உடுமலைப்பேட்டை என்றாலே வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ,பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற மண் .. ..உடுமலைப்பேட்டையில் பிறந்தவர்கள் என்றும் வரலாறு படைத்தவர்கள் ...எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் அறிவாற்றலால் ,உழைக்கும் திறமை ,சேவை மனப்பான்மை ,கொண்டவர்களே அதிகம் ..உடுமலையில் வளர்ச்சிக்கு என்றும் பங்காற்றுவது செய்தித்தாள்கள் ..அதுவும் மண்ணின் மனம் மாறாமல் ..வரலாறுகள் ,சிறப்புமிக்க கோவில்கள் .அரசுத்துறை ,தனியார் துறை ,விவசாயம் ,தொழில் துறை ,அரசியல் ,சமூக அக்கறை ,எந்த பாகுபாடும் இல்லாமல் ..நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் தினமலர் ...அதுவும் உடுமலைப்பேட்டை இணைப்பு பகுதியில் வரும் செய்திகள்,மற்ற செய்திகள் என்றாலும் உடுமலை மக்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல் அழகா செய்திகளை தொகுத்து வழங்கும் இனிய நண்பர் ....செந்தில்ராம் அவர்களுக்கு ..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று நமது பொள்ளாச்சி நிலப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கும் முன்பாக வசித்த, வாழ்ந்த மக்கள் கோவை மாவட்டம், பொள் ளாச்சி வட்டத்தில் கோவை செல்லும் பிரதான சாலையில் பொள்ளாச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆச்சிப்பட்டி பிரிவி லிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் குரும்பபாளையம் கிராமம் உள்ளது. இங்கு சங்க காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் ஒன்று கல் வட்டத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரும்பபாளையத்தில் கிடைத் துள்ள நெடுங்கல் 14 அடி உயரமும், அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நெடுங் கல்லுக்கு முன்பாக 20 அடிச் சுற்ற ளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல் வட்டமும் காணப்படுகிறது.. பெருங்கற்காலத்தில் தான் (கி.மு.1000 முதல் கி.பி. 100 வரை) மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெளியே சற்றுத் தொலைவில் தனி யாக வேளாண்மை மற்றும் குடியி ருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இறந்த வர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களைப் புதைப் பதற்குப் பெருங்கற்களைப் பயன் படுத்திக் கல்லறைகளை ஏற்படுத்தி யதால் இக்காலம் பெருங்கற்காலம...
Comments
Post a Comment