கேள்வி : மூன் லைட்டிங்கை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? எப்படி என்று கூறமுடியுமா ?


என் பதில் : 

 

.. ... ஒரு கூடை சன்லைட் ... ஒரு கூடை மூன்லைட் ... ஒன்றாக சோ்த்தா ... கலர் தானே என் ஒயிட் ... பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய மூன்லைட் பற்றி தானே கேக்கறீங்க ?!

நிலவொளியில் (Moonlight) கவிஞர்களுக்கு கவிதை வரும்னு தெரியும்.

 

ஆனால், இந்த Moonlighting - லே 300 பேரை வேலையை விட்டு தூக்கிட்டாங்களாமே ?

ஆபீஸ்காரங்க யாரும் நம்மளே வீட்டிலிருந்து பணி செய்வதை (Work From Home) மேற்பார்வை செய்ய கடந்த 2 வருஷமா நம்ம சொந்த ஊரு பக்கம் ...ஏன், வீட்டு வாசல் பக்கம் கூட ஒதுங்கவும் இல்லே ...

ஆனா எப்படிங்க கண்டுபிடிச்சாங்க ? வாங்க பார்ப்போம் !

Moonlighting - லே என்ன செஞ்சாங்கபல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிட்டது போல … தில்லு இருக்கறவன் ரெட்டை மாட்டு வண்டியில் ரேக்ளா ரேஸ் போயிட்டான் ...

ஒரு நிறுவனத்தில் முழு நேர வேலையியே இருக்கும் போதே, வீட்டிலிருந்தபடியே லேப்டாப் சகிதம் .. பக்கத்திலேயே வேறொரு லேப்டாப் - வைத்துக்கொண்டு இன்னொரு போட்டி நிறுவனத்திலும் அதே நேரத்தில், வேலை செய்து தந்ததாக குற்றச்சாட்டு.

இங்கே ஒரு Conference call ... அங்கே ஒரு Conference call ... இங்கே ஒரு Client ..அங்கே வேற Client ...இங்கே ஒரு Team meeting ... அங்கே வேற ஒரு Team Meeting - னு ஒரே வைஃபை வெச்சு பிரமாதமா பேலன்ஸ் செஞ்சிகிட்டு டபுள் சம்பளத்தோட போய்கிட்டு இருந்த வேலை, இப்போ டைட்டானிக் கப்பல் போல கவுந்துடுச்சு ....

காளை மாடு ஒண்ணு கறவை மாடு ரெண்டுஅடிச்சேன் லக்கி பிரைசு ... னு lyrics மாற்றி சில குறிப்பிட்ட skillsets கொண்டோர் ... சந்தோஷமா பாடிகிட்டே ரெண்டு கம்பெனிக்கு ஒரே டைம்-லே வேலை செஞ்சு, appraisal - ல் பங்கெடுத்து, சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுக்கிறார், நம்ம நல்ல தம்பி !

 

யாருமே கண்டுபிடிக்க முடியாதுனு அவர் பாட்டுக்கு மாங்கு மாங்குனு வேலை செஞ்சுக்கிட்டே இருந்தார் நடுநடுவே பில்டர் காஃபி, ஸ்நேக்ஸ் சகிதம் ! வேக வேகமாக அவரு இருந்த லோன் எல்லாம் மானேஜர் அதுக்குள்ளயா குளோஸ் பண்றீங்கனு சொல்ல சொல்ல க்ளியர் செஞ்சாரு ... பெருந்தொற்றுக்கு நன்றி சொல்லிக்கிட்டே, புதுசா லோன் கூட சிலர் வாங்கினாங்க ....

புதுசா சேர்ந்த ரெண்டாவது நிறுவனத்திலும் offer letter கொடுக்கும் போதே மார்க் ஷீட், பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, இரத்த வகை, வீட்டு முகவரிக்கான ஆதாரம், மெடிக்கல் இன்சூரன்ஸ் விபரங்கள், Unified Payments Interface (UPI) ஐடி, தடுப்பூசி சர்டிபிகேட், PAN கார்டு, சம்பளம் போடுவதற்கு வங்கி சேமிப்பு கணக்கு விபரங்கள்னு சப்ஜாடா எல்லாமே HR Rule Book படி வாங்கிக்கிட்டு, background check செய்த பிறகு தான் வேலையே குடுத்தாங்க. அதானே உலக நியதி ... அதானே நியாயம் ...!

பின் அவர்களை இந்த Moonlighting சிக்கலில் கொண்டு வந்தது யாருங்க ?

அதாங்க ... மிகவும் அப்பாவியாக பின்னணியில் இருந்த வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு தான் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேனு அந்த moonlighting செஞ்சவங்களை தெரியாத்தனமா போட்டு குடுத்தது !

புதிதாக பணியில் சேருபவருக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு நிலையான வழிமுறை சொல்லியிருந்தாங்க .. அதாவது, வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்த வேண்டிய தேதியில் தவறாமல் பணி வழங்கும் நிறுவனங்கள் remit செய்ய வேண்டும் .. இல்லேன்னா நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கட்டளை.

பெருநிறுவனங்களில் எல்லாமே பேக் - எண்டு எனப்படும் பின்தள அமைப்புகளின் கட்டமைப்பில் தானே இயங்குகின்றன. ஏற்கனவே வங்கி எண், பான் எண், ஆதார் எண் எல்லாம் ஏற்கனவே வங்கியில் ஒருங்கிணைக்கபட்டதால் இந்த Moonlighting செய்த பய புள்ளைங்களுக்கு பணியில் இருந்த அந்த இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு வெவ்வேறு மின்னஞ்சல் மற்றும் வெவ்வேறு வங்கி சேமிப்பு கணக்கு எண் குடுக்க முடிந்ததே தவிர இருவேறு PAN / Aadhar / UPI ID கொடுக்க முடியவில்லை.

பெரும்தொற்று வரும் முன்பே, நடப்பில் உள்ள வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு மென்பொருளுக்கான நிரலாக்கம் செய்தோர், நாளைக்கு ஏதும் தப்பு தண்ட வந்துடக்கூடாதுயாராவது ஷிஸ்டம் சரியில்லேனு மைக் பிடிச்சு சொல்லிடக்கூடாதுனு முறையான பாதுகாப்பை உறுதி செய்திட, ஒரே ஊழியர் பெயர் - PAN - ஆதார் எண் கொண்டவருக்கு ஏதும் duplication அல்லது multiple வைப்பு நிதி பங்களிப்பு remittance நடக்கிறதா என்று கண்காணிக்க backend - ல் ஒரு வழிமுறை வெச்சிருந்தாங்க.

அங்கே மாட்டினாரு நம்ம சின்ராசு ...

ஒரே ஆளுக்கு ஒரே காலகட்டத்தில் எதுக்கு ரெண்டு வெவ்வேறு நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி கட்டறாங்கனு பார்த்துச்சு. நோட் பண்ணுங்கப்பாநோட் பண்ணுங்கப்பானுலேசா அந்த முதன்மை பணி வழங்கிய நிறுவனத்தின் காதிலே "சின்ராசு ரெட்டை மாட்டு வண்டியை லாவகமாக சாட்டையை சுழற்றி ஓட்டறாருனு…" லேசா ஊதினாங்க ... அப்புறம் அவங்க பொறி வெச்சு புடிச்ச கதை உங்களுக்கு தெரியும் தானே கிங் (King) சார் !

 

சீட்டுக்கட்டு சரிந்து நொறுங்கியது ... மாட்டிக்கிட்டாங்க ...

ப்ச் ... என்ன செய்யறது ? நம்ம அரசாங்கத்தின் தரவு தள கட்டமைப்பு, முடிந்தவரை மனித தலையீடு இல்லாமல் self'driven ஆக தடையின்றி செயலாற்றும் வகையில் ஒரு சிறப்பான கட்டமைப்பு கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மக்களை முன்னிறுத்தி சிறப்பான சேவை திட்டங்களை வழங்குவதை உறுதி செய்யும் நாடுகளில் ஒன்று நம்ம நாடு .. அதாங்க நம்ம டிஜிட்டல் இந்தியா !

சரி, Moonlighting Specialist மாட்டிக்கிட்டாங்க .. ப்ச் இப்ப என்ன பண்றது ?! எதையாவது பண்ணணுமே..

கையிலே live - ல் இருக்கும் இன்னும் 2 offer letter - எடுத்து பிடிச்ச வேலையை தேர்ந்தெடுத்து, அந்த HR க்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லி 3வது லேப்டாப் வாங்கி வேலையை ஆரம்பித்து வேண்டியது தான்அஷ்டே !

ஒரு கூடை சன்லைட் ... ஒரு கூடை மூன்லைட் ... ஒன்றாக சோ்த்தா ... கலர் தானே என் ஒயிட் ... Life goes on … 🎼🎼


நன்றி ....தொடரும் பயணம் ...

 

 

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰