உடுமலை வரலாறு is feeling grateful with Kumararaja Thirumurthi · உடுமலை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா🥰😍🌦️🌨️💦🌱🌳🌴🐘 உடுமலை மற்றும் சுற்று வட்டார மக்களின் பண்பாட்டு விழாவாகக் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனால் ஒவ்வொரு திருத்தேரோட்ட நிகழ்வும் இப்பொழுது போன்று இல்லாமல் மூன்று நாட்களுக்கு மரத்தாலான திருத்தேரை மக்களே இழுத்துச்செல்வர். முதல் நாளில் தளிசாலையில் வடக்கு குட்டை வீதி வரையிலும், இரண்டாவது நாளில் தலைகொண்டம்மன் கோயில் வரையிலும் மூன்றாவது இறுதி நாளில் திருத்தேர் நிலைக்கு வரும். ஒவ்வொரு நாளும் தேருக்கு முன்பாக வேடபரி எனும் அப்போதைய தொப்பை மந்தை பாளையத்துக்காரர் வெள்ளைக்குதிரையில் அமர்ந்து உலா வருவார். அவருக்குப் பிறகே தேரை வடம்பிடித்து மக்கள் இழுத்து வருவர். இந்தத் தேர்த்திருவிழாவின் போதுதான் பெரும்பாலான மக்கள் இங்கு திருவிழாவுக்கு வந்த பிறகு ஏப்ரல் 12 , 1801 ...
Posts
Showing posts from March, 2023
- Get link
- X
- Other Apps
இளம் வயது முதலே பழக்கம், பின்னாளில் அவளையே மணந்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகும் வாடா போடா என்று அழைக்கிறாள், இது சரியா? இந்த கேள்விக்கும், எனக்கும் பெரிய தொடர்பு உண்டு. அதனால் இந்த பதில்…. நானும் என்னுடைய கணவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். என்னை விட அவருக்கு 4 வயது அதிகம். அப்படி இருந்தாலும் நான் அவரை பெயர் சொல்லி, வாடா போடா என்றெல்லாம் தான் அழப்பேன் காதலிக்கும் வரையில். எப்போது அவர் என்னிடம் காதலை சொன்னாரோ, அன்றிலிருந்தே அவர் என்னை மரியாதையாக அழைக்கத் தொடங்கி விட்டார். ஆனால் என்னால் அப்படி மரியாதை கொடுத்து பேச முடியவில்லை. (பழக்க தோஷம்) திருமணத்திற்கு பிறகு கட்டாயமாக மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். அப்படி மரியாதை கொடுத்து பேசும் போது, வேறு யாரோ ஒருவருடன் பேசுவது போன்ற உணர்வு, ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவர் எனக்கு கொடுத்த மரியாதை, என்னை மாற்றிக் கொள்ள உதவியது. இத்தனை வருடங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையோடு தான் அழைப்போம். (வாங்க, போங்க, இருங்க… இப்படி) இதையும் தாண்டி, இரண்டு சந்தர்ப்பங்களில் இருவருக்கிடையிலும் மரியாதைக்கு இடமே இருக்காது. (சொல்லுடா, பேசு...
- Get link
- X
- Other Apps
கேள்வி : வாழ்க்கையில் செட்டில் ஆவது என்றால் எந்த நிலை? என் பதில் : எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் டிரைவர் வேலை செய்து வந்தார் , அப்பா இல்லை , சொந்த வீடு , நிலம் , வங்கி சேமிப்பு இப்படி எதுவும் கிடையாது , சிறுவீட்டில் வாடகைக்கு தாய் தம்பியுடன் வசித்து வந்தார் , இடையில் அவர் தாய் தவறி விட்டார் தினம் ஹோட்டல் , அப்போது என்னிடம் சொன்னார் நான் கல்யாணம் செய்து வாழ்வில் செட்டில் ஆகப்போகிறேன் என்று , அவருக்கு வயது அப்போது 23 தான் , நான் சொன்னேன் உன்னிடம் இப்போது துளியும் பணம் இல்லை , வீடு வாடகை கொடுக்க வேண்டும் , வங்கியில் சேமிப்பும் கிடையாது , பெற்றோர் சொத்து எதுவுமே இல்லை , ஒரு மூன்று வருடம் போகட்டும் அதற்குள் கொஞ்சம் காசு சேமித்துவிடு , தனியாரிடம் டிரைவர் வேலை , ஒரு இரண்டு மாதம் உனக்கு வேலை இல்லையென்றாலும் மிகவும் சிரமப்படுவாய் , மனைவி பிறகு பிள்ளகை என்று ஆகும் அவர்கள் படிப்பு செலவு இப்படி பல செலவுகள் வரும் சமாளிக்க கஷ்டபடுவாய் என்று எவ்வளவோ சொல்லியும் திருமணம் உடனே செய்தார் , பிறகு கொஞ்ச மாதத்தில் வேலை போனது , மூன்று நான்கு மாதம் வேலை கிடைக்கவில்லை , பிள்ளைகளும் பிற...
- Get link
- X
- Other Apps
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை... வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (ஹெச்.எஃப்.சி.) போன்றவற்றிடம் இருந்து வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அவை விதித்திருக்கும் அதிகமான வட்டி விகிதத்தைப் பார்த்து வெறுத்துவிடுவார்கள். இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியை கொடுக்க முன் வந்தால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனை குறைந்த வட்டியை விதிக்கும் வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற நினைக்கின்றனர். அதன் மூலம் தாங்கள் செலுத்தும் வட்டி குறையும் என்று நம்புகின்றனர். வீட்டுக் கடனை மாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: 1. தற்போது இருக்கும் வீட்டுக் கடனில் நீங்கள் பெற்றுவரும் அனுகூலங்கள் 2. தற்போதைய வங்கியில் வேறு கடனுக்கு மாறுதல் 3. வேறு புதிய நிறுவனத்தில் கடன் வாங்கி இருக்கும் கடனை அடைத்தல் 4. இருக்கும் கடனை மாற்றும் போது கட்டணம் செலுத்த வேண்டுமா என்று பார்த்தல் புதிய வங்கி அல்லது தனியார் நிறுவனத்தில் மாற்றுவதற்கு முன் சரிபார்க்க வேண்டியவை 1. வ...
- Get link
- X
- Other Apps
என் கேள்வி : சாதாரணமானவர் என்று நினைத்த ஆனால் உண்மையில் சக்தி வாய்ந்த மற்றும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா ? என் வெளிநாட்டுவாழ் நண்பர் நிதிமேலாண்மை ஆலோசகராக உள்ளார் .அவரின் பதில் :.. மாலத்தீவில் ஒரு ரிஸாட்டில் Financial Controller ஆக வேலைக்கு சேர்ந்த நேரம் . அது ஒரு பெரிய குரூப் . நான் அந்த குரூப்பிற்கு உள்ள நான்கு ரிஸாட்டிலேயும் சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும் . பிறகு ஆறு மாதம் கழித்து என்னை சீசெல்ஸ் அனுப்பி விடுவார்கள் . இதுதான் எனது கான்ராக்ட் . நான் போன அன்று ஒருவரை சந்தித்தேன் . கருப்பாக 5.3 அடி உயரத்தில் சாதாரண முழுக்கை சட்டை சாதாரண பேன்ட் போட்டு இன்சர்ட் செய்திருந்தார் . சிகரெட் அடிக்கடி பிடித்தபடி இருந்தார் . என்னை பார்த்து சிரித்து கைகுலிக்கி அப்படியே ரிஸாட்டை சுற்றி நடந்து என்னை பற்றி கேட்டு கொண்டே வந்தார் . என்னோடு இரண்டு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்தார் . இருவரும் உணவு ஒன்றாக உண்டோம் . டிரின்க்ஸ் ஆர்டர் செய்தார் . நாங்கள் நடந...
கேள்வி : உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத உங்கள் பெற்றோரின் பொன்னான வார்த்தைகள் என்ன?
- Get link
- X
- Other Apps
கேள்வி : உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத உங்கள் பெற்றோரின் பொன்னான வார்த்தைகள் என்ன ? என் பதில் : என் அப்பா அடிக்கடி சொல்வது .... சாமி …. நாம தனியா தான் வந்தோம் தனியா தான் போக போறோம் அதனால எங்காவது தனியா போக வேண்டிய சூழ்நிலை வந்தால் பயப்படாம போகணும் ... நாலு நல்ல விசயம் தெரிஞ்சுக்க வேணும்னா நமக்கு நாலு ஜனங்க கூட வேணும் …. விட்டு கொடுத்து போறனால நாம ஒன்னும் கெட்டு போயிட மாட்டோம் .... கடன் இல்லாம நாம சாப்பிடற சாப்பாடு தான் நம்ம உடம்புல ஒட்டும் ... நிறைய இடத்துக்கு போனால் தான் ... நிறைய விசயங்களை தெரிஞ்சுக்க முடியும் …. நம்ம பக்கத்துக்கு வீட்டு காரங்க தான் நம்ம முதலுதவி பெட்டி ... உறவினர்கள் எல்லாம் அப்புறம் தான் …. காச பாத்து யாரு கிட்டயும் பழகாதே , நல்ல மனசு இருந்தா போதும் .… இப்படி தான் வாழ்ந்தும் காட்டினார் என் அப்பா …. என் அப்பாவே எனக்கு மிக சிறந்த முன் உதாரணம் ...