில் மதுரை நாயக்கரும் வேறு சிலவற்றில் தஞ்சை நாயக்கரும் வெற்றி...