ஆடி 18 நோம்பி 😍"தேங்காய் சுடும்" பண்டிகை🥥.🥰📗🖋️📡🌈🥥🥥
ஆடி 18 நோம்பி 😍"தேங்காய் சுடும்" பண்டிகை🥥.🥰📗🖋️📡🌈🥥🥥
ஆடி மாதத்தில் வரும் பண்டிகை நான் சேலத்தில் வங்கி பணியில் இருக்கும்பொழுது சேலத்தில் நண்பர்கள் வீட்டில் கொண்டாடியது மலரும் நினைவுகளாக உள்ளது ..
ஆடிமாதப் பண்டிகைக்கு தென்னிந்தியா முழுமைக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் அரச விடுமுறை இருந்திருக்கின்றது. தென்னிந்திய மக்களால் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஆடிமாத முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைதான் இந்த "தேங்காய் சுடும்" பண்டிகை.
தேங்காய் சுடுதல் பண்டிகை சேலம் மாவட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் சேலத்தைச் சுற்றியுள்ள ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ம் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையின்போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனைப் பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பண்டிகையை தொன்மக்கதைகளின் பின்புலத்திலிருந்து விலக்கிப்பார்த்தால் இது உடல்நலம் சார்ந்த ஒரு பருவகால உணவுமுறை (Seasonal diet regimen) என்பதை நாம் உணரலாம். சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ளபடி, நாம் பருவகாலத்தின் அடிப்படையில் உணவு உட்கொள்வது வழக்கம். ஆடிமாதத்தில் ஏற்படும் பருவம் (season) மாற்றத்தினை எதிர்கொள்ள வேண்டியும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறைதான் இந்தத் தேங்காய் சுடுதல் பண்டிகை. இதே ஆடி மாதத்தில் தென்னிந்தியாவில் ஆங்காங்கே வாழும் பலதரபட்ட மக்கள் தங்களின் மூதாதையர்கள் வாயிலாக அறிந்து தெளிந்த சில பருவகால உணவு ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவதை இன்றளவும் நாம் காணலாம். தமிழ்நாட்டின் ஆடிக்கூழ், ஆடிக்கும்மாயம் போன்றவை. இவற்றைப் போன்ற ஒன்றுதான் சேலத்தின் தேங்காய் சுடும் பண்டிகையும்.
தேங்காய் சுடும் முறை:
புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதைத் தரையில் தேய்ப்பர்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தேய்க்கப்பட்டதும் அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருக்கும் தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும்.
பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றுவார்கள்.
முனை கூராக சீவப்பட்ட ஒரு நீண்ட அழிஞ்சிமர குச்சியில் அத்தேங்காயை சொருகுவார்கள்.
பின்னர், அக்குச்சியைச் சுற்றி மஞ்சளைப் பூசி துளையை மூடுவர். அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் மண் அடுப்பில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கம். சிலர் வீட்டில் சாமி படத்தின் முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிஇப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
துணுக்கு:
இதேபோன்று, கேரளாவில், விடலைப்பருவ இளநீரில் "அரிவகயாறு /അരിവകയാറ് = அரிசி வகைகள் ஆறு" (கேரள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி இட்டு இட்டிலிக்குண்டானில் 7 நாட்களுக்கு காலை ஒரு தீ, மாலை ஒரு தீ மற்றும் பிற நேரங்களில் அவற்றின் கனலில் நீராவியில் வேகவைப்பர். 4 வாரங்கள், காலை வெறும் வயிற்றில், நான்கு முறை இவ்வாறு செய்து உண்பர். இது கேரளாவின் secret recipe என்றும் சொல்வர். இது உடலின் 5 ராஜ உறுப்புகளுக்கு அதீத பலம் தரும் எனக்கூறப்படுகிறது. ஒருமுறை உண்டதன் பலன் எழுபது ஆண்டுகள்வரை இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681🥰📗🖋️📡🌴🌴🌴🥥🥥🥥🥰🤝🙏👍






Comments
Post a Comment