பேட்டை முதல் குண்டு வரை

 பேட்டை முதல் குண்டு வரை 

திருப்பூர் வழக்கறிஞர்  முருகராஜ் - கார்த்திகேயினி இணையரின்  அன்பு மகள்  சொர்ணமாலா அவர்களின் திருமணத்திற்கு சென்று வந்த பதிவுதான் பேட்டை முதல்  குண்டு வரை

ஆம் உடுமலைப்பேட்டை முதல் கடமலைக்குண்டு வரை வியாழக்கிழமை காலை 6.40 க்கு  சிவா வீட்டுக்கு வந்துவிட்டார். அவசர அவசரமாக குளித்துவிட்டு  6.50  புறப்பட்டு உடுமலை வந்து  சிவா அம்மாவின் கையால்  ஒரு வரக்காபி குடித்து  தினமலர் செய்தித்தாள் பார்க்கும் போதோ அண்ணாமலை  யுனைவர்சிட்டி போலி டாக்டர் பட்டம் குறித்து  மகிழுந்தில் பேசிக்கொண்டு வந்ததும் வந்தவுடன்  இந்த செய்தி பார்த்ததும்   ஒரே நேர்கோடாக இருந்தது. இப்படியெல்லாம் இன்னமும்  மக்கள் இருக்கிறார்கள்.  என்ன செய்ய, அவர்கள் அப்படித்தான். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்  கதைதான் நினைவுக்கு வந்து சென்றது.

மகிழுந்து 7.30 வெளியில்  மேம்பாலம் தாண்டும்போது 7.40  சிவா அம்மா  இந்தா பத்து நிமிசத்துல போயிர்லா என்று சொன்னதும் அவரது உறவினர் பல்லடத்தில்  சின்னச்சாமி  சுசிக்கின்றா என்று  அம்மா சொன்னதும், சிவாவும்  தெலுங்கில் பதில் சொல்ல உடுமலை கடந்தோம். ஜல்லிபட்டி கிந்த போன் சேசேது என்று  சொல்லிக்கொண்டிருக்கும் போது  பயணக்கட்டுரை குறித்தான ஒரு புரிதல் வந்தது.  18347 கி.மீட்டர் தொடங்கி குறிக்கப்பட்டது.

சின்னவீரம்பட்டி, தாண்டி கோட்டமங்கலம் குடிமங்கலம் சுகுணா  தீவனம் செல்லும்போது வேகத்தடை ஏறி இறங்கியதும் இதற்காக இரண்டு உயிர்கள் பலி கொடுத்த பிறகே இந்த வேகத்தடை அமைக்கப்பட்டது என்று பேச்சுடன்  குடிமங்கலம் வந்து,  பூளவாடி பிரிவு, சாலைப்புதூர், பெரியபட்டி, தாண்டும் போது  பல்லடம் சின்னச்சாமி தொலைபேசி வர  ஜல்லிபட்டி  தீசுக்கின்னாரு என்று சிவா சொல்ல அடுத்த  மூன்று நிமிடத்த்தில் ஜல்லிபட்டி.

கேத்தனூர் வேகத்தடை  அடுத்து பத்து நிமிடத்தில்  ப.வடுகபாளையம் சின்னச்சாமி நின்றிருக்க அவரை ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டது. மணி  8.45. பசி வயிற்றைக்கிள்ளியது. நேரமே எழுந்ததால் பசி.  பல்லடம் தாண்டியவுடன் சின்னக்கரை மணிவண்ணன்  நினைப்பு வர அவருக்கு தொலைபேசி அடித்தால் தஞ்சாவூர். சரி நாங்க உங்க வீடு தாண்டிப்போறோம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே   மகாலட்சுமி நகர், வெட்டுப்பட்டான் குட்டை, டி.கே.டி. அடுத்து வீரபாண்டி பிரிவு , பழவஞ்சிபாளையம் தி.மு.க ஆபிஸ் தாராபுரம் சாலையில் வாகனம் திரும்ப  மணி 9.15 சரிதான் வாகன நெரிசல் திருப்பூரில் கடந்த காலங்களில் பார்த்த வாகன நெரிசல் இல்லை. மிகவும் அளவாகவே இருந்தது.  1987 ல் திருப்பூர் இருந்த போது  இருந்த நெரிசலையும் தற்போது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெரிசலையும்,  கோபி தாய்த்தமிழ்ப்பள்ளிக்காக போன போது இருந்த நெரிசலையும் , திருப்பூர்  தாய்த்தமிழ்ப் பள்ளி  போகும் போது இருந்த நெரிசலையும் எண்ணிப்பார்க்கும் போது  திருப்பூர் உண்மையில் வணிகம் குறைந்து மாறி விட்டதாகத் தெரிகிறது.

அவ்வளவாக இல்லாவிட்டாலும் அடுத்த ஐந்து நிமிடங்களில் போக்குவரத்து கிளியர்.   விவேகானந்த பள்ளி வந்ததும்,  தோழர் இந்த வழியா எனக்கேட்கா   கடந்த  இரண்டு மூன்று ஆண்டுகளில்  நான்கைந்து முறை சென்றாலும் சிவாவுக்கு இன்னமும் அந்த இடம் தெரியாது போன்றே பேசுகிறார். 

சரி ஜெயசக்தி நகர்  வந்துவிட்டதா? இல்லை, இங்குதான் திமுக மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் இல்லம் தாண்டி 12 ஆவது  வீதியில் முருகராஜ் இல்லம்.  ஒரு வழியாக  9.30 க்கு  தீருப்பூர் மணமகள் இல்லம் சென்றடைந்தோம்.

இல்லத்திற்குள் சென்றால் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்க, சரி சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அடுத்த  ஐந்து நிமிடம் எங்களுக்கு இட்லி, பொங்கல், மினி ஊத்தாப்பம். சுவையாக இருந்தது.  பொங்கல்  கேட்டு சாப்பிட்டேன். சுமார்12.30 மணி வரை  ஈரோடு கிழக்கு  தேர்தல்  முடிவுகளைப் பார்த்துக்கொண்டு  மாப்பிள்ளை வீட்டார் அனுப்பிய வாகனம் வந்துவிட்டதா? தாராபுரம் வந்துட்டாங்க அங்க டிபன் சாப்பிட்டு வர்றாங்க . . பேச்சோடு பேச்சாக  மணி  11.10 பிறக 11.30  உறவினர்கள் ஒரு சிலர் நண்பர்கள் பலர்  பக்கத்து வீட்டு  தோழிகள் பலர் என வீடு கல்யாண வீடாக கலகலத்தது. 

மணி 12. ஆகப்போகிறது.   வண்டி வந்திடுச்சு  சரி  வந்தவர்களை கவனிங்க,  பெண்ணுக்கு வளையல் பொட்டும் பூ வைக்க  அடுத்த எற்பாடுகள் நடந்தது.  பெண்ணை  இருக்கையில் உட்கார வைத்து   பூ பொட்டு வைக்க, நான் மட்டும்   பொண்ணுக்கு   கன்னத்தில் சந்தனமும், குங்குமம் தடவி விட்டேன்.   சந்தனம் தடவி குங்குமம் பொட்டு வைக்கவேண்டும்.  அமுதாவிற்குபொட்டு வைக்கும் போது என் தாய் சொன்ன நினைவு.  அது போன்று செய்து விட்டேன். தொகை ஏ.டி.எம். அட்டை பணம் எடுக்காமல்  சிவாவிடம் ஆயிரம் பெற்று   ஐநூறு மணப்பெண் கையில் கொடுத்தேன்.

அனைவரும் சற்று நிதானித்துப் பார்த்தது புரிந்தது. சரி அடுத்து சீர் சடங்குகள் முடிந்தது.  வண்டி ஏறலாம்.  சுமார் நான்கைந்து  தோழிகளுடன்  மணப்பெண் கிளம்ப  வேனில் ஒரு சிலரும்,  முருகராஜ் வாகனத்தில் மணப்பெண் தாய், அவரும் ஓட்டுநரும் ஓட்ட,  வாகனம் கிளம்பியது.  முணி  12.45 

நீண்ட இடைவெளிக்குப்பிறகு  ஒரு குடும்ப திருமணத்திற்கு கலந்து கொண்ட மன நிறைவு.  வாகனம் மீண்டும் விவேகானந்த பள்ளி வந்து இடது புறம் திரும்பி  சுமார்  2 கி.மீட்டர் சென்றதும் பாதை கருப்பராயன் கோவிலில் வாகனத்திற்கு தேங்காய் உடைத்து  வண்டிக்கு எலுமிச்சம் பழம் வைத்து மீண்டும ;பயணம்.  

தேங்காய் இருபது ரூபா,  எலுமிச்சம்பழம்  50 ரூபாய்  இவ்வளவும் வீண் என்ன செய்ய   இது  நம்பிக்கை சார்ந்த  விசயம். தலையிட முடியாதே. சுரி தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம்.  இவர்கள் மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் புதுவாகனம்,  புது மணப்பெண்கள்,  திருமணத்திற்கு செல்பவர்கள், திருமணம் முடிந்து வருபவர்கள், பெண் பார்க்க செல்பவர்கள், வாகனம் ஓட்டிப் பழகுநர்கள் என எல்லா  பக்த கோடிகளும்  இப்படித்தான்.  பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பது  இதிலிருந்து தெரிகிறது. 

இயல்பாக  தேங்காய் உடைக்காமல்  வழிபாடு மட்டும் செய்து விட்டு வந்தால் அந்தக் கடவுள் ஒன்றும் கோபிக்கப்போவதில்லi. ஆனால், மக்களின் மனசு லேசானது, பலவீனமானது. உணர்ச்சிகளுக்கு அடிமையானது இது போன்ற  உணர்வு வயப்பட்ட நிலையிலேயே இந்த ஈராண்டு காலம் இந்த சமூகம் கிடக்கிறது. இவர்களைப் பற்றி என்ன சொல்ல? சரி அடுத்து,

பயணம் தொடர்ந்து, நீண்ட தூரம்,  தேனி வரைக்கும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல், போகும் போதே  சிவா தன்னுடைய செலவில் எரிபொருள் போட்டுவிட்டார். அதே போல் வரும்போதும் அவரே பெட்ரோல் போட்டுவிட்டார்.

அவினாசிபாளையம்,  பொங்கலூர், தாராபுரம் சென்றது தெரியவில்லை. சாலையும் நன்றாக இருந்தது. சிவாவும் நன்றாக ஓட்டிக்கொண்டிருந்தார். 

சரி ஒட்டன்சத்திரம் வழக்கமாக   நாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும்போது  கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி இடையில்  திருப்பூர் சாலை குறுக்க போவோம். ஆனால்,  தற்போது  அந்த தாழையூத்து சாலை குறுக்கே செல்ல பயணம் தொடர்ந்தது.  இடையில் முருகராஜ் தொலைபேசி  ஒட்டன்சத்திரம் அபூர்வா உணவகத்தில்  மதிய உணவு அங்கு நாங்கள் காத்திருக்கிறோம்  என்று சொன்னது போன்றே நாம் சென்று அமரும் வரை அவரும் சாப்பிடாமல் இருந்தார். மணி  2.30 அபூர்வா, போகும்போது பைபாஸ் வழியே செல்லாமல் ஒட்டன்சத்திரம் நகருக்குள் சென்று வந்ததும் தேவையில்லாத பயணம். கேட்கும் போது  அந்த வண்டி போச்சு நானும் போயிட்டேன்.  சரிதா. ..  என்ன செய்ய,

மதிய உணவு சாப்பாடு அனைவரும் குறைந்து  25 முதல் 30 பேர் இருப்பார்கள்.  காய்கறியுடன் சுவையான சாப்பாடு.  முடியும்போது  3.15 அனைவரும் சாப்பிட்டு முடிக்க, சரி வாகனம் புறப்பட்டது, வேன் வத்தலக்குண்டு  சென்று  மாலை வாங்கி வருவதற்கு  ஊருக்கள் செல்லும்,  நாம் பைபாஸ் செல்லலலாம் என்று சொல்லி முன்னே சென்று விட்டார்.  

ஒட்டன் சத்திரம் தாண்டி செம்பட்டி பிரிவு வந்ததும் தோழர் இதுல தம்ப்கெட் நிறைய இருக்கு அவுங்க அந்த திண்டுக்கல் வழியாக போயிருப்பாங்க கேளுங்க என்று சொன்னதும் இல்லை இல்லை. நீங்க இந்த வழியா போங்க என்று சொல்லி  மெதுவாக ச் செல்ல  மல்லிகை மல்லசீலன்  திருமணம் செய்து ஊர், கன்னிவாடி ஜமீன்  நிலக்கோட்டை என கடந்த போத அவர்களின் வாகனம் கண்ணுக்குத் தெரிந்தது. ஆமா, சிவா நமக்காக  அவுங்க  ஸ்லோ பண்ணிட்டாங்க. சரி   செம்பட்டி வந்துவிட்டது.   இன்னமும்  வளர்ச்சி பெறாத பகுதிகள். கொஞ்சம் வளர்ச்சி பெற்ற பகுதிகள்.  

செம்பட்டி வலது பக்கம் திரும்ப  தேனி  வாகனம் கொஞ்சம்  விரைவாகச் செல்ல,  வேளிர் புத்தகம் படித்துக்கொண்டே  பல்லடம் சின்னச்சாமி அவர்களின் உரையாடல் இடையிடையே சிவா, சிவா அம்மா,  தெலுங்குக் கீர்த்தனைகள். சரி கேட்போம்.  தேனி வழியாகச் செல்லும்போது எங்கே கொடைக்கானல் ரோடு வரும், ஆனால் சிவா வரும் என்கிறார். சரி வரவே இல்லை, வந்தது தேவதானப்பட்டி பிரிவு, கடந்த  2021 தீபாவளிக்கு வந்தது நினைவு வந்தது.  பாதை தெரியாமல் செங்குறிச்சி வந்து, இரவு  வடுகபட்டி வந்து அசைவ உணவுஉண்டு பாதை தெரியாமல்  முதன்மை சாலை வந்ததும்  நினைவுக்கு வந்து செல்ல, அட . .  பத்லிகுண்டு, இதென்ன சிவா இப்படித்தான் இங்கிலிஸ்காரன் வாயில நுழைஞ்சிருக்கு என்ன செய்ய, வத்தலக்குண்டு,  ஆங்கிலத்தில் பட்லி குண்டு, 

பைபாஸ் தாண்டி குளத்தருகே  வாகனம் நிற்க, சிவாவும் நிறுத்தினார் கேட்டால்,  வேன் வரட்டும் என்றார் வழக்கறிஞர்.  சரி, அப்படியே நீர்நிலை பார்த்துவிட்டு நீர் கழித்து வருவோம் என்று மூவரும் சென்று  நீர்த்தேக்க அருகில் சென்றால்  பொதுமக்கள்  சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததும், பொதுக்கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதையும்  பார்க்க முடிந்தது.  நிற்பதற்குள்  வழக்கறிஞர் அழைத்து விட்டார்.  வாங்க வண்டி போயிடுச்சு, . . ஒ, அப்படியா . .

அடுத்து  தற்படம் எடுத்த குளம். இதோ இங்கதான் செல்பி எடுத்தோம். தண்ணீர்க்குளம் அப்படியயே இருக்கிறது.  சரி முத்துநாகு கேட்கலாமா என்று கேட்க அவரும், கானா விளக்கிலிருந்து  வந்தால்  3 கி.மீட்டர்  வர்றீங்களா எனக்கேட்க, வழக்கறிஞரோ, சேர்ந்து வந்துட்டோம் நேரா  மண்டபம் போய்ட்டு அப்புற பேசலாம் என்றதும் சரி என்று முத்துநாகு அவர்களுக்க  நாளைக்குப் பார்ப்போம் என்று செய்தி அனுப்பினேன். அவரும்  அவருடைய  வீட்டு லொகேசன் அனுப்ப மறுநாள் அது  வேறு பக்கம் செல்ல. மீண்டும் பேருந்து நிலையம் சென்றது தனிக்கதை.

ஆம் இதோ வந்துவிட்டது. வைகை அணை.  தோழர் நாம்ம இங்கு  வந்திருக்கோம் என்று சிவா இதுவரைக்கும் நாம் வரவில்லை. பவானி சாசர் தோற்றம் என்றும், ஏற்கனவே வந்தது போன்று உணர்வு.  2006 ல் இளவரசன் திருமணத்திற்கு  அவருடைய மகிழுந்தில்  அழைத்து வந்தார் அப்போது நான் அறிவுடன் சென்றதும்,  மறுநாள்சனவரி 24 அறிவுக்கு பிறந்த நாள் துணி  தேனி ஆனந்தம் துணிக்கடையில் துணி எடுத்ததும் நினைவு வந்து சென்றது.

வைகை  அணை சுமார் 20 , 30 கிமீட்டர தூரம் கடந்து செல்லும்போது  வைரமுத்துவின் எழுத்துக்களே நினைவுக்கு வந்து சென்றது. பெரியவரின் கதாப்பாத்திரம் வந்தது. வைகை அணை எவ்வளவு பெரியது  வேளாண்மைக்கு  எவ்வளவு நல்லது, இங்கிருக்கும் மக்கள் விவசாயம் பருவ விவசாயம் செய்யும் அளவிற்கு பண விவசாயம் செய்வதில்லையே என்ற நினைப்புடன் கடந்தோம். நமது பகுதியில்  இது போன்று தண்ணீர் கிடைத்தால் தரிசு நிலங்களை விவசாய நிலமாக்கி விடுவார்கள். இங்கிருக்கும் வேளாளர்களுக்கும்,  வேட்டுவர்களுக்கும்,  விவசாயம் குறித்து அறிவு அந்தப் பகுதி மக்களுக்கு இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கும் போது இங்கெல்லாம் சைட் போட்டு விற்கறதில்லை என்று சின்னச்சாமி சொல்ல, அடுத்த இரண்டு கி.மீட்டர் சைட் போட்டு மனையிடம் பிரிக்கப்பட்டது தெரிந்தது.

தொடரும் ......

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰