கேள்வி : ப .கார்த்தி -விவசாயம் .தொழில்முனைவோர் .உடுமலைப்பேட்டை எஸ் .அம்மாபட்டி 📚✍️
தெட்டிநாயக்கர் சமுதாயம், தொழில், குடும்பம், இவற்றை புரிந்தவர்கள் எத்தனை பேர் 🤔
இன்று அருமையான பதிவு அருமை சொந்தம் ..சி எஸ் பிரகாஷ் நாயக்கர். BHM DCA HMT🥰🤝📚🖋️🖋️Prakash..Kambalathu illagnar Padai👍🔥🔥🇮🇳..08-08-2022
கண்டிப்பாக செயல்படுத்தலாம் ஆனால் நம் இன மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் பத்தவில்லை அதனால் தான் நாம் இன்னும் பின் தங்கிய சமூகமாகவே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் மக்களின் என்னம் நமக்கு எதற்கு அரசியல் அதற்கு செலவு செய்யனும் நாம் இன்று வேலைக்கு போனாமோ நல்ல சாப்பிட்டோமோ நாலு மாலைக்கு போனோமோ அப்படியே பண்ணகத்தி வீட்டுல கை நனைச்சோமோ நைட்டு வேட்டைக்கு போனோமோ நாலு முயல பிடிச்சோமோ ஐஞ்சு கீாிய அடிச்சோமோ 10 அணில்ல போட்டோமோ நேத்து நாங்க அப்படி வேட்டை ஆடினோம் இப்படி வேட்டை ஆடினோம் எங்களை மிஞ்ச எவன் உண்டு வேட்டையாடுவதுல னு தற்பெருமை பேசி கொண்டு தான் இ௫க்கிறோம் இதனால் மத்திய மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது ஒவ்வொரு சமுதாயத்திற்கு என்ன என்ன சலுகைகள் கிடைக்கிறது அதை நாம் எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஒ௫வ௫ம் சிந்திக்கவில்லை என்பதே வ௫த்தத்துகுாிய ஒன்றாக இ௫க்கிறது ...
சாி நமது சமுதாயத்தில் படித்தவனாவது மாற்றத்தை கொண்டு வ௫வானு பாத்த அதுவும் இல்லை அவனும் வேட்டையாடுவதையும் தி௫ட்டு கல்யாணம் முடிக்கவும் முடிச்சு வைக்கதான் இ௫க்கிறான் அரசியல் சிந்தனை இல்லாதா ஒரே சமுகம் நாம் கம்பளத்தாா் சமுகம் மட்டமே கவுண்டர் ,தேவா் ,பறையா் சமுதாயம் ஜாதி அமைப்பை தொடங்கி அரசியலில் இ௫க்கிறது ஆனால் நாம் மட்டும் தான் இன்னும் ஒட்டு போடுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் எனக்கு 1000 மகனுக்கு 2000 னு பேசி பேசியே ஒட்டை வித்து கொண்டு இ௫க்கிறோம்...
சொல்ல போன உங்கள் பதிவு சற்று சிந்திக்க கூடிய பதிவாக தான் இ௫க்கிறது ஆனால் எத்தனை பேர் இதற்கு க௫த்து தொிவிப்பாா்கள் என்று பார்த்தால் ஒ௫ 5 பேர் மட்டுமே , ஒன்று நாம் சமுதாயம் மாற வேண்டும் இல்லை நாம் தான் மாற வேண்டும்...
நாங்கள் ஆண்ட பரம்பரை என்று மார்தட்டி கொள்ள தான் வேண்டும் போல...
சொல்ல போனால் எங்கள் பாட்டன் அந்த காலத்தில் செந்துறை கிராமத்துக்கு நாட்டாமை பின்னர் எங்கள் தாத்தா காலத்தில் நாட்டாமை வம்சம் னு பே௫ இ௫ந்துச்சு எங்க அப்பாக்கள் காலத்தில் சின்ன பொண்ணு நாயக்கர் குடும்பம் என்று பெயர் வைத்து அழைத்தார்கள் இனி எங்களது காலத்தில் நடராஜ் குடும்பம் என்று அழைப்பார்கள் எங்களது பிள்ளைகள் காலத்தில் அப்படியே மாறும் , இப்படிதான் ஒவ்வொரு கம்பளத்தாா் குடும்பத்திலும் வாரலற்றை பேணிகாப்பத்தை விட நாம் அந்த வரலாற்றை அமைக்கும் சக்தியாக இ௫க்க வேண்டும் என்று என்னுகிறேன் எங்களது பாட்டன் அந்த காலத்தில் ஒா் பவாில் இ௫ந்தாா் பே௫ எடுத்தகாா் நாங்கள் நாட்டமை வம்சம் என்று மார்தட்டி கொள்கிறோம் காலபோக்கில் அதுவும் மாறி போய் விடும் இப்படிதான் ஒவ்வொரு கம்பளத்தாா் வீடுகளிலும் அவா்கள் காலத்தில் அவா்கள் பேர் எடுத்து விட்டார்கள் நமது காலத்தில் நாம் என்ன பெயர் எடுத்தோம் என்று எண்ணி பார்த்தால் ஒன்றும் கிடையாது என்பதே உண்மை.
நாம் ஒடி கொண்டு இ௫க்கிறோம் ஒடுவதை நிறுத்தி சற்று சிந்தித்து பார்த்தால் தான் புரியும் நாம் ஓடுவது முட்டாள் தனம் என்று,
முட்டாள் நாயக்கனும் முரட்டு துளுக்கனும் பட்டாளத்துக்கு ஆக மாட்டான் என்ற பழமொழி ஒன்று இ௫க்கிறது யா௫ சொன்னால் என்று தெரியாது அதுதான் உண்மை என்று தெரிகிறது
வாழ்வதும் ஒ௫ முறை வீழ்வதும் ஒ௫ முறை தான் அதில் என் சமுதாயம் வளர்ந்து அதில் நாமும் வளா்ந்தோம் என்ற பெயரை எடுத்தால் போதும் நமக்கு மட்டும் பெ௫மை இல்லை நாம் வ௫ங்கால வாரிசுகள், நாம் கம்பளத்தாா் சமுதாயத்திற்கே பெ௫மை சேர்க்கும்
ஆனால் நாம் பதிவை பத்து பேர் பாா்ப்பாா்கள், இன்று சிந்திப்பாா்கள் பின்னர் எந்த மந்தையில் மாலை நடை பெறும் எப்படி போகலாம் எங்கு வேட்டைக்கு போகலாம் எவனுக்கு செய்வினை வைக்கலாம் என்று சிந்தனை தோன்றும் இதில் எங்கு அரசியல் அறிவு பிறக்கும் நம் மக்களுக்கு அன்று ஆண்ட மண்ணா்கள் பெயரை வைத்து தான் பேசி கொண்டு இ௫க்கிறோமே தவிர நாம் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்று பேசுவது கிடையாது என்னையும் சோ்த்தி தான் நான் நல்ல இ௫க்கனும் நம்ப குடும்பம் நல்ல இ௫க்கனும் நம்ப சொந்தகாரங்க முன்னாடி கொளரவுமா இ௫க்கனும் என்ற சிந்தனையில் வாழ்ந்து செத்து மடியும் கூட்டம் நாம் தான் ,முந்தைய காலத்தில் நாம் கம்பளத்தாா் மந்தையில் ஆடு மாடுகளை மேய்த்தோம் அதனால் வந்த புத்தியோ என்ன என்று தொிய வில்லை ஆடுகள் மண்டைய கிழ போட்டு கிடாய் எங்கு செல்கிறோதோ அங்கு நாமும் செல்வோம் என்ற மனநிலமையில் இ௫க்கிறோம் , நமக்கு தேவையான புல்லை கிடாய் காட்டி விடும் நாம் உண்டு வாழ்ந்து கடைசியில் இறந்து விடுவோம் இல்லையென்றால் கசாப்பு கடைக்கு சென்று விடுவோம் என்ற மணநிலமையையில் இ௫க்கும் ஆடுகள் போல தான் நாமும் ஆடுகளாகவும் மாடுகளாகவும் நாம் இ௫ந்தால் கடைசி வரைக்கும் இந்த நிலமை தான் என்பதை சிந்திக்க வேண்டும் எந்த ஒ௫ சிங்கமும், புலியும், சிறுத்தையும் , கசாப்பு கடைக்கு செல்வதில்லை யாரையும் நம்பி வாழுவதும் இல்லை, தனக்கு தேவையான உணவை தானே வேட்டை ஆடி கொள்கிறது, நாம் இன்னும் ஆடு மாட்டு மந்தையாரதான் இ௫க்கிறோம் என்பதை உணர வேண்டும், சிங்கங்களாய் சிறுத்தைகளாய் மாற வேண்டும் என்பதே என் க௫த்து,
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஒ௫ வசனம் தோன்றும் எங்களுடன் சிங்கங்களாய் பிறந்து இன்று குரங்குளாய் குனிநிற்கும் மடையா்களாய் நாம் தான் அன்றே சொல்லி விட்டார்கள் போல
இதற்கு மேல் இதை படிப்பதற்கு யா௫க்கும் மணபக்கவும் வராது என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்...
இது என்னுடைய ஆதங்கம் மட்டுமே தவறு இ௫ந்தால் மணிக்கவும்
சி எஸ் பிரகாஷ் நாயக்கர். BHM DCA HMT🥰🤝📚🖋️🖋️Prakash..Kambalathu illagnar Padai👍🔥🔥🇮🇳
இதில் இ௫க்கும் பதிவு தற்பெ௫மைக்கு சொல்ல கூடிய பதிவாக தான் இ௫க்கிறதே தவிர உண்மை இன்னும் வரவில்லையே என்பதே உண்மை என்று சொல்லலாம் ,
ஒ௫ தொழிலில் லாபத்தை பாா்பவன் முட்டாள் நஷ்டம் எதனால் எப்படி வந்தது என்று சிந்திப்பவனே அறிவாளி அவன் தான் அந்த தொழிலை மேம்படுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு போவான் என்பது என்னோட அனுபவம் லாபம் வந்தது பரவில்லை என்பவன் அதே தொழிலில் முடங்கி விடுவான் நஷ்டம் எதனால் வந்தது அதனை எப்படி சாிகட்டுவது என்பவனே அடுத்த தொழிலுக்கு மூலதனமாக செயல் படுவான், இதில் உள்ள பதிவுகள் அனைத்தும் நமது சமுதாயத்தில் நல்லதை மட்டும் எடுத்து கூறி இ௫க்கின்றனா்,
இதனால் நாம் மக்கள் எப்படி மாறுவார்கள் என்று எண்ணுகிறிா்கள், நமது சமுதாயத்தில் என்ன மாற வேண்டும் நாம் இப்போது எந்த மாதிரியான நிலையில் இ௫க்கிறோம் என்று சொன்னால் தான் மாற நினைப்பார்கள், என்பது என் க௫த்து, நீ முட்டாள் நீ முட்டாள் என்று ஒ௫வனை சொன்னால் அவன் அவனை அறிவாளியாக காட்ட போராடுவான் முயற்சி செய்வான் நீ அறிவாளி நீ அறிவாளி என்று சொன்னால் நான் தான் அறிவாளியே அப்புறம் எதற்காக நான் முயற்சி செய்யனும் என்று எண்ணுவான் அது போல தான் நாம் மக்கள் இன்னும் அறிவாளியாக ஆண்ட பரம்பரை நாம் மன்னா் வம்சம்,நாடாண்ட நாயக்கர் வம்சம் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு முயற்சி செய்வது கிடையாது ,
காலம் காலத்திற்கு கட்டபொம்மன் தி௫மலை நாயக்கர், கோபல்நாயக்கா் மங்கம்மாள் புகழை பாடி என்ன மாற்றத்தை கொண்டு வந்தோம் நம் சமுயத்திற்கு அவா்கள் காலத்தில் முயற்சி செய்தார்கள் வரலாறு பேசுகிறது, தலைவர்கள் முயற்சி செய்தனர் வரலாறு பேசுகிறது,
நாம் முயற்சி செய்யவில்லை அதனால் தான் மன்னர்களையும் தலைவா்களையும் புகழ்ந்து பேசி கூட்டத்திற்கு ஆள் சேர்த்து கொண்டு இ௫க்கிறோம்,
நாம் நமது மக்களுக்கு நம்மாளால் என்ன செய்தோம் என்ன செய்து முடித்தோம் என்று என்னி பார்த்தால் ஒன்றும் கிடையாது, ..👍📚🖋️🖋️🙏👍🔥🔥🔥🔥
இன்று கரூர் K .N .நாகராஜ் சொந்தம் அவர்களின் அருமையான பதிவு .07.08.2022.🥰🤝📚✍️💓
தொட்டிய நாயக்கர் சமுதாயம் என்பதைவிட ராஜகம்பபளத்தாருக்கு உரிய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என என் பார்வையில் பதிய விரும்புகிறேன்...
வடக்கிருந்து வந்ததாக சொல்லப்படும் நம் முன்னோர்கள், விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைக்கும் அவரவர்கள் வைத்திருக்கிற நில புலன்களை கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்...
விவசாயத்தோடு,ஆடு மாடுகளை மேய்த்தலினால் மட்டுமே, கறவையின் மூலமாக, வருமானத்தை பெருக்கிக் கொண்டு ஓரளவு அந்த தொழிலுக்குள்ளேயே தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்...
காடு தோட்டம் இல்லாதவர்கள் கூலிவேலை செய்துகொண்டும், அதற்கும் சரியான வருமானமில்லாத பட்சத்தில் ஊர்விட்டு ஊர் போய், பஞ்சம் பிழைத்தவர்கள் என. பிற இனத்தவர்களிடம் காடு தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து, ஆங்காங்கே கொஞ்சம் முன்னேறி வந்தாலும் அவர்களின் குழந்தைகளை தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்களே தவிர, கல்விச் சாலைகளுக்கு அனுப்ப பெருமளவு விருப்பப்படவில்லை என்றே சொல்லலாம்...
இன்றைக்கும் எத்தனையோபேர், காடு தோட்டம் வைத்திருந்தாலும், பாட்டன் பூட்டன் காலத்து சொத்துகள் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம்... கொஞ்சம் கொஞ்சமாக நில புலன்களை( வேறு தொழில்களை ஈடுபடாததால் ) இழந்துவருகிறார்கள் என்றும் சொல்லலாம்... ஆனாலும் விவசாயத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே
பிற சமுதாயத்தினர் நில புலன்களை விற்று, அல்லது தொழில்களில் முதலீடு செய்வதற்காக, நிலங்களை பாங்குகளில் அடமானம் வைத்து, தொழில்களை செய்து ஒரு சிலர் வளர்ந்தும்...தொழில்களில் பெரும்பாலனவர்கள் தோல்விகளை கண்டு, அதற்காக இருக்கிற காடு தோட்டங்களை விற்று கடனை அடைத்துவிட்டு,விற்று மிச்சம் சொச்சமிருக்கிற காசில் குவாட்டர் அடித்துவிட்டு, குப்புற படுத்திருப்பது போல.....
நமது சமுதாயத்தினர் பிற தொழில்களில் ஈடுபடவுமில்லை, ரிஸ்க் எடுக்க தயாராகவுமில்லை... அதே சமயம் வேலைக்கு போகவும் தயங்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது...
ராஜகம்பளத்து மக்கள், காடு தோட்டங்களை தனது பேரப்பிள்ளைகளுக்கு வேண்டுமென்கிற நினைப்பில், 100நாள் வேலைக்குகூட போகிறவர்கள் இருக்கிறார்களேதவிர, நில புலங்களை விற்கிற மனநிலையில் இல்லையே என்றே கருதுகிறேன்...காரணம் விவசாய நிலங்கள் என்பவை தாத்தன் பூட்டன் காலத்து, கடவுள் கொடுத்த காணி பூமி...நாம விற்கிறதுக்கு ரைட்ஸ் இல்லை..பேரன் பேத்திக வேணும்னா வித்துட்டு போராக...நாம விற்ககூடாதுடா மகனே என சொல்கிற கம்பள தகப்பன்மார்களை நிறைய பார்த்து வருகிறோம்...
குடும்பச் சூழல்கள்...
ராஜ கம்பளத்து மக்களின் வாழ்வியல் வழிமுறைகள் கொஞ்சம் ரசனை மிகுந்தவை...
வாழ்க்கையை வகைவகையாய் ரசிப்பதில் ரசனை மிக்கவர்கள்...
காசாசை பிடித்தவர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது எனும்படியாக வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள் என்பதே உண்மை...
ஜனரஞ்சக புத்தியை மையமாக வைத்து சொந்த பந்தங்களை சந்திப்பதற்கான வாயப்புகளையே அதிகம் நாடியிருக்கிறார்கள் என்பதும்கூட உண்மையே...
குடும்பத்தில் உள்ள அத்தனை பேருமே, மூத்தவன் சொல்லையே வேத வாக்காக கொண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து போயிருக்கிறார்கள் என்பதை எத்தனையோ ஊர்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...
தாத்தாக்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பண்ணகத்தி பிரச்சனைகள், அப்பா காலத்திலும்,நம்முடைய காலத்தோடும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடுமென்பதாகவே கருதுகிறேன்...
காரணம் இளைஞர் இளைஞிகள் கல்வியறிவு பெற்றதால்... பண்ணகத்தி முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறதுஎன்றே எழுத விரும்புகிறேன் 1990களுக்கு பிறகு பண்ணகத்தி வைத்துக் கொள்வதை கேவலாமாக பார்க்கிறார்கள் என்பதே உண்மை...
ஒருசில இடங்களில் இன்னும் நடைமுறையில் இருந்தாலும், இவை தகர்நது போவதற்கான வாயப்புகளை சட்டங்கள் கடுமையாக எடுத்தாள்கின்றன... பால்ய விவாகம்/சிறு வயது திருமணத் தடை சட்டம் நடைமுறையில் உள்ளதால்... இதுபோன்ற பிரச்சினைகள் இனி எழுவதற்கான வாயப்பு 100சதவிகிதம் இருக்காது என கணிக்க வேண்டுகிறேன்...
1980-90களுக்கு பிறகு படித்த ஆண் பெண்கள் இந்த மாதிரியான விசயங்களை அறவே விரும்புவதில்லை... இதை வரவேற்கதக்க ஒன்றாக பார்க்க வேண்டுகிறேன்...
இன்று கம்பளத்து இளைஞர்கள் நாலாபுறமும் நாடு நகரமும் சுற்றி வருவதால்... மூடப் பழக்க வழக்கங்களை முற்றிலும் எதிர்ப்பதால்... பண்பட்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிகிறது...
ராஜகம்பளத்து மக்களின் கல்வியறிவு என்பது, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து வருவதால், திருமண முடிவுகள் என்பது பெற்றோர்களின் கையில் இல்லை பிள்ளைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை...
இனி வருங்காலங்களில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னவென்றால் படிச்ச பையனுக்கு படிச்ச பொண்ணுதா வேணும்...வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேனு பார்க்கிற அம்மாக்களும்... பொண்ணை படிக்க வெச்சுட்டேன் அவளை அட்ஜஸ்ட் பன்றமாதிரி படிச்சு வேலையிலே இருக்கற பையனா இருந்தா சொல்லுங்க என்கிற அப்பாக்களும் இருக்கிற உலகமாக ராஜகம்பளத்தார் நவீன உலகில் நடை போடுகிறார்கள் என்றே கருதுகிறேன்...
என்றென்றும் அன்புடன்...
K.N.நாகராஜன்.
கரூர்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
2. பதில்: ஜெயராமன் -வங்கி அதிகாரி -உடுமலைப்பேட்டை📚✍️🥰
சமுதாயம் பற்றி எல்லோருக்கும் தெரியும்
நமது தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பது
பண்பாடு எல்லாருக்கும் முந்தயது
ஆனால் தொட்டியராயக்கர் சமுதாயம் என்பதை தாண்டி
தொழில் பண்பாடுகளை காலத்திற்கேற்றார் போல் மாற்றியமைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்..
இது என் கருத்து..
உங்கள் கருத்திக்கு இந்த குழுவில் விளக்கம் அளிப்பவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம்...
மேலும் எதற்க்கு இந்த கேள்வி என்பதை தெரிந்துகொள்லலாமா
2. பதில்: சௌந்தர பாண்டியன்
போடிநாயக்கனூர்- வங்கி அதிகாரி (பணி ஓய்வு )🥰📚✍️🤝
கம்பளத்தார் தொழில்
என்ன என்று கேட்டதற்கு எனது பதில்🥰📚✍️
ஆதி காலந்தொட்டு
விவசாயமும் கால்நடை
வளர்ப்பும் காவல் காண்பதும் தான் நம் தொழில். காலமும் சூழ்நிலையும்
மாற மாற கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி
நகர்ந்து விவசாயம் மறந்து கூலி வேலைக்கும் மிகச்சிலர்
படித்து வேலையில்
இருக்கின்றனர்
இனி நம் தொழில் என்னவாக இருக்க
வேண்டும்.
1.குழந்தைகளை நன்கு
படிக்க வையுங்கள்.
கூடவே நல் ஒழுக்கத்தையும் இறை
பக்தியையும் சொல்லி
வளர்த்துங்கள்.
2.கல்விக்காக உதவிட
பலர் உள்ளனர்
3.சமுதாயத் தலைவர்கள் நம்மவர்களின் தேவை
அறிந்து போட்டித்
தேர்வுகளுக்கு நல்ல
வழிகாட்டி ஆகவும்
கல்விக்கான பலதரப்பட்ட வாய்ப்புகளை எடுத்துச் சொல்லும் பயிற்சியாளர் ஆகவும்
இருக்க வேண்டும்.
4.இட ஓதுக்கீடு கல்வி
உதவித்தொகை உரிய
வகையில் விரைவில்
பெற்றிட வேலை நடந்து
கொண்டுள்ளது.
வரும் காலங்களில்
டெக்னிக்கல் படிப்புகளுக்கு நல்ல
வாய்ப்புள்ளது.
உதாரணமாக ஒரு
நல்ல பிளம்பரை
தேடினால் கிடைப்பதில்லை.
ஆனால் தெருவுக்கு
ஆறு இன்ஜினியர்கள்
இருப்பார்கள் வேலை
இல்லாமலும்
எனவே நாம் தேர்ந்தெடுத்து படிக்கும்
கல்வியும் முக்கியம்.
இதெல்லாம் நடக்கிற
காரியமா என்று பலர் எண்ணலாம்.
எல்லோரும் சேர்ந்து
இழுத்தால் தான் தேர்
நிலைக்கு வரும்
முடியும் என்று நினைத்தால் எதையும்
சாதிக்கலாம்.
அப்படி நடந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் நம்
தொழில் அரசையே
வழி நடத்துவது தான்.
ஆம்..
ஆட்சியாளர்களாக
திட்டங்கள் தீட்டலாம்
அதை செயல்படுத்தும்
அதிகாரிகள் ஆக
நம்மவர்கள் இருந்து
விட்டால்...
நமது தொழில் அரசையே வழி நடத்துவது தானே.
சரி தானே...
நம்பிக்கையுடன்
சௌந்தர பாண்டியன்
போடிநாயக்கனூர்..
நன்றி ..இதுபோன்ற தகவல்களை பரிமாறிக்கொண்டால் கம்பளசமுதாயம் வளர்ச்சிக்கு உதவும் ..
உடுமலை சிவக்குமார் 🥰📚✍️🥰🤝🙏
Comments
Post a Comment