கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார் ? அவர்களின் வரலாறு என்ன ? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர் / தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம் . இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம் , ( கர்நாடகா இல்லை ) ( மெட்ராஸ் , ஆற்காடு , கடலோர ஆந்திரா , கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர் , கோலார் , தென் ஒரிஸ்ஸா , பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும் , மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது . மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது . ஏலம் எடுத்த கான் சாஹிப் , தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம் " கிஸ்தி " வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர் . மீதத்தை தாம் எடுத்து கொண்டனர் . அவர்கள் வரியை வச...
Comments
Post a Comment