ஒரு தம்பியின் ஆதங்கமான பதிவு....

ஒரு தம்பியின் ஆதங்கமான பதிவு.... 


அதாவது நான் பொதுவெளியில ஒரு காரியம் செய்யறதுக்கு இறங்குறாங்க  அப்படின்னா ஒரு சம அளவு இடம் கொடுக்கணும் அப்பத்தான்  நம்ம அடுத்தது என்ன பண்ணனும் இதனுடைய நிறைகுறைகள் என்ன அப்படின்னு தெரிஞ்சிட்டு முன்னேற்றம் செய்ய முடியும் நான் சொல்றது தப்பா கூட இருக்கலாம் .பல சமுதாய அமைப்புகளில்   இளைஞர்களுக்கு  அதிக முக்கியத்துவம் தருவதில்லை  அதாவது ஒரு சிலர் வந்து என்ன  சொல்றதுன்னா அதாவது அவங்க எடுக்கிற முடிவுகள் அவங்க என்ன செய்யணும் நினைக்கிறார்களோ அது மட்டும் தான் செயல்படுத்துறாங்கன்னு எனக்கு தோணுது அது பல அமைப்புகள் வந்துருச்சுன்னா அரசியல் சார் பெற்ற சமுதாயத்திற்கு நம்ம சமுதாயத்திற்கு என்ன செய்யணும் அடுத்த லெவல் எப்படி கொண்டு போறது அதன் மூலமாக பாத்தீங்கன்னா சின்ன சின்ன செயல்பாடுகள் அதாவது இப்ப கவர்மெண்ட் கிட்ட இருந்து நிறைய சலுகைகள் வரும் அதை வந்து நம்ம மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது like DNT / DNC   சர்டிபிகேட் பத்தின விழிப்புணர்வு தருவது கேரியர்  கவுன்சிலிங் , என்ன படிக்கிறது எங்க படிக்கிறது அப்படிங்கற மாதிரி நிறைய விஷயங்களை பத்தி பேசிக்கிட்டே இருக்கணும் அப்பதான் பார்த்தீங்கன்னா நெக்ஸ்ட் ஜெனரேஷன்க்கு எதனா யூஸ்புல்லா இருக்கும்

அதாவது நான் சிம்பிளா சொல்லப்போனா நான் என்னோடது என்னால அப்படிங்கறத தாண்டி நமக்கு நம்மளால நம்ம சந்ததிகளுக்கு அப்படின்னு எப்ப மாறுதோ அப்பதான் மாற்றம் கிடைக்கும். 

எனக்கு தெரிஞ்சு இனிமேல் எல்லாம் பார்த்தீங்கன்னா ஒன்று சேர்ப்பது என்பது சிரமம் தான் ஒவ்வொருத்தரும் இயக்கங்கள் ஆரம்பித்து வெளியே போயிட்டே இருப்பாங்க அதாவது ஆர்கியூமென்ட் என்பது நல்ல விஷயம் தான் ஆனா அதுல வர்ற கசப்பான  சம்பவங்களுக்கு அன்றைக்கேவோ அல்லது குறுகிய காலத்தில பேசி முடிவெடுத்து அதை அன்றோடு விட்றணும் அதைவே மீண்டும் மீண்டும் பேசு அன்னைக்கு இப்படி சொன்ன அன்னைக்கு இப்படி பண்ணுனாங்க அப்படின்னு சொல்லி பேசறது வந்து வெளியில் இருந்து எதனால் பண்ணனும் நினைக்கிறவங்க கூட பாத்தீங்கனா எதுக்கு போயிட்டு இதெல்லாம் செஞ்சிட்டு அடிக்கிற மாதிரி தோன்ற வைத்துவிடும்


அதாவது அண்ணா இங்க யாருமே ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பற்றி பேசறது ரொம்ப குறைவா இருக்கு சமுதாயத்தை எப்படி வளர்த்தறது இப்ப வர்ற தலைமுறைகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது அப்படிங்கற பேச்சை எல்லாம் இல்லை எப்போ எனக்கு அவர் பிடிக்கலைன்னா அவர பத்தி நான் என்ன பேசணும் அதுதான் யோசனையா இருக்கும் எனக்கு புடிக்கலைன்னா எனக்கு பின்னாடி இருக்கிறவங்களுக்கும் பிடிக்க கூடாது இப்படி யோசிச்சா எப்படி ஆக்கபூர்வமான சிந்தனைகள் வரும் அடுத்த கட்ட நகர்வுக்கு எப்படி போகும். 


மாதாந்திர கூட்டம் போடுறாங்க இல்லாட்டி முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிகழ்வுகளுக்கு மீட்டிங் போடுறாங்க அங்கே என்ன பேசுறாங்க போறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அது போல அழைப்பும் பார்த்திங்கனா முக்கியமான வங்களுக்கு மட்டும் தான் கூப்பிட்டு சொல்லிக்கிறாங்க மத்தவங்களுக்கு அப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது தெரியாது என்ன பேசினார்கள் என்று தெரியாது. 


ஒரு சமுதாய அமைப்பு அப்படின்னு ஒன்னு இருந்துச்சுன்னா அங்க பேச வேண்டிய விஷயங்கள் இப்ப நாம எந்த நிலைமையில் இருக்கிறோம் அடுத்தது என்ன பண்ணனும் இல்லாட்டி இதற்கு முன்னாடி ஒரு விஷயம் பண்ணி இருப்போம் அதில் எப்படி தவறு நடந்திருச்சு அதை வந்து திருத்துறைக்கு இது வந்து ஒரு மாற்றம் செய்யலாம் இல்லாட்டி உங்ககிட்ட தெரிஞ்ச கருத்துக்களை சொல்லுங்க இப்படித்தான் பேசி கொண்டு போயி ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும் அப்பத்தான் ஓ பரவால்ல ஆமா சரியான திசையில் தான் போயிட்டு இருக்கோம் அப்படிங்கற ஒரு நம்பிக்கை வரும் அதன் மூலம் பாத்தீங்கன்னா யாரோ ஒருத்தருக்கு ஒரு உபயோகமா இருந்திருக்கும்.

ஒன்னும் இல்ல இப்ப சொல்லப்போனா பாத்தீங்கன்னா ரேஷன் கடைக்கு ஆள் எடுக்குறாங்க கட்டுனார் அதுக்கப்புறம் பில்லிங் இருக்கலாம் 10 & 12 கிளாஸ் படிச்சிருந்தா போதும் சொல்றாங்க இப்போ இந்த மாதிரி ஒரு நல்ல ஒரு அமைப்பா இருந்தனா ஒரு மீட்டிங்கு கூப்பிட்டு நீங்க அப்ளை பண்ணுங்க இதுக்கு ஒரு ரிகர்சல் ட்ரைனிங் தருகிறோம் முயற்சி பண்ணுங்க எங்களுக்கு தெரிஞ்ச அபிஷியல்ஸ் இருக்காங்க இல்ல கட்சிக்காரன் இருக்காங்க நீங்க போய் சேருங்க அப்படின்னு சொல்லி ஒரு உதாரணமாக இருக்கணும் அதெல்லாம் இங்க நடக்கிறது இல்லையே

இந்த மாதிரி விஷயத்தை நானும் நீங்களும் சொல்லும்போது யாரும் கேட்க மாட்டாங்க அதுவே ஒரு அமைப்பு வந்து சொல்லும்போது கண்டிப்பாக செவிமடுத்து கேப்பாங்க பரவாயில்ல இவங்க நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க அப்படின்னு சொல்லிட்டு இன்னொன்னு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறவங்க ஐடியாவை கேட்டு அத வந்து கீழ கொண்டு வந்து சேர்த்தனும் அதை யாரும் பண்றது இல்ல .


அதைத்தான் நான் சொல்றேன் இப்போ ஒருத்தர் ரெண்டு பேர் சொன்னா அவங்க கேக்குறதுக்கு  கிடையாது ஒரு சமுதாய அமைப்பு வந்து நான் உங்களுக்கு பின்னாடி இருக்கிற நீங்க பண்ணுங்க அப்படின்னு சொல்லி தூக்கி விடும்போது இன்னும் நம்பிக்கை அதிகமா இருக்கும் அதான் சொல்றேன் நீங்க யாருக்கு காசு பணமோ பைனான்சியல் சப்போட்டா பண்ண வேண்டாம் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து விடுங்க இன்னொன்னு நீங்க எவ்வளவுதான் காசு கொடுத்தீங்கன்னாலும் அது தீர்ந்து போச்சுன்னா மறுபடியும் கையை நீட்டுவாங்க ஆனா அதுவே அவனுக்கு யோசிக்க கூடிய திறமை உண்டு பண்ணி விட்டுட்டோம்னா அந்த யோசனை வச்சு மறுபடியும் அடுத்த லெவல் போகணும்னு நினைப்பா ஆனா அதை விட்டு கீழே இறங்கி வர மாட்டான்


அதுக்குத்தான் ஒரு அழகான ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஒருத்தனுக்கு நீ மீன் பிடிச்சு கொடுக்கறதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு"


அதைத்தான் பண்ணனும் நீ எனக்கு தெரிஞ்சு அதாவது இது மிக சொற்பமாக தான் நடக்குது .

இதே விஷயத்தை வந்து நான் எங்க ஊரு பசங்க கிட்ட நிறைய பேரு கிட்ட சொல்றேன் இவன் பெரியவங்க கிட்ட கூட சொல்றேன் யாரு அதை கேக்குற மாதிரி இல்ல ஏன்னா இவன் எல்லாம் சொல்றதான் நாம கேட்கிறதா அந்த மாதிரி ஒரு தாட்ஸ் இருக்கும் 


என இதெல்லாம் நான் அனுபவப்பட்டு இருக்கேன் எனக்கு நடந்தது என்ன பின்னாடி சந்ததிக்கும் என் சமூகத்துக்கும் நடக்க கூடாது நான் நினைக்கிறேன் 


எங்க மாமா   மத்திய அரசாங்கத்தில்  நல்ல போஸ்டிங் ல இருந்தாரு சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப் ஆனா அவர்கூட எங்களுக்கு ஒரு கேரியர் கைட்னஸ் தரல இல்ல நீ டென்த்துல பிளஸ் 2வில் இப்படி எல்லாம் படிக்கலாம் அப்படிங்கற ஒரு ஐடியா கூட சொல்லித் தரல .


ஆனா அவர் பேசும்போது அவர் படிக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் இந்த நிலைமைக்கு நான் வர   ஹாஸ்டல் எல்லாம் போய் ஸ்டே பண்ணி படிச்சேன் அப்படின்னார். ஆனால் அவர் நினைத்திருந்தார்னா அவர் பட்ட கஷ்டத்தை வந்து அவங்க அக்கா பசங்கள ஒரு தங்கச்சி பசங்களும் தம்பி பசங்களும் பட்டிருக்கக் கூடாதுன்னு நினைச்சு இருக்கணும் அது தோணல இது மாதிரி தானா இருக்க நம்மளோட சமூகம். இதையெல்லாம் மாத்தணும் மாத்தணும்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் புரிய வைக்கணும் ஆனா இப்ப இருக்கற ஜெனரேஷன் ரொம்ப அழிச்சிட்டு வருது அப்பா உன் ஆத்தா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு பையன் கேட்த எல்லாம் செஞ்சு கொடுத்தாராங்க ஆனா அந்த பசங்களுக்கு வந்து கஷ்டமே தெரியவில்லை ஆனா இன்னும் நாம் ஆண்ட பரம்பரை ஆண்டு கொண்டு இருந்த பரம்பரை கோட்டை கட்டுன பரம்பரை எல்லாம் பேசிட்டு இருக்குறோம் ஆக்கபூர்வமான சகல ஒரு ரிசல்ட்டையும் காணோம்

என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒரே ஒரு ஆதங்கம் எனக்கு ஒரு விஷயம் தெரியல அது வந்து நான் மத்தவங்கள சொல்லல அப்படிங்கறது வேற எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கு அந்த விஷயத்தால நாலு பேருக்கு பிரயோஜனமாகும் அப்படின்னு தெரிஞ்சு அதை நாம் சொல்லாமல் விட்டோம் என்றால் அதோட மகா மட்டமான செயல் ஒன்றுமே கிடையாது அதைத்தான் அண்ணா நிறைய பேர் பண்றாங்க 


எனக்கு கிடைக்காத ஒரு விஷயம் வந்து வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது அதான் இங்க நிறையா நடந்துட்டு இருக்கு ஆனா அது மாறனும் இந்த விஷயம் எனக்கு கிடைக்கல அப்ப எனக்கு தெரியல இன்னைக்கு எனக்கு தெரிஞ்சிருக்கு அந்த கிடைக்காத ஒன்று என் சமூகத்துக்கு கிடைக்கணும் இந்த எண்ணம் தான் எல்லாத்துக்கும் வரணும் அப்படிங்கிறது தான் என் ஆசை


இந்த உலகம் என்பது எனக்கும் என் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்த ஜாதியைச் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமே கிடையாது எல்லாத்துக்கும் பொதுவான ஒன்று ஆனால் யாருக்கும் எவருக்கும் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அதில் இருக்கும் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளவும் உபயோகித்துக் கொள்ளவும் மட்டுமே எனக்கு உரிமை உண்டு.

தம்பியின் ஆதங்கமான பதிவு ......மாற்றுவோம் ..மாறுவோம் ...அடுத்த கட்ட பயணத்தை நோக்கி ....




Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰