தொலைந்து போகுமா தொல்லியல் துறை . . . மறந்து போகுமோ . . . மாணவர்களிடம் . .

 தொலைந்து போகுமா தொல்லியல் துறை .  .  .  மறந்து போகுமோ . . .  மாணவர்களிடம் . .

அனைவரும் அனைத்து படிப்புகளையும் படிக்கும் போது தொல்லியல் சார்ந்த படிப்புகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. ஏன்,  அது குறித்தான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு அடிப்படைக்காரணம்.

தமிழ்நாட்டில்  கீழடி அகழ்வாய்வுக்குப்பிறகு  தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு அதிகமாக மக்களிடம் சென்றடைந்துள்ளது. இது நம் மண்ணின் பெருமை என்பதைக் காட்டிலும்  சமூகம் சார்ந்த விழிப்புணர்வு என்பதையே நமக்கு உணர்த்துகிறது.  சென்னை புத்தகத் திருவிழாவிலும், ஈரோடு புத்தகத் திருவிழாவிலும் வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த புத்தகங்கள்  20 முதல் 30 விழுக்காடுகள் விற்பனையாவதிலிருந்து  தொல்லியல் சார்ந்த  விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்தது உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும், கொடுமணல், கீழடி , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுக்கு அரசின்சார்பிலும்,  கல்வி அமைப்புகளின் சார்பிலும் அகழ்வாய்வு நடக்கும் போதும். அகழ்வாய்வு நடந்து முடிந்த பிறகும்  அந்த இடங்களை மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மற்றும்  கோவை , தஞ்சை  போன்ற முகாமையான மாவட்டத் தலைநகர்களில் ஒரு சில  ஊர்களில் மட்டுமே இந்தத் தொல்லியல் சார்ந்த பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் இருந்து வருகிறது.

தொல்லியல் ஆய்வறிஞர்களும் தமிழ்நாட்டின் 33 மாவட்டத்திற்கும் இருக்கின்றார்களா என்றால் இல்லை. ஏனெனில்  தொல்லியல்  மண்டலங்களாகவும், அருங்காட்சியகம் இருக்கும் பகுதிகளில் மட்டுமே அலுவலகம் செயல்பட்டு வருவதால்  அந்த மாவட்டத்தில் மட்டுமே இதனைக் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

மேலும், ஏராளமான தொல்லியல் சின்னங்கள் சாலைப் பகுதிகளிலும் காட்டு பகுதிகளிலும் இருப்பது இன்று வரையிலும் கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. மேலும், கல்வெட்டுகள் இருக்கும் நெடுங்கற்கள் ஒரு சிலரின் அறியாமையினால்  கட்டிடம் கட்டுவதற்கும், அருகில் கோயில் கட்டினால் இதை வைத்துக் கட்டவேண்டும் என்று எண்ணத்தோடும் இந்தக் கல்வெட்டு கற்களை வைத்து கட்டிவிடுகின்றனர்.

கொங்கு மண்டலத்தில்  ஏராளமான தொல்லியல் சின்னங்கள்  அந்தந்த ஊரின் பெயர்களிலேயே அடங்கியிருக்கிறது. ஆனால் அது காலப்போக்கில் சிதிலமடைந்து கேட்பாரற்று வருகிறது. 

பொதுமக்கள் ஒரு சில நடுகற்களை வணங்கி வருவதாலும் அதைத் தொட்டால்  ஏதேனும் நடந்து விடும் என்பதால்  அதனைத் தொடுவதற்கு அச்சப்பட்டு மண்ணிற்குள் புதைந்து விடும் நெடுங்கற்களும், கற்திட்டைகளும், கல்வட்டங்களும் உண்டு.

இதையும் மீறி  உடுமலை மெட்ராத்தி பகுதியில்  125 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. ஆனால் தற்போது 40 முதல் 50 கல்வட்டங்களே  இருக்கிறது.  இதை அந்தப் பகுதி மக்களிடம் கேட்டால்  இது ஆகாத காடுங்க , இங்கெ நாங்கள்லா யாரும் போகமாட்டோம் என்று சொல்கின்றனர். அந்தக் கல்வட்டங்கள் பெரும் முதலாளிகளின் ஆக்கிரமிப்பில் காத்தாடிக்காடுகளாகவும் மாறிவருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அந்தக் கல்வட்டங்களும் இருக்க வாய்ப்பில்லை.

மேலும்  கொங்கு மண்டலத்தில்தான் ஏராளமான காசுகளும் எடுக்கப்பட்டது. நெய்க்காரபட்டி, வடபூதிநத்தம், கடத்தூர், கண்ணாடிப்புத்தூர் போன்ற பகுதிகளில்  ரோமானிய அகஸ்டஸ் காசுகள் கிடைத்தற்கான சான்றுகளும் உண்டு. மேலும், தனியர் சில தோட்டங்களில்  கருப்பு சிவப்பு ஓடுகள், மண்பானைகள், தாளிகள் போன்றவை இருந்தும்  ஏதேனும் தொல்லியல் ஆர்வலர்கள் பார்க்க வேண்டும் என விரும்பினால்  அதைக் காட்ட மறுப்பதும், இதைக்காட்டினால் நம் காட்டுக்கு தோண்ட வந்துவிடுவார்கள் என்றும், இது போன்ற  தொல்லியல் சின்னங்கள் கிடைத்தால் இப்பொழுதெல்லாம் யாரும் வெளியில் சொல்லவே அச்சப்படுகின்றனர். 

தொல்லியல் படிப்பு

தொல்லியல்  பாடம் என்பது பண்டைய வரலாற்றையும், அகழ்வாய்வு தொடர்பானதாகவும் அறியப்படுகிறது. இந்தத் துறையானது நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதை உள்ளடக்கிய ஒரு இடைநிலை நடவடிக்கையாகும். முன்னதாக மனித சமூகம் பொருட்களை உருவாக்கியது மற்றும் அந்தப் பொருளை அடையாளம் காண்பது. தொல்லியல்  நீரோட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.  வுரலாற்றுத் தளங்களின் அகழ்வாய்வுகள், மேலாய்வுகள் கடந்த கால நாகரிகத்தில் கவனம் கொள்ளப்படுகிறது. வரலாற்று செய்திகள் நாகரிகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தத் துறைக்கு ஏற்றவர்கள். தொல்லியல் துறையானது டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. தற்போது இணைய வழியாகவும் இந்தப்பாடங்கள், அதாவது கல்வெட்டியல் தொடர்பான படிப்புகள், தொல்லியல் தொடர்பான படிப்புகளும் இணையவழியில்  கற்றுத் தரப்படுகின்றது.

இந்தியாவில் தொல்லியல் துறையில்  பல்வேறு பாடத்திட்டங்கள் பின்வருமாறு உள்ளது. அது பண்டைய இந்தியக் கலாச்சாரத்தில் இளங்கலை பட்டதாரிகள், பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் இளங்கலை, கலை தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தில் இளங்கலை, தொல்லியல் துறையில் முதுகலை கலை இலக்கியம், அருங்காட்சியகப்படிப்பும் முதுகலையில் உள்ளது. 

தொல்லியல் படிப்புகளை  12 ஆம் வகுப்பு முடித்த யாவரும் தொடரலாம். மேலும் இளங்கலை  படிப்பில் குறைந்த 55 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால்  தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் சேர்ந்து படிக்கலாம். இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழ் படித்தவர்களுக்கு இது கூடுதலாகவும் இலகுவாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போதைய பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் உள்ளுர் வரலாறுகளும் இணைக்கப்படுவதால்  தொல்லியல் சார்ந்த கல்வி பயில  ஏதுவாகவும் இலகுவாகவும் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. தொல்லியல் துறையில் விருப்பமுள்ள ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து படிக்கலாம்.

கீழடி, கொடுமணல்,ஆதிச்சநல்லூர் சென்று பார்க்கும் மாணவர்கள்  தாமும் இது போன்று தொல்லியல் துறையில் சாதிக்கவேண்டும் என்பதே தொல்லியல் துறையின் அடிப்படை தகுதி. வேறு கூடுதலான தகுதிகள் என்பது அவர்களின் பட்டப்படிப்பும், தொல்லியல் கள அனுபவங்கள்தான். தம்முடைய ஊர்ப்பகுதிகளில் உள்ள தொல்லியல்  சின்னங்களையும், கல்வெட்டுகளையும் முடிந்தளவு பார்த்துப் படிக்க ஆரம்பித்தால் போதும் அவர்கள் தொல்லியல் ஆர்வலர்கள், பின்னாளில் தொல்லியல் ஆய்வாளராகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். 

தொல்லியல் பாடப்பிரிவு சார்ந்த கல்வி தரும் கல்லூரிகள் இந்தியாவில்

தொல்லியல் துறை, புதுதில்லி,  தேசிய அருங்காட்சியகம், புது தில்லி, தில்லி பாரம்பரிய  ஆராய்ச்சி மற்றும்  மேலாண்மை நிறுவனம், புது தில்லி, பரோடா எம்.எஸ்.ஜி. பல்கலைக்கழகம்,மெட்ராஸ் பல்கலைக்கழகம் சென்னை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆக தொல்லியல் சார்ந்த கல்வியைத் தரும் ஆறு பெரு நிறுவனங்களில் இரண்டு நமது தமிழ்நாட்டில் உள்ளது. இதுவே நம் மாணவர்களுக்கும், கல்வி பயில மிகவும் ஏதுவாகவும் வாய்ப்பாக உள்ளதென்றால் மிகையில்லை. 

தொல்லியல் படிப்புக்கான தகுதி அளவு

தொல்லியல் படிப்பு சேர டிப்ளமோ அடிப்படைத் தேவை, இதற்குப்பிறகு 10 ஆம் வகுப்பு அல்லது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

தொல்லியல் மேற்படிப்பு அல்லது இளங்கலை பட்டத்தில் வரலாறு பாடம் அல்லது ஏதேனும் இளங்கலையில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தொல்லியல் அல்லது முதுகலை பட்டப்படிப்புகளில் முதுகலை நிலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் இளங்கலை அல்லது குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். 

சேர்;க்கை முறை

தொல்லியல் துறையில் பட்டய படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப:பு தகுதி மதிப்பெண் பட்டியல்களுடன் நேரடியாக தங்கள் சேர்க்கை செயல்முறையை முடிக்கலாம். தொல்லியல் துறையில் பட்டய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு ஏதும் இல்லை. தொல்லியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு  கல்லூரிகள் தங்கள் சொந்த நுழைவுத்தேர்வை நடத்துகின்றன. அல்லது தகுதிப்பட்டியலுடன் மற்றொரு சிறந்த நுழைவுத்தேர்வை கருத்தில் கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான ஐPரு ஊநுவுஇ யுருஊநுவு மற்றும் ஊருநுநு நுழைவுத்தேர்வுகளையும் வழங்கலாம். ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் அந்தந்த நுழைவுத்தேர்வுக்குத் தகுதிபெற்ற பிறகு அடுத்த செயல்முறைக்கு நீங்கள் இணையவழி விண்ணப்பத்தை பயன்படுத்தலாம். 

தொல்லியல் துறையில் ஆரம்பகாலத்தை இரும்புக்காலம், வெண்கலக்காலம், பெருங்கற்காலம், என்றும் கல்வெட்டுக்காலம், கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், மற்றும் தற்காலம் என்றும் கூறுகின்றனர். கல்வெட்டு எழுத்துக்களை தமிழி கல்வெட்டு என்றும், பிராமி எழுத்துக்கள் என்றும். வட்டெழுத்து என்றும் ஆய்வறிஞர்கள் வகைப்படுத்துகின்றனர். இதனை  கி.மு. ஆண்டெனவும். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவாகவும் எட்டாம் நூற்றாண்டு வரை ஒரு வகையாகவும்,  10 ஆம் நூற்றாண்டு வரையிலும். 13 ஆம் நூற்றாண்டு வரையிலம் கால அளவுகளாகவும் எழுத்தின் வடிவங்களையும் எழுத்துப்பொறிப்புகளை வைத்து வகைப்படுத்துகின்றனர்.

பொதுவாக ஆரம்ப கால கல்வெட்டு, வெளிநாட்டு நாணயங்களை வைத்து காலம் நிர்ணயம் செய்தல், வெளிநாட்டு பயணிகள் வருகை குறித்து அளவீடு செய்தல். நடுகற்களை வைத்து கால அளவீடு செய்தல், பாறை ஓவியங்களில்  வெள்ளை ஓவியங்கள், செஞ்சாந்து எனும் சிவப்பு ஓவியங்களை வைத்து கால அளவீடு செய்தல், கற்திட்டைகளை வைத்து கால அளவீடு செய்தல், கல்வட்டங்களை அகழ்வாய்வு செய்து அளவீடு செய்தல் என காலங்களை தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தி ஆய்வு செய்கின்றனர். பொதுவாக வழக்கில் கி.பி. மற்றும் கி.மு. மட்டுமே உள்ளது. தொல்லியல் ஆய்வறிஞர்கள் இதனையும் தாண்டி வெகு தூரம் பயணித்து சிரத்தையெடுத்த ஆவணப்பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

தொல்லியல் அறிஞர்கள் கல்வியாளர்களுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்கள். கீழடி நாகரிகத்தை உறுதிப்படுத்தும் போது இந்தத் தொல்லியல் ஆய்வாளர்களின் கல்வெட்டு அறிவும், பட்டறிவு மட்டுமே தமிழர் நாகரிகத்தை ஆழங்கால் பதிக்க வைத்தது. வையாவிக் கோப்பெரும்பேகனின்  பொருந்தல் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்தது. மெய்யெழுத்துக்களில் முடியும் பெயர்களையும் வெளிப்போந்தது.

தொல்லியல் படிப்பு படித்தால்  நிரம்ப வேலை வாய்ப்புகள் இருப்பது நம் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அருங்காட்சியகங்களின் காப்பாட்சியர், தொல்லியல் துறை அலுவலர்கள், மாவட்ட, மண்டல, தலைமை அலுவலர்கள் என பெரும்பான்மையான அலுவலர்கள் தங்களின் பணிக்காலம் முதுமைஅடைந்தும் அவர்களை கூடுதல் பொறுப்பாக்கி வைத்துள்ளது. மேலும், சில மாவட்டங்களில்  மாவட்ட, மண்டல அலுவலர்கள் இல்லாமல் கூடுதல் பொறுப்பாக்கி, பொறுப்பு அலுவலர்களாகவே பெரும்பாலும் பணியாற்றுகின்றனர்.

அகழ்வாய்வுகள் நடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்க்கும் போது  தமிழ், வரலாறு படிக்காத  பிள்ளைகள்  அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபடுத்துவதும்,  மத்திய அரசின் 100 நாள் பணியாளர்களை அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபடுத்துவதிலிருந்து  அடிப்படைப்பணியாளர்கள் முதல் அலுவலகப்பணியாளர்கள் வரை பணியிடங்கள் காலியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் தொல்லியல் சார்ந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால்  அந்த இடத்திற்கு வந்து கள ஆய்வு மேற்கொள்வதென்பது சற்று கடினமானதாகவே உள்ளது. கேரளாவில் கற்திட்டைகளையும் பாறை ஓவியங்களையும் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். அதற்கென  தனியாக உள்ளுர் நபர்களை நியமித்து அவர்களே பராமரிக்கவும்  வசூலான தொகையில் 60 விழுக்காடு பணியாளர்களுக்காகவும், 40 விழுக்காடு அரசுக்கும் சென்றடைகிறது. ஆனால் தமிழ்நாட்டில்  தொல்லியல் எச்சங்கள். நினைவுச்சின்னங்கள் உள்ள இடங்கள் திறந்தவெளி  பார்களாகவே செயல்படுகிறது. 

மேலும் இனி வருங்காலங்களில் அகழ்வாய்வு செய்தால் தமிழ்க்குடிமகன்கன் எந்தெந்த ரகங்களில் குடிமகன்களாக இருந்துள்ளனர் என்பதை நீக்கமற அனைத்துவிடங்களிலும் மேற்பரப்பு ஆய்வு செய்தாலே அறிந்து கொள்ளலாம்.

உண்மையில் தற்போது சுவடிகள் ஆவணப்படுத்தல் பணியில் தமிழகமெங்கும் இலவசமாக  தமிழ்நாடு சுவடிகள் ஒருங்கிணைப்புத்துறை செயல்படுகிறது. இதில் பணியாற்றும் நிரம்பப் பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்களாவே மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் பெறும் தற்காலிகப்பணியாளர்களாகவே உள்ளனர். தமிழக அரசில் ஒரு லட்சத்திற்கும் மேலாகக் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொல்லியல் துறையில் மட்டும் மிக மிகக்குறைவான நபர்களே படிப்பதாலும், இது குறித்து விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும், மாணவர்கள் யாரும் படிப்பதில்லை எனவும் தெரிய வருகிறது.

இது தவிர்த்து மாணவர்கள் தொல்லியல் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும் நிலையில்  அகழ்வாய்வுகள் அதிகப்படியாக செய்வதற்கும், கல்வெட்டுகள் அதிகப்படியாக படிப்பதற்கும் பயன்படும். இந்தியக் கல்வெட்டுகளில்  80 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழியில் இருப்பதாலும், 40 விழுக்காடுக்கும் குறைவான கல்வெட்டுகள் இன்னமும் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வறிஞர்களே வேதனைப்படுகின்றனர்.

இவையெல்லாம் தவிர்த்து இனி வரும் மாணவர்கள் தொல்லியல் துறையில் படிக்கவேண்டும். அவர்கள் படித்தால் அரசின் அருங்காட்சியகப்பணி, ஆலோசகர்பணி, புலனாய்வாளர் பணி, கற்பித்தல் பணி, ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப்பணிகள், ஆவணப்படுத்தல் நிபுணர் என பல்வேறு நிலைகளில் பணிகள் காத்துக்கொண்டிருக்கிறது. இனி வரும் சமூகம் தொல்லியல் துறையை மற்ற துறைகளைப் போல் ஆர்வமாகப் படிக்கும் சமூகமாக வளர வேண்டும். தொல்லியல் துறை படிப்பதற்கு இந்தியாவில் புனே டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கிரேட்டர் நொய்டா தொல்லியல் நிறுவனம், மெட்ராஸ் பல்கலைக்கழகம். காந்தி நகர் ஐஐடி, குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகம். குருஷேத்ரா பல்கலைக்கழகம். பரோடா பல்கலைக்கழகம், சண்டிகர் பஞ்சாப்பல்கலைக்கழகம்,தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நீங்கள் சேர்ந்து படித்துத் தொல்லியல் பெற உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வாழ்த்துகளுடன் பதிவு செய்கிறேன்.

வி..கே.சிவகுமார், 

செயலாளர் 

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰