வேட்டை
தங்கள் விளைநிலங்களில் விதைத்த பயிர்களையும் விளைவித்த பயிர்களையும் காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றக் கோரும் போராட்டமாகும். பழங்காலத்தில் இதே காடுகளும், இதே மிருகங்களும் இருந்துகொண்டுதான் இருந்தன. இன்னமும் கூடச்சொல்லப்போனால் இப்போதுள்ள பயிர்களைவிட மிக சுவையான தீவனங்கள், மிருகங்களுக்குரிய தீவனங்கள் இந்தக்காடுகளில் விளைவிக்கப்பட்டு வந்தது. அப்போதுமட்டும் காட்டிலிருந்த மிருகங்கள் வந்து இந்த விதைகளையும் விளைபொருட்களையும் அழிக்காமலா இருந்தது? தற்போது மட்டும் ஏன் இந்தப் பயிர்கள் அழிவில் சிக்குகிறது. அப்போதைய விவசாயிகள் இந்த விளைநிலங்களை எப்படிக் காப்பாற்றினார்கள். தற்போது ஏன் அவர்களால் இயலவில்லை. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இதற்கு ஒரே காரணம். மத்திய மாநில அரசுகளின் தற்போதைய தவறான வனக்கொள்கையே ஆகும். அந்தக் காலத்தில் அதாவது 1960 க்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையோரங்களில் இருந்த கிராமங்களில் ராகி, சோளம், கம்பு போன்ற தானியப்பயிர்களும், தர்பூசணி (நீர்க்காய்) வெள்ளரிக்காய், போன்ற சுவையான தீவனப்பயிர்களும் மிக அதிகளவில் பயரிடப்பட்டு வந்தன. இந்த பயிர்களை உண்பதற்காக மலைப்ப...