Posts

Showing posts from April, 2023

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் ,

 உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் ,முனைவர் மதியழகன் ,ஜே .கிருஷ்ணாபுரம்   அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ,முதுகலை பட்டதாரி ஆசிரியர் சே .ராபின் ,பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் வை .விஜயலக்ஷ்மி ,முனைவர் மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் முனைவர் ஹென்னா ஷெரிலி .வழக்கறிஞர் சத்யவாணி உடுமலை வீ .கே .சிவக்குமார்  உடுமலை அருட்செல்வம் .ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர் ..

கரை வழிநாட்டுக்கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை – சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு

Image
 கரை வழிநாட்டுக்கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை – சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு  கரை வழிநாட்டுக்கடத்தூர் பகுதியில்  முகாமையானதும்,  இன்றியமையானதுமாக இருந்த கல்வெட்டுகளில்  ஒன்று  சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு. இந்த கல்வெட்டு  வேளாண்மை  சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்வெட்டு.  இந்தக் கல்வெட்டு கடத்தூர்ப் பகுதியில் தென்பகுதியில் தற்போதிருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கும் அருகில்  கடத்தூரிலிருந்து தெற்கில்  திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் சாலையின் மேற்புறத்தில்  உள்ளது. சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது. இந்தக் கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு எனஅப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  சித்ரமேழி நாட்டாரும் சமயமும் : சித்ரமேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் த...

நன்றிகள் .... 🙏🙏🙏🌱🌱🌱🌷🌷 இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும்

Image
நன்றிகள் .... 🙏🙏🙏🌱🌱🌱🌷🌷 இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும் எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடிகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .🌷🌷பொருளாதாரம் 🌷🌷,வாழ்வியல்🌱🌱.சமுதாயம் 🌱🌱வரலாறு🤺🤺🏹🏹🐎 நிதியியல் ...,சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது .. 🙏என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷 🌷🌱📚📚📚✍️✍️✍️✍️..
Image
 இன்று நடைபெற்ற பில்லவநாயக்கன் சாலையூர் -எரிசனம்பட்டி .🥰🙏🚗🛵📗🖋️ T .ரவிக்குமார் -R .கவிதா ...அவர்களின் புதல்வி  செல்வி .R சுபா அவர்களின் ருது மங்கள விழா ஞாயிறு  காலையில் மண்டபவாசலில் கார்த்தி SR மாப்பிள்ளையை சந்தித்தது .. அதன் பிறகு திருமணமண்டபத்தில்  பொன்னலம்மன் சோலை அனந்தன்   அண்ணனை சந்தித்து பேசியது ..இன்றய 12 மணி நேர பணி குறித்து தொழிலாளர் நலன் குறித்து சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார் . மாமா வணிகவரித்துறை யில் பணியாற்றும் சாமிக்குணம் மாமா அவர்கள் இன்றைய நமது சமுதாய சொந்தங்களின் கல்வி .பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு பற்றி விரிவாக எதிர்கால திட்டங்களை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி .. வெள்ளியம்பாளையம் அக்கா செல்வராணி நமது சில்லவார் வரலாறு குறித்து தகவல்கள் வேண்டும் ..கோவில் வரலாறுக்கு தேவைப்படுவதாக என்னிடம் தெரிவித்தார் .அதற்க்கு ஆவண செய்வதாக தெரிவித்து உள்ளேன் .. விளாமரத்துப்பட்டி தாமு அண்ணன் மின்சாரவாரியத்தில் புதிதாக வரவிருக்கும் மீட்டர் தகவல்களை பகிர்ந்துகொண்டார்   காலை உணவு அருமையாகவும் சுவையாகவும் இருந்தது ..நன்றிகள் .பல . வந்திருந்த புது ம...

பன்னீர் கொய்யா ..உடுமலைப்பேட்டை

Image
 பன்னீர் கொய்யா ..உடுமலைப்பேட்டை  இன்று ஈகை திருநாளுக்கு மதிப்புமிக்க நண்பர் பா .அக மது அவர்களின்  இல்லத்திற்கு சென்றேன் ..மதியம் விருந்து விருந்தோம்பல் முடித்துவிட்டு ,அவரின் இல்லத்தில் இருக்கும் சிறு அழகான தோட்டத்தை சுற்றி காண்பித்தார் ..அருமையான நிழல் தரும் மரங்கள் வெயிலின் தாக்கம் ஒரு சிறு அளவுகூட இல்லை ..அந்தளவுக்கு வீட்டை சுற்றி ..பழமரங்கள் நிழல் தரும் மரங்கள் ,செடிகளாக அழகாக இருந்தது ...அதில் பன்னீர் கொய்யா மற்றும் இன்று தான் மரத்தையும் பழங்களையும் பார்த்து மகிழ்ச்சி .. பன்னீர் கொய்யா  சாதாரண கொய்யப் பழத்தைவிட தோல்பகுதி வழவழப்பாக இருக்கும். பழத்தின் உட்பகுதியில் ஒரு விதை மட்டுமே இருக்கும். அதை கீழே அகற்றிவிட்டு, பழத்தை தோலோடு சாப்பிடலாம். அதிக ருசி கொண்டது என்பதால், அணில், சிங்கவால் குரங்கு, மைனா, காகம், மரக்கொத்திப் பறவை உள்ளிட்ட விலங்கு, பறவைகள் இதனை விரும்பி சாப்பிடும் ..நண்பர்கள் ,சொந்தங்கள் யாரும் வந்தாலும் பன்னீர் கொய்யா கொடுத்து மகிழ்வார் ..இன்றைய ஈகை திருநாள் அருமையான திருநாள் .வாழ்த்துக்களும் ..நன்றிகளும்  என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -994...
 பில்லவநாயக்கன் சாலையூர் -எரிசனம்பட்டி . T .ரவிக்குமார் -R .கவிதா ...அவர்களின் புதல்வி  செல்வி .R சுபா அவர்களின் ருது மங்கள விழா இடம் :தேவனூர்புதூர்   குலவிளக்கம்மன் திருமணமண்டபத்தில் -ஆனைமலை ரோடு . நேரம் : காலை 7.35 முதல் 9.00மணிவரை  நாள் :23.04.2023...ஞாயிறு ..

கம்பள சமுதாயத்தில் புதிய பதவி ...

Image
கம்பள சமுதாயத்தில் புதிய பதவி ...  ம.தி.மு.க மாவட்ட துணை செயலராக புதிதாக  பதவி ஏற்றிருக்கும் பழைய காளாஞ்சிபட்டியை சேர்ந்த முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர். R.செந்தில்குமார்  அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் கொடையாணி பொம்மு அன்னாருக்கு வாழ்த்துக்கள் .. என்றும் அன்புடன் வாழ்த்துக்கள் உடுமலை சிவக்குமார் 
  கேள்வி :  நான் புதிதாக வீடு கட்டி உள்ளேன் . அதற்கு தற்போது டைல்ஸ் ஒட்ட வேண்டும் . கிளாஸ்டு வெற்றிபைடு டைல்ஸ் நல்லதா ? டபுள் சார்ஜ் வெற்றிபைடு டைல்ஸ் நல்லதா ? கிளாஸ்டு வெற்றிபைடு டைல்ஸ் பயன்படுத்தினால் நாளடைவில் முழங்கால் வலி வர வாய்ப்புள்ளதா ?    என் பதில் : முழங்கால் வலிக்கும் தரைதளத்திற்கும் சம்பந்தமே இல்லை . ஒரு சிலர் சொல்லுவதை உண்மை என்று நினைத்துக்கொள்ளுகிறோம் . எந்த தரை என்றாலும் , கால் தரையில் பட்டு தான் ஆகவேண்டும் . 01. முன்பு மொசைக் தரை தான் இருந்தது . 02. பிறகு டைல்ஸ் பதிக்கத்தொடங்கினார்கள் 03. தற்போது டைல்ஸ் அல்லது மார்பிள் அல்லது கிரானைட் பதிக்கிறார்கள் . டைல்ஸ்  - விதவிதமான மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன . நமக்கு பிடித்தமான நிறத்தில் தேர்வு செய்துகொள்ளலாம் . கடினமான பொருட்கள் விழுந்தால் , இவை தாங்கும் சக்தி உள்ளதா - மற்றும் எளிதில் உடையாததா என்று பார்த்துக்கொள்ளவேண்டும் . செயற்கையாக தயாரிக்கப்டுவதால் , சேர்க்கப்படும் பொருட்களுக்கு தகுந்தவாறு , எதிர்மறை செயல்கள்...