கன்னி நாய்கள்......Siva Siddhu R * இந்து தமிழ் திசை இதழில் 2017 ஆண்டு வெளியான என் கட்டுரை படம் : 2015 ல் ( நானும் - தங்கமணியும் )
கன்னி நாய்கள் காற்றைக் கிழித்துச் செல்லும் அதிவேக ஒட்டம், இந்த நாய் இ னத்தைப் முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு பெரும் வியப்பைத் தரும் - இதுதான் கன்னி என வழங்கப்படும் நம் நாட்டு நாய் இனத்தின் தனித்தன்மை. நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன்தான் கன்னி நானுடைய தோற்றம் அமைந்திருக்கும். மேற்கூறிய தோற்றத்துடன் வேட்டை நாய் கருப்பு நிறத்தில் வந்தால் கன்னி என்றும் அதே தோற்றத்துடன் வேறு நிறத்தில் இருந்தால் அது ‘சிப்பிப்பாறை’ என்றும் முன்பு கூறப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு நிறம் கொண்டவையும் ஒரே வகைதான், நிறம் மட்டுமே மாறுபடுகிறது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ரெண்டு பெயர் மட்டும் அல்லாது இவற்றுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன: உதாரணமாக பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய்... விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்த...