என் கேள்வி : எந்த ஒரு கோவிலின் எந்த ஒரு விஷயம் உங்களை வியப்பில் ஆழ்த்தியது?

 

 பதில் : பரத்குமார் தம்பியின் ஆன்மீக பயணம் ...

 

கடந்த ஒரு மாதமாகவே இந்த பதிவை எழுத நினைத்தேன்.அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அமையவில்லை என்றே கூறவேண்டும்.


நேரடியாக அந்த அதிசயத்தை கூறுவதை விட சற்று விளக்கமாக கூறினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும், செல்லவேண்டும் என்ற எண்ணம் வரும் என்ற நம்பிக்கையில்,


பர்வதமலைக்கு பயணிக்கலாம் வாருங்கள் !!

பர்வதம் என்றால் மலை,பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை.கிட்டத்தட்ட 4560 அடி உயரம் !!


நான்கு மாதங்களுக்கு முன்பு என் தம்பி,பர்வதமலை பற்றிய ஒரு காணொளியை அனுப்பினான்.தீவிர சிவ பக்தர்களாகிய எங்களுக்கு,காணொளியை பார்த்ததுமே ஏதோ ஒரு ஈர்ப்பு,கண்டிப்பாக மல்லிகார்ஜுனரை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

இம்முறை விடுமுறைக்கு இந்தியா வந்ததும் பர்வதமலை செல்வதற்கான திட்டம் போடப்பட்டு,சென்ற மாதம் பர்வதமலைக்கு சென்றோம்.

நான்,என் தம்பிகள் இரண்டு பேர் மற்றும் அவர்களது அலுவலக நண்பர்கள் நான்கு பேர் என மொத்தம் 7 பேர் மலையேற தயாரானோம்.

மல்லிகார்ஜுனரை தரிசிக்க இரண்டு வழிகளில் செல்லலாம்.

1) கடலாடி கிராமத்தில் இருந்து காட்டு வழியாக பயணித்து பிறகு மலைப்பாதைகள் வழியாக செல்லலாம்.

2)தென்பாதிமங்கலம் கிராமத்தில் இருந்து 1.7 கிலோமீட்டர் சிமெண்ட் ரோட்டு,அதற்கு பிறகு 1263 படிகளை கடந்து,ஒன்றரை கிலோமீட்டர் மலைப்பாறை ஏற்றம் வழியாகவும் செல்லலாம்.

இந்த இரண்டு வழிகளும் சந்திக்கும் இடம் கடப்பாறை மலை.கடப்பாறை மலையை பற்றி பின்னர் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக,பொது மக்கள் மற்றும் டூரிஸ்ட்கள் தென்பாதிமங்கலம் வழியாகவே பயணிப்பார்கள்.சிமெண்ட் ரோடு,படிக்கட்டுகள் என கடலாடி வழியை காட்டிலும் இந்த வழி சற்று எளிது.

நாங்கள் ஏறும்போது கடலாடி வழியாகவும்,இறங்கும்போது தென்பாதிமங்கலம் வழியாக இறங்கிவிடலாம் என முடிவு செய்து,

சாப்பிட்டால் மலை ஏறுவது சிரமம் என்பதால் சாப்பிடாமல்,பயணத்திற்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள்,குளுக்கோஸ் என அனைத்தையும் வாங்கி,

அதிகாலை 04:30 மணிக்கெல்லாம் திருவண்ணாமலையில் இருந்து பேருந்தை பிடித்து 05:30 கடலாடி கிராமத்திற்கு வந்துவிட்டோம்.

ஒன்றரை கிலோமீட்டர் கிராமத்தை கடந்து மலை பாதைக்கு வந்தோம்.


மலை ஏற தேவையான சக்தியை தாருமைய்யா என்று அடிவாரத்தில் இருந்த விநாயகரை வணங்கி பயணத்தை தொடங்கினோம்.

ஆரம்பத்தில் சமநில பயணமாக எளிதாகவே இருந்தது,போக போக பாதை கற்களும்,பாறைகளுமாக,ஒற்றையடி பாதையாக ஒரு காலை ஊனி நடப்பதற்கே சிரமமாக இருந்தது.


மலைப்பாதை முழுக்க வெள்ளை நிற பெயிண்டில் அம்புக்குறிகள் இருந்தது.அம்புக்குறிகளை தவறவிட்டால் கண்டிப்பாக பாதை மறந்து தொலைந்து விடுவது உறுதி.

அதிசயம் ஆரம்பம் ஆகும் அந்த நேரம் வந்தது.

பாதை சமநிலத்தை தாண்டி சற்று கடுமையாக மாறுவதற்கு முன்பே,

எங்களை மேலே அழைத்து செல்ல பைரவர்கள் வந்துவிட்டார்கள்.


இரண்டு பைரவர்கள்,ஒருவர் முன்னாடியும் மற்றொருவர் பின்னாடியும் எங்களை வழிநடத்தி அழைத்துச்சென்றனர்.

ஒவ்வொரு கால்மணிநேரத்துக்கு ஐந்து நிமிடம் ரெஸ்ட் என்கிற அடிப்படையில் பயணித்தோம்.

நம்பமாட்டீர்கள்,ஆனால் உண்மை.

நாங்கள் எங்கெல்லாம் அயர்ச்சி காரணமாக அமர்ந்தோமோ அங்கெல்லாம் பைரவர்களும் அமர்ந்தார்கள்,எங்களுக்காக காத்திருந்தார்கள்.

கூட்டத்தில் கடைசி ஆள் எழும் வரை பின்னாடி எஸ்கார்ட் செய்யும் பைரவர் எழும்பவே இல்லை.



எங்களுக்கு மட்டும் தான் துணை வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

மேலிருந்து கீழே ஒருவர் இறங்கி வந்தார் அவருக்கும் துணையாக ஒரு பைரவர் இருந்தார்.

அப்போது தான் அவரிடம் கேட்டோம்.

எப்படிங்க இந்த நாய்கள் நம்ப கூடவே வருது ?

"தம்பி இவங்கல்லாம் சித்தர்கள்னு நம்புறோம்.தினமும் மேல இருக்குற கோயிலுக்கு அன்னதான அரிசி எடுத்துட்டு போறேன்,எப்போதும் எனக்கு துணையாக இவங்க வந்துவிடுவார்கள்,வழியில் தேனீக்கள்,விஷ வண்டுகள் எதுவும் இருந்தால் முன்கூட்டியே உணர்ந்து,வேறு பாதையில் அழைத்து செல்வார்கள்என்றார்.

அவர் கூறியது போல்,நாங்கள் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கும் போது எங்களுக்கு பின்னால் இன்னும் இருவர் ஏறி வந்தனர் அவர்களுக்கு துணையாகவும் பைரவர்கள் இருந்தார்கள்.



சிறிது தூரம் ஏறிய பின்பு,அதுவரை அமைதியாக வந்த பைரவர்கள் குரைக்க தொடங்கினர்.என்னவென்று பார்த்தால் குரங்கு கூட்டம் ஒன்று அந்த பாதையை கடந்தது.

குரங்கு கூட்டம் கடக்கும் வரை முன் சென்ற பைரவர்கள் நகரக்கூட இல்லை,குரங்கு கூட்டம் சென்றவுடன் தான் எங்களை அழைத்து சென்றனர்.

அதே போல் ஒரு குறிப்பிட்ட எல்லையை கடந்த பின் எங்களை வழிநடத்திய பைரவர்கள் வேறு இரு பைரவர்களிடம் எங்களை Hand over மீண்டும் கீழே சென்றுவிட்டனர் (கீழிருந்து வருபவர்களை அழைத்து வர).

கடப்பாறை மலை வரை துணை வந்தவர்கள்,அதற்கு பின் திடீரென காணாமல் போய்விட்டனர்.எப்போது சென்றனர் என்பதை நாங்கள் கவனிக்கவே இல்லை.

எப்படி இவர்களுக்கு வழி தெரிகிறது? எப்படி இவர்கள் ஏறும் அனைவருக்கும் வழிநடத்தியாக இருக்கிறார்கள் ? pheromones என்ற அறிவியல் காரணம் சொல்லப்பட்டாலும்,எப்படி நாம் ரெஸ்ட் எடுக்கும் நேரமெல்லாம் அவர்களும் வெயிட் செய்து நம்மை அழைத்து வருகிறார்கள் என்பது அதிசயமே.

இதெல்லாம் நடக்கும்போது கூட எங்களுக்கு அதிசயமாக தெரியவில்லை,சாதாரணமாக கடந்துவிட்டோம் பயணத்தை முடித்து வீடு திரும்பியவுடன் நினைத்து பார்க்கும் போது தான் அதிசயமாக தெரிந்தது.

சரி கடப்பாறை மலையில் இருந்து பயணத்தை தொடருவோம் வாருங்கள்.

கடப்பாறை மலை :


மிகவும் செங்குத்தான மலை.மலைகளில் பாதிக்கப்பட்ட இரும்பு கம்பிகளை பிடித்து கொண்டு,காலில் பாதி பாதம் படியும் அளவிற்கு மட்டுமே பாறையில் குடைய பட்ட சிறு துவாரத்தில் பேலன்ஸ் செய்து மேலே ஏறவேண்டும்.

கிட்டத்தட்ட தவழ்ந்து கொண்டு தான் ஏறும் நிலை.ஏறும் போது எக்காரணம் கொண்டும் கீழே பார்க்கவே கூடாது.பல்லாயிரம் அடி பள்ளம்,சிறிது ஸ்லிப் ஆனாலும் சிதறி விடுவோம்.

அதைத்தாண்டிய பின் கிபி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குறுநில மன்னனின் சிறு மணிமண்டபம் ஒன்று இருந்தது.


மண்டப நுழைவு வாயிலில் இருந்து க்ளிக்கியது

அங்கே அமர்ந்து சற்று ஓய்வு எடுத்த பின் மீண்டும் கடைசி படிகளில் ஏறி கோயிலை அடைந்தோம்.

இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பு.

மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேகம்,பூஜைகள் செய்யலாம்.மேலே சென்றதும் கும் இருட்டான கோயிலுக்கு சென்று அகல்விளக்குகள் ஒளியில் மிளிரும் மல்லிகார்ஜுனரை தரிசித்தோம்.


அதுவரை இருந்த அயர்ச்சி அனைத்தும் அவரை கண்டதும் காணாமல் போனது.அப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்,அதை அனுபவித்தால் மட்டுமே விளங்கும்.

பிறகு பிரமராம்பிகை தேவியை வழிபட்டு,அருகில் இருந்த அன்னதான மடத்திற்கு சென்றோம்.அங்கே இருந்த பெரியவரிடம் பேசிய போது,

சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச்சென்ற போது அதிலிருந்து விழுந்த சிறு துண்டு தான் இந்த மலை என்ற ஐதீகம் இருப்பதாக சொன்னார்.அதனால் இந்த மலையில் நிறைய மூலிகை செடி இருப்பதால் ஒரு முறை ஏறினாலே உடல் purify ஆகிவிடுமாம்.

ஏறுவதற்கே சிரமமாக இருக்கிறதே இங்கு எப்படி இரும்பு கம்பிகள்,படிக்கட்டுகள்,கோயில் கட்டுமானம் எல்லாம் என்று கேட்டபோது.

இந்த கோயிலின் வரலாறு பல்லாயிரம் வருடங்கள் பழமையானது.ஆரம்பகாலத்தில் இங்கும் ஏறும் வசதிகள் மிகவும் கடினம்,பிறகு மல்லிகார்ஜுனரை தரிசிக்க வருபவர்கள் அவர்களால் முடிந்த கம்பிகள்,சிமெண்ட் மூட்டைகள் போன்ற கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வந்தனர்.

அவர்களை தூக்க முடிந்த தூரம் வரை எடுத்து வைத்துவிடுவர்.அவர்களுக்கு பின்னால் வருபவர்கள் அங்கிருந்து மேலே கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்து கட்டுமானம் நடந்தாக கூறினார்.

மேலும் மலையை சுற்றி நிறைய சித்தர்கள் இருப்பதாகவும் அவர்களின் ஜீவ சமாதிகளும் இருப்பதாக கூறினார்.(நாங்கள் கீழே இறங்கும் போது சித்தர் ஜீவ சமாதியை கடந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

இவ்வளவு கடினமாக பாதை இருந்தாலும்,இதுவரை மலையேற்றத்தில் மல்லிகைஜுனரை தரிசிக்க வந்தவர்களில் ஒருவருக்கு கூட மரணம் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.

மதியஉணவாக சுடச்சுட தயிர்சாதமும் ஊறுகாயும் தந்தார்.எங்களுக்கு அது அமிர்தம் போலவே இருந்தது.

அவரிடம் பேசி கீழே இறங்க ஆரம்பித்தோம்.


இம்முறை இரும்பு படிக்கட்டுகள்.ஓரிரு நட் போல்ட்டுகள் பதிய பட்ட செங்குத்தான இரும்பு படிகளில் பொறுமையாக அடிமேல் அடி வைத்து கீழே இறங்கினோம்.

கடப்பாறை மலையில் இருந்து கீழே வந்ததும்,மேலே சொன்னது போல்,தென்பாதிமங்கலம் வழியாக பயணத்தை தொடர்ந்தோம்.

கடும் பாறைகள்,பிடித்து கொள்ள இரும்பு ஹாண்டில் கம்பிகள் என இறங்குவதற்கு எளிதாக இருந்தாலும்,கீழே இறங்கும் force,எங்களை நாங்கள் நினைத்ததை விட வேகமாக கீழே தள்ளியது.

பாறைகளை தாண்டியதும் 1263 படிக்கட்டுகள்.எங்களை வரவேற்க குரங்கு கூட்டங்கள் இருந்தது.

இம்முறை பைரவர்களை துணை இல்லை.குரங்கிற்கு பயந்து எடுத்தோம் ஓட்டம்.10 நிமிடங்களில் 1263 படிகளை கடந்து சிமெண்ட் பாதைக்கு வந்தடைந்தோம்.

1.7 கிலோமீட்டர் சிமெண்ட் ரோடு பாதையை கடந்ததும் இடது புறத்தில் அகோர வீரபத்திரத்திரர் கோவில் இருந்தது.

அவரை தரிசித்து 24 மணி நேர அன்னதான கூடத்தில் சுடச்சுட சாம்பார் சாதமும் உப்பு மாங்காய் பட்டையும் சாப்பிட்டு மீண்டும் 1 கிலோமீட்டர் நடந்து கிராமத்தின் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தோம்.

மறக்கமுடியாத அனுபவம்.

இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது,எப்படி நான் இந்த பயணத்தை முடித்தேன் என்று.

எல்லாம் ஈசனின் செயல் !!

மீண்டும் இங்கே செல்லவேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

ஈசனின் அழைப்பில் மீண்டும் அவரை தரிசிப்போம் என நம்புகிறேன்.

மலை ஏற எடுத்துக்கொண்ட நேரம் : 4 மணி நேரம்.

மலை இறங்க எடுத்து கொண்ட நேரம் : 2.5 மணி நேரம்.

நீங்களும் கண்டிப்பாக மல்லிகார்ஜுனரை தரிசியுங்கள்.ஈசனை உணருங்கள்.

ஓம் நம சிவாய !!

நன்றி !!பரத்குமார் 

ABK

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰