திருமண வரவேற்பு ..உடுமலை தளி ஜல்லிபட்டி பரிமளா மஹால் .
இன்று மாலை அருமை தம்பி கட்டிட பொறியாளர் ,தி .ஷங்கர் -கணினி துறை வினோதினி மணமக்களின் திருமண விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி .
திருமண விழாவில் அருமை தம்பி கோவை வழக்கறிஞர் கார்த்திக் நீண்ட வருடங்களுக்கு பின் சந்தித்து உரையாடியது ,அருமை மாப்பிள கேரளாவில் நிறுவனத்தில் பணிபுரியும் கொடிங்கியம் வேதியல் அறிஞர் செந்தில் குமார் தற்பொழுது உள்ள வேதியல் துறையில் புதிதாக வந்துள்ள அறிவியல் மாற்றங்களை குறித்து விவாதித்து தகவல்களை அறிந்துகொண்டேன் .
இன்றைய சமுதாயத்தின் நிலைமை குறித்து தளி ஜல்லிபட்டி கோபால் சாமி மாமாவிடம் கேட்டு தெரிந்துகொண்டது பயனுள்ளதாக இருந்தது ..மற்றும் ஜேசிபி செந்தில்குமார் அண்ணனிடம் தற்பொழுது உள்ள ஜேசிபி வாகனங்களின் வரவு பற்று கேட்டு அறிந்துகொண்டேன் .
உடுமலை ஜெய்வந்த் கேஸ் உரிமையாளர் விஜயக்குமார் அவர்களிடம் தற்பொழுது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பற்றி அறிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது .
இன்று புகைப்பட கலைஞர் தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் அவர்களுடன் சேர்ந்து புகை படம் எடுத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி .
திருமணவிழாவில் இன்று பரிமாறப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு வகை அருமையாக இருந்தது ..
கட்டிட பொறியாளர் ,தி .ஷங்கர் -கணினி துறை வினோதினி மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் .
நன்றி ..அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

Comments
Post a Comment