உலக புகழ்பெற்ற டெய்லர் பல்கலைக்கழகம் மலேசியாவில் நம் கம்பள சமுதாய பேராசிரியர் !!!
உலக புகழ்பெற்ற டெய்லர் பல்கலைக்கழகம் மலேசியாவில்
நம் கம்பள சமுதாய பேராசிரியர் !!!
உலக புகழ் பெற்ற டெய்லர் பல்கலைக்கழகம் (பொதுவாக டெய்லர்ஸ் என குறிப்பிடப்படுகிறது) மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின் அடிப்படையில் மலேசியாவில் மலேசியாவின் முதன்மையான தனியார் பல்கலைக்கழகமாக இது பெரும்பாலும் கருதப்படுகிறது.
இது ஒரு கல்லூரியாக 1969 இல் நிறுவப்பட்டது, 2006 இல் பல்கலைக்கழக கல்லூரி அந்தஸ்து மற்றும் 2010 இல் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.
டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் டெய்லரின் கல்விக் குழுவில் உறுப்பினராக உள்ளது, இதில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் வியட்நாம், டெய்லர்ஸ் கல்லூரி, கார்டன் இன்டர்நேஷனல் பள்ளி, நெக்ஸஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஆஸ்திரேலியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் மலேசியா மற்றும் டெய்லர்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவை அடங்கும்.
ஆராய்ச்சி மற்றும் நிறுவனம்
டெய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் நிறுவனத் துறை மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஆராய்ச்சி மூலம் உயர் பட்டங்களுக்கான மையம் (CHDR) - பள்ளிகளுடன் முதுகலை ஆராய்ச்சி திட்டங்களை நிர்வகித்தல்; ஆராய்ச்சி மேலாண்மை மையம் (CRM) - மானிய விண்ணப்பங்களுக்கான தகவல் மற்றும் சேவைகளை வழங்குதல், மானியங்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு, ஆராய்ச்சி முன்னேற்றத்தை மதிப்பிடுதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆராய்ச்சி நோக்கங்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது; மற்றும் அறிவு பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கல் மையம் (KTC) - ஆராய்ச்சி கண்டுபிடிப்பிலிருந்து பொருட்களை வணிகமயமாக்க அறிவுசார் மூலதனத்தை மேம்படுத்துதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பெரியகோட்டையைச் சேர்ந்த குஜ்ஜபொம்மு குலச்செல்வன் டாக்டர் கார்த்திகேயன் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் .தற்பொழுது மலேசியாவில் உள்ள டெய்லர் பல்கலைகழகத்தில் தலைசிறந்த பல்கலைகழக பேராசிரியர்களுக்கு மத்தியில் IEEE Conference Paper யை present செய்து Best Paper Award யையும் வாங்கிவிட்டார். அயல்நாட்டில் நடக்கும் IEEE conference இல் Research Paper select (ஆராய்ச்சி கல்வி )ஆவதே மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் அந்த IEEE கட்டுரை யை எழுதவே ஆறு மாதம் தேவை படும்.
அதனால் NIT Calicut (Central Government) முழு செலவையும் செய்து இவரை அனுப்பி வைத்தது. ஆனால் இவர் அதை present செய்தது மட்டுமல்லாமல்
அங்கு வந்த ஆராய்ச்சி கட்டுரையில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரை (Best Paper Award) என Award யும் வாங்கிவிட்டார் இது மிகப்பெரிய விஷயம் ஆகும்.
இந்த மதிப்புமிக்க விருது ஆனது பல்வெறு நாட்டின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மத்தியில் இவருக்கு மட்டும் கிடைத்தது நம் சமுதாயத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். முது முனைவர் பட்டம் பெற்ற கார்த்திகேயன் அவர்களுக்கு கம்பள சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ..இது போன்று வளரும் சமுதாய இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் ..நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..














Comments
Post a Comment