பெரும் சம்பளம் இருந்தும் மக்கள் ஏன் ஐடியில் இருந்து வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்?
பெரும் சம்பளம் இருந்தும் மக்கள் ஏன் ஐடியில் இருந்து வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்? கேள்வி கேட்டவர் "தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO), தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை (Chief HRD)' போன்றவர்களை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இவர்கள் தான் இப்போதெல்லாம் ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு பல கோடி ரூபாய் சம்பளத்திற்கு மாறுகிறார்கள். மற்றபடி Software Engineer, Tech Lead, PM, SPM, Consultant போன்றவர்கள் எவரும் அப்படி அதிகச் சம்பளத்தைத் தூக்கி போட்டு விட்டு பணியை விட்டு வெளியேறுவது கிடையாது. 40 மற்றும் 50 வயதிலும் AI கோர்ஸ் அது இது என்று பலரும் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டிருப்பது எதற்காக? வேலையைத் தூக்கி போட்டுவிட்டு போவதற்கா? இருக்கின்ற வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான். பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் ஒரு கட்டத்திற்கு மேல், IT பணியை உதறிவிட்டு அவர்களுக்குப் பிடித்தமான துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்வார்களே தவிர, மீதம் இருக்கும் 90% சதவிகிதம் பேர் '...