சித்தரேவு 16.06.2024
சித்தரேவு 16.06.2024
நேற்று 15.06.24 சனிக்கிழமை இரவு 1 மணிக்கு மேல் திடிரென்று சித்தரேவு என்ற பெயர் மூளையில் ஒலித்தது. அது முதல் இன்று பிற்பகல் சுமார் 2 மணிக்கு முத்தையன் கோயில் சென்று பார்க்கும் வரை அந்த நினைவு மாறவில்லை. இது நாள் குமணன் பற்றியான செவிவழிச்செய்திகள், மனதில் உருவான பிம்பங்கள், சங்க இலக்கியப்பாடல்களில் குமணன் பற்றியான பாடல் பதிவுகள், மு.ரா. கந்தசாமிகவிராயர் கூறிய கதை நிகழ்வுகள், ஆண்டிபட்டி கபடி கருப்பன் கூறிய 53 மனித வடாகங்கள் என அனைத்தும் இன்று அந்தக் கோயில் காட்சிப்படமாக இருந்தது உண்மையில் பெரும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
இந்தக்கோயில் ஒரு சித்தர் வசித்ததாகவும் அவர் இறந்த இடத்தில் இ;ந்தக்கோயில் கட்டப்பட்டதாகவும் களத்தரவுகள் கூறுகின்றன. ஆனால் நமது கூற்றுப்படி கண்ணாடிப்புத்தூர் முதல் மடத்தூர், மயிலாபுரம், சின்னாக்கவுண்டன்புதூர், மயிலாடும்பாறை. வலசு கருப்பணசாமி கோயில், மயிலாடும்பாறை, நரிப்பாறை ஆகிய அனைத்து பகுதிகளில் தன்னாசியப்பன் என்ற பெயரில் குமணன் இருப்பதாகப் பேசி வந்தோம். அது இன்று சிவாவே உறுதிப்படுத்தும் அளவுக்கு நிகழ்வுகளும் அதற்கான தொடர் பயணங்களும் தொடர் பயணங்களும் நிகழ்ந்து வருகின்றது என்றால் மிகையில்லை.
தூதநாயக்கன்பட்டி தன்னாசியப்பன் கோயில், மயிலாடும்பாறை தன்னாசியப்பன் கோயில், ஒத்தக்கால் தன்னாசியப்பன் கோயில், பாப்பிலியம்மன், பாப்பிலியப்பன் என்று தொடர் களத்தரவுகளில் கிடைத்தது நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இதுவே உண்மை என்று தற்போது புலப்படுகிறது. அதுவும் இன்றையக் களத்தரவுகளில் தடங்கல்களும், ஏதேனும் ஒரு விளைவுகள் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். அது போன்று நிகழ்வுகளும் நடக்கின்றது. ஆக நாம் சரியான பாதையில்தான் செல்கின்றோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி ஆலோசனைப்படியே களத்தரவுகளை உள்ளடக்கிய மேப் உருவாக்கப்பட்டது. இது கொழுமம் முதல் சித்தரேவு கிடைத்தது. இந்தப்பகுதியில் இருக்கும் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் மடத்தூர், சின்னாக்கவுண்டன்புதூர், ஆத்தூர், ஆண்டிபட்டி, சித்தரேவு, அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி, இதில் ஓரளவிற்கு பெயர்கள் பொருந்தி வந்தாலும் சித்தரேவு மட்டுமே ஊர்ப்பெயர் பொருந்தி வராததால் இன்றைய களப்பணியில் இது முழுமையாக நமக்கு விடை கொடுத்தது.
நேற்று இரவுமுதல் இன்றைய பகல் பொழுது தற்பொழுது இரவு வரை சோர்வில்லாமல் பயணம் சென்றதும், அனைத்து நிகழ்வுகளும் இயல்பாகவே நடந்ததும் நம் பயணம் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக செல்வதற்கு ஒரு உந்துசக்தியாக நாம் உணரலாம். குமணன் நம்முடன் தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து கொண்டு செலுத்துகிறார். என்பதை நம்முடைய ஒவ்வொரு தொடர் நிகழ்வுகள் நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.
சித்தரேவு விரிவான கட்டுரை புத்தகத்தில் படிப்போம்.
இருளப்பசாமி சாமி நடுகல் இதில் ஒரு வீரன் கையில் வாள் பிடித்திருப்பதும், சுமார் ஆறடி உயரமுள்ள நடுகல் என்பதும் இது கட்டடத்திற்கும் இருப்பதும் தெரிய வருகிறது. இதைப்பற்றி அந்த ஊர் மக்களிடம் கேட்டபோது ஏதோ எல்லைக்கருப்பராயன், எல்லைக்காவலாளி என்றும் கூறுகின்றனர். இதற்கருகில் எருமைக்கிடா வெட்டும் கல் வளையமும் இருந்தது. இது குறித்து விரிவான விசாரணை தேவை
ரெங்கராஜ புரம்
கார்மேல் நகர்
அமைதிப் பூங்கா
கதிர்நாயக்கன்பட்டி
நெல்லூர்
கொண்டமநாயக்கன்பட்டி
குப்பிநாயக்கன்பட்டி
ஒட்டுப்பட்டி
சிங்காரக்கோட்டை
சித்தரேவு
செல்லம்பட்டி
நல்லாம்பிள்ளை
நெல்லூர் காலனி
சாலைபுதூர்
சங்காரெட்டிக்கோட்டை
உதயகாரயன்புதூர்/காந்திபுரம்
Comments
Post a Comment