KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) 5-10-2015-24

 KVE  வாட்ஸஅப் குழு  KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) வாட்ஸஅப்ப் குழு ...சொந்தமே .

 KVE ..(கீர்த்தி வீரர் எத்தலப்பர் ).உடுமலைப்பேட்டை வாட்ஸஅப்ப் குழு ஆரம்பித்து 5 -10-2015.அன்று .சிறு குழுவாக ஆரம்பித்து இன்று இன்று உலகம் முழுவதும் கம்பள சொந்தங்களை ஒரே ஒற்றை புள்ளியில் ஒன்றிணைத்து கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு அனைத்து தகவல்களையும் கொண்டு செல்ல காரணமாக இருக்கும் 

எங்கள் குஜ்ஜபொம்மு குலச்செல்வி திருமதி பிரேமா செல்வம் பாப்பாவிற்கு 

..KVE குழுவின் சார்பில் எங்கள் இனிய  வாழ்த்துக்கள் 


தளி எத்தலப்பர் ...வரலாறை உலகெங்கும் பரவசெய்பவர் ..முனைவர் மஞ்சுளா தேவி -உடுமலைப்பேட்டை 

.வாட்ஸப் குழு ..வார்தை விளையாட்டுக்கு அல்லாமல் ..வாழ்க்கைக்கும் பயன்படட்டும் ...என்று தான் 05.10.2015...அன்று ஆரம்பித்தது ...கம்பளத்து பெண்குழந்தை மூலம் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழு ..தொடரும் கம்பளத்து சொந்தங்கள் ..பந்தங்கள் ...தொடரும் பயணம் ...10 -வது  வருடமாக .....

KVE.....கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 


சதீஷ்குமார் -தனியார் நிறுவனம் ..PN சாலையூர் ,உடுமலைப்பேட்டை 

நமது இனத்தை சேர்ந்தவரான கரப்பாடி பூபாலம் முருகசே பாண்டியன் அவர்கள் ஆல் இந்திய ரேடியோவில் பல நிகழ்சிகளில் கலந்துகொண்டு பேசியுள்ளாராமே .  நாம் அதுபோல்  இந்த வாட்ஸ்அப் குழுவில் தினந்தோரும் ஏதேனும்  பயனுல்ல தகவல்கள் பற்றி பேசி பதிவிடலாமே...தலைப்பு "சிறு மாற்றம்  சமுதாய முன்னேற்றம்"

ஜெயராமன் தங்கவேல் -வங்கி அதிகாரி -உடுமலைப்பேட்டை 

இன்றைய கால கட்டங்களில் ஒரு‌ whatsapp குழு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது..


அரசு துறை அலுவலக வாட்ஸ்அப் குழுக்கள் தனியார் துறை வாட்ஸ்அப் குழுக்கள் 

குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள் கோயில் வாட்ஸ்அப் குழுக்கள் 

அரசியல் வாட்ஸ்அப் குழுக்கள் 

என‌ நிறைய உண்டு 

அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு அந்த செய்திகளை பதிவு செய்கிறார்கள் 

அதை தெரிந்துகொள்ள ஏதுவாக...


இப்போது நமது KVE கீர்த்தி வீரர் எத்தலப்பர் என்ற‌ நமது சமுதாய நலன் சார்ந்த குழுவிற்க்கு வருவோம்..


இதிலே பதியப்படும் 90% சதவீத பதிவுகள் நமது சமுதாய உயர்வுக்கு பயன்படுவதாக இல்லை..


அதற்க்கு காரணம் 

பொதுவாக ஒரு விளக்கம் உண்டு " தவறு செய்பவன் மட்டுமே குற்றவாளி அல்ல தவறு செய்பவனை  தட்டி கேட்காமல் தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளியே " என்பதைப்போல 


இக்குழுவில் ஆக்ச்சிறந்த கல்வியாளர்கள் அரசு தனியார் துறையில் உயர் பொறுப்புகளில் இருப்பவர் விளையாட்டுத்துறை 

தொழில்முனைவோர் தொழிலதிபர்கள் என நிறையபேர் பயணித்தாலும் தங்களின் மேலான கருத்துக்களையும் 

அவர்கள் அத்துறையில் எவ்வாறு உயர்ந்தார்கள் என்பதையும் தங்களுக்குத் தெரிந்த அத்துறை சார்ந்த கருத்துக்களையும் செய்திகளையும் இதிலே பதிவு செய்ய தவறி விட்டார்கள் 

அப்படி அவரவர் தங்கள் துறைசார்ந்த வேலை சார்ந்த தொழில்சார்ந்த பதிவுகள் வருமேயானால் தேவையற்ற அரசியல் தேவையற்ற விவாதங்கள் பதியப்படாமல் இருந்திருக்கும்

2015 முதல் 2024 வரையிலும் இதே நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது எனலாம்..


மேலும் 

எல்லோரும் எல்லா அரசியல் கட்சிகளிலும் பயணிக்க கூடியவர்கள் தான்

அதை இங்கே காட்டிக்கொள்வதில் பயணொன்றும் இல்லை 

மாறாக அந்த அரசியல் திறமையை பயன்படுத்தி நமது சமுதாய நலனை முன்னேற்றுவாரென்றால் அதனை ஒத்த பதிவுகள் வருமேயானால் அதுவே சமுதாய குழுவின் சிறந்த பயன் என்று கூறலாம்...


குழுவில் மாற்றம் செய்யவேண்டியது.1.முதலில் ஒருவன் உயிர்வாழ ஆரோக்கியமான உணவு வேண்டும் 

வாழ்வில் உயர கல்வி வேண்டும்

ஆக அந்த கல்வியை கற்க வேண்டும் அந்த கல்வியில் நமது சமுதாயம் பின்னடைவில்தான் உள்ளன 

காரணம் அதைப்பற்றிய விழிப்புணர்வு 

அத்தகைய விழிப்புணர்வை இதிலே பயணிக்கும் ஆகச்சிறந்த கல்லூரி  பேராசிரியர்கள்

பள்ளி ஆசிரியர்கள்

எடுத்துரைக்க வேண்டும்... 


2. கல்வி பெற்றுவிட்டோம் சரி அந்த கல்வியை பயன்படுத்தி பணிகளுக்குச் செல்கிறோமா என்றால் அது மிகவும் குறைவு ஏனென்றால் சேர்ந்தால் மேலாளராகத்தான் சேருவேன் என்ற என்னம் மேலும் எதையும் சகித்துக்கொண்டு வேலை பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப் பணியில் எப்படி அடுத்த நிலையை அடைவது என்ற ஒரு சிந்தனை உழைப்பும் இல்லாதது வேலைவாய்ப்புகளில் நாம் முன்னேறாமல் இருக்க ஒரு காரணம்,  வேலைவாய்ப்புகளில் உயர்வது எப்படி என்கிற விழிபாபுணர்வை இதிலே பயணிக்கும் அரசு தனியார் துறைகளில் பணி செய்து உயர் இடத்திற்க்கு சென்றவர்கள் இருக்கிறார்கள் எனவே அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் (யார் யார் எனக்கு தெரியும் எனவே அத்தகைய விழிப்புணர்வு பதிவுகள் பதிவிடுங்கள்)


3. மேலும் தொழில் முனைவோர் நீண்டகாலமாக ஒரே தொழிலில் வெற்றிகரமாக பயணிப்போர் தங்கள் தொழில்பற்றிய பதிவுகள் மேலும் இதே வேறு எந்த தொழிலில் லாபம் வெற்றி வாய்ப்புகள் எப்படி எந்த் ஊரில் எந்த தொழில் கனரக வாகனங்கள் தொழில் சார்ந்த வாகனங்கள் வைத்திருப்போர் என தங்கள் பதிவுகளை பதிவிடும்போது இதன் மூலம் தங்கள் தொழில் விரிவடைய வாய்ப்புகள் உள்ளன.


4. மேலும் தமது சமுதாயம் கால்நடைகள் அதிகம் வைத்திருப்பதால் அதைச் சார்ந்த பதிவுகள் இன்றய காலகட்டங்களுக்கு ஏற்ப் நவீன முறையில் ஆடு மாடுகள் வளர்ப்பு சந்தை படுத்துதல் என அதனைச் சார்ந்த பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்..

5. விவசாயம் சார்ந்த பதிவுகள் காய்கறி தேங்காய் விலை நிலவரங்கள் பருவகால பயிரிடல் போன்றவற்றை பதிவிடலாம்..


6.அரசியலில் பயணிப்போர்கள் நமது சமுதாயம் சார்ந்த சலுகைகள் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகள் அரசு மானியங்கள் 

அரசு ஆவணங்களை உதாரணமாக DNT சான்றிதல்கள் 

போன்ற அரசு சார்ந்த ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளை பதிவிடலாம்..

இனி வரும் காலங்களில் இது போன்ற பதிவுகள் பதிவிட வேண்டும் இது நமது குழுவில் செய்யப்பட வேண்டிய மாற்றம்...

(பின் குறிப்பு. இது போன்ற உயர்வுக்கான பதிவுகள் வரும் போது அதை பயன்படுத்தி முன்னேறுவது அவரவர் விருப்பம் ஆனால் "வாடு ஏமி செப்பேதி நேனு ஏல வினால" ன்னு நினைத்தால் அதற்க்கு குழு பொறுப்பல்ல 

புத்தகங்கள் படிப்பதை காட்டிலும் அதன் மூலம் உயர்ந்தவர்கள் கருத்துக்களை சற்றே செவிமடுத்து கேளுங்கள் உங்கள் முன்னேற்றம் அங்கிருந்து கூட ஆரம்பிக்கலாம் என்ற வரிகளுக்கேற்ப்ப 

நல்லவற்றை புரிந்து கொண்டு  உயர இந்த குழுவின் பங்களிப்பு சிறிதளவேனும் இருக்கட்டும் இனிமேல்..

அன்புடன் ஜெயராமன்..வங்கி துணை மேலாளர் ..உடுமலைப்பேட்டை .

திரு .கார்த்தி SR -மின்சார பொறியாளர் -உடுமலைப்பேட்டை 

காலத்தை உள்வாங்கும் எவையும் தன்னை தற்காத்துக்கொள்ளும் என்பது இயற்கையின் நியதி 

அன்றிலிருந்து இன்றுவரை நமது இலக்கு ஒன்றுதான் 

"தன்னிறைவு " என்பதில் நாம் தன்னிறைவடைய வேண்டும் .. 

அதற்கான விதைகள் துளிர்ப்பதை நாம் இனங்காண வேண்டும் 

கேட்பதை கேட்டபடி கொடுக்கும் தேவதாரு விருட்சம் போல் விளங்கவேண்டும் .. இல்லையென்பதே இல்லையென்ற சொல்லாடல் நிலைபெறவேண்டும்

We are all in one coporation that is called as "KALPA VIRUCHA "

We are improve ours as like as ENCYCLOPEDIA OF KAMBALA

நன்றி ....

Mrs Veeralakshmi Rajavel....Andipatti 

Best and heart felt wishes for a successful decade !!

The idea of creating this group is a very noble cause as u have put together and encouraged our community people to express which itself is a very productive growth.

And the intensity of sharing and interaction in the group  I would say is very strong and alive which is very difficult to maintain I know as an admin .The credit goes to you ya for keeping the group lively. Hats off to it ! 

Just do what ur doing,  I am sure the group will evolve as a platform to express refined thoughts and progressive experiences where the members stay confident to express!!

I am just an audience sir, u r the performer, and the way u give space to everyone who expresses is really great... 😊way to go 👍

5..10..2024..அன்று ஒன்பதாம் ஆண்டு கடந்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கீர்த்தி வீரர். எத்தலப்பர்

திரு .முத்துசாமி அவர்கள் ...பெதப்பம்பட்டி 

KVE.வாட்ஸ் அப் குழுவிற்கு வாழ்த்துக்கள் ஆரம்பித்த அட்மின் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

உறவுகளே நீங்கள் ஆரம்பித்த ஒன்றாம் ஆண்டில் நீங்கள் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்தீர்கள் என்று தெரியவில்லை அந்த நோக்கம் இன்று 10 ஆம் ஆண்டில் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை ஆனாலும் இந்த குழு என்று ஆலமரமாக வளர்ந்து சமுதாயம் எனும் வேர் பரப்பி மிக கம்பீரமாக பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது அரசியல் ஆன்மீகம் பொழுதுபோக்கு சினிமா சமுதாய செய்திகள் அனைத்தும் இக்குழுவில் பகிர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகளை இக்குழுவில் இணைத்து ஒரு உறவு பாலமாக விளங்குகின்றது இப்பொழுது ஒரு சிறு whatsapp குழுவாக ஆரம்பிக்கப்பட்டது இன்று நானுருக்கும் மேற்பட்ட நபர்களை இணைத்து மிகப் பிரமாண்டமாக ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றதுஇக்குழுவிள்பல நல்ல செய்திகளை நம் உறவுகள் பகிருகிறார்கள்

சில நேரங்களில் சச்சரவான செய்திகளும் பகிர்கிறார்கள்

வாக்குவாதங்களும் வருகின்றது அந்த வாக்குவாதங்களை அன்புடன் மறந்து மறுநாள் நல்ல செய்திகளாக வருகின்றது நல்ல விஷயம் தானே இன்னும் நிறைய தமிழகம் முழுவதும் உள்ள நம் உறவுகளை இதில் இணைத்து குறைந்தது ஆயிரம் நபர்களை யாவது இணைத்து தமிழகம் முழுவதும் நடக்கும் நம் உறவுகளுக்குள் நடக்கும் நல்ல செய்திகள் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் செய்திகள் நம் விடுதலைக் களம் எனும் அரசியல் கட்சியின் செய்திகள் அனைத்தும் வர வேண்டும் என்று நினைக்கிறேன் இக்குழுவில் இருப்பவர்கள் டிபியில் அவர் அவர்  போட்டோவை வைத்தால் இன்னும் உறவுகளுக்குள் நல்ல அறிமுகம் கிடைக்கும் எனது வேண்டுகோள் முடிந்தால் அட்மின்கள் இதற்க்கும் ஒரு பரிசிலனை செய்யலாம் போட்டோ இருந்தால் நமக்குள் நல்ல அறிமுகம் கிடைக்கும் என்பது எனது வேண்டுகோள் இன்னும் KVE.மிகப் பிரம்மாண்டமாக வளர வேண்டும் எனநமக்குள் ஒரு உறவு பாலமாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை குழுவில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தொடர்க நம் பயணம்என்றும் நட்புடன் டி முத்துச்சாமி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைச் செயலாளர் பெதப்பம்பட்டி எஸ் அம்மாபட்டி

திரு .டி. முத்துச்சாமி அவர்கள் .பெதப்பம்பட்டி 

திரு .அசோகன் ...பொள்ளாச்சி ...பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் KVE வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது சமயம் சில ஆலோசனைகள். 

1) மிகவும் முக்கியமான விஷயங்கள் மட்டும் KVE விருட்சத்தின் விதைகள் குழுவில் பகிரப்பட வேண்டும். 

2) கல்வி, சமுதாய சொந்தங்களின் இறப்பு போன்ற மிக அவசியமான தகவல்கள் மட்டும்.

3) மற்ற அனைத்து தகவல்/,விஷயங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களில் பதியவும்.

4) தேவையற்ற தகவல்கள்,பதிவுகள் முக்கியமான விசயங்களை மூலையில் உட்கார வைத்து விடும்.

5) சிவகுமாரின் பதிவுகள் பண்பாடு,கலாசார குழுவில் பதிவிடலாம்.

திருமதி உமா மகேஸ்வரி ராமசாமி அவர்கள் ..சாப்டூர் 

நம்ம சொந்தங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் பார்ப்பதற்கும் அவர்களின் கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும் நல்ல தளத்தை உருவாக்கியதற்கு நன்றிகள்,படிப்பு சம்பந்தமான பதிவுகள் நிறைய பகிருங்கள்.

திரு .பெருமாள்சாமி ,மின்சாரவாரிய பொறியாளர் ..கோவை 

O5.10.2015-05.10.2024, 10 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி வீரர் எத்தலப்பர் (KVE) வாட்ஸ்ஆப் குழுவிற்கு, உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இக்குழுவில்  பதிவுகளை பார்த்துவருகிறேன். ஆரம்பத்தில் இக்குழு சிறப்பாக  இயங்கியது. இயக்கியவர்கள் அனைவரும் இளைஞர்கள். அதில் நல்ல நோக்கமும் இருந்ததது. களத்திலும் சிறப்பாக இயங்கினார்கள். கழகங்கள்/கட்சிகளை சார்ந்தவர்களை இக்குழுவில் இணைத்த பின்பு அவர்கள் தமது சித்தாந்தம் சார்ந்த பதிவுகளை பதிவிட தொடங்கினர். தொடர்  பதிவுகள் பல நேரங்களில் அயர்ச்சியை ஏற்படுத்தியது. குழுவின் நோக்கத்திற்கு எதிர்மாறான திசையில்  பயணம் தொடர்கிறது. யாருக்கும்  பயனில்லாத திண்னைப் பேச்சு அரங்கமாகஹ இக்குழு மாற கூடாது. சமுதாய  முன்னேற்றம் சார்ந்த பதிவுகள் மட்டுமே இக்குழுவை மேம்படுத்தும். பதிவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பதிவிட்டால் நலம். அடுத்தாக கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறது. உறுப்பினர் ஒன்று கூடி அதை சிறப்பாக நடத்தவேண்டும். பல பணிகளுக்கிடையிலும், சிறப்பாக வழி நடத்துகிற  உங்களுக்கும், குழு நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட வாழ்த்துகளும் நன்றியும்💐🙏




Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰