அரசியல் உரையாடலைப் வளரிளம் பருவத்தில் தொடங்குவோம்!

.

நாம் பொதுவாக மேல்மட்ட அளவுல சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் எம்.எல்.., எம்.பி. சதவீதக் கணக்கை எடுத்துப் பெண்கள் சதம் குறைவுன்னு பேசறோம் கண்ணு.”

அப்ப எங்க எதையும் சேர்த்துப் பேசணும்? மாற்றம் எங்கிருந்து வரணும்னு சொல்றீங்க அப்பா?”

நம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைச்சாலையில் இருக்கும்போது, வீட்டிலிருந்த தன் 13 வயது மகள் இந்திரா பிரியதர்சினிக்கு உலகத்துல இருக்கற நாடுகளின் வரலாற்றைக் கடிதமாக எழுதி அனுப்பி வைச்சாரு. 13 வயது இந்திராவும் அதைப் படிச்சிட்டு பதில் கடிதம் எழுதுவாங்க. இந்திராவின் அப்பாவும் நம் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அப்போ எழுதியஉலக வரலாறு குறித்த பார்வைஎன்ற தலைப்பில் இன்றும் புத்தகமாகக் கிடைக்குது. அவர் அதைச் சிறைச்சாலையில் எந்தப் புத்தகத்தையும் பார்வையிடாமல் தன் நினைவிலிருந்த தகவல்களைக் கொண்டே எழுதியிருப்பது வியக்கத்தக்கதாக இருக்கு. நான் ஏன் சொல்றனா குடும்பத்தில் அரசியல் சார்ந்த அறிவு இருக்கவங்களேகூடப் பொதுவாகப் பெண்களுக்கு அரசியல் சார்ந்த அறிவு கைக்கொள்ள பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அப்பா பெண்களை அரசியல்படுத்தும் அந்தப் பாத்திரத்தைக் குறிப்பாக எடுக்கணும். அதற்குக் குடும்பத்துல வாய்ப்பில்லன்னா பள்ளில ஆசிரியர் அந்தப் பொறுப்பை எடுக்கணும். அதுவும் குறிப்பாகப் பதின்ம பருவம் கேள்வி கேட்க, உரையாடத் தொடங்கும் பருவம். அப்போ கட்டாயமாகத் தொடங்கணும். பல உரையாடல்கள் அது சார்ந்து குடும்பத்திலும் வகுப்பிலும் நடைபெறணும். அரசியல்னா என்னன்னு எளிதில் புரியும்படி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டு உரையாடல் நடைபெறணும் தென்றல்.”

வகுப்புல எதாவது பேசினா, வகுப்புல அரசியல் பேசக்கூடாதுன்னு சொல்லிடறாங்க அப்பா.”

அரசியலுக்கும் அரசியல் கட்சி சார்ந்து பேசறதுக்குமான வித்தியாசத்தை அனைவரும் முதலில் உணரணும். பதின்ம வயதுல இந்த உலகத்துல நடக்கிற விசயங்களைக் கேள்வி எழுப்பும், கூடவே தனக்கான ரோல் மாடலைத் தேர்வு செய்து தனக்கான அடையாளத்தைக் கண்டடையத் தொடங்கும் தருணம் அது.”

சரியாக வழிகாட்டப்படலன்னா அது மூடத்தனமாக நடிகர்களின் அடையாளத் தேர்ந்தெடுத்தலில் முடியும். அவரின் நடிப்பை, உண்மைத்தன்மை இல்லாத பேச்சை, சினிமா மூலம் பின்தொடரத் தொடங்கிடுவாங்க. அந்த இடத்தைச் சமூகத்திற்காகப் பாடுபட்ட உள்ளூர் தலைவர்களை இட்டு நிரப்பணும். பொதுவாக அவர்களின் தந்தை, தாயையும் கூடவே பிடித்த ஆசிரியர்களையும் முன்மாதிரியாக எடுப்பர். அவர்களிடம் முன்மாதிரியாக எடுக்க வைக்கும் மனநிலையை உரையாடல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தணும். பள்ளிகளில் தலைவர்களுக்கான விழா, நூலகத்தில் அவர்கள் குறித்த நூல்கள் உள்ளூரில் சமகாலத்தில் வாழும் பங்களிப்பாளர்கள் என இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக அமையணும் கண்ணு.”

அப்போ ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பெடுத்து பண்பாட்டு மாற்றம் கொண்டு வரணும்னு சொல்றீங்களா அப்பா?”

சமூகத்தை முன்னோக்கி நகர்த்த நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய விசயம் குறிப்பாகக் குடும்பங்களில் பள்ளிகளில் முன்னெடுக்கணும் தென்றல்.”

சட்டமன்றம், நாடாளுமன்றத்துல பிரதிநிதித்துவம் குறைவு எனச் சொல்றோம். மாறணும்னு சொல்றோம். அப்போ எப்போ பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் சொல்லுப்பா?”

நம்ம ஊர்ல பொங்கல் விழா, இல்ல தலைவர் பற்றி விழா எடுக்கும் போது பெண்கள் முன்னெடுத்து, அட பங்கெடுத்தாவது பார்த்திருக்கயா? சொல்லு கண்ணு.”

எனக்குத் தெரிந்து அப்படி ஒரு பொண்ணுகூட முன்னெடுத்ததில்லை. பெண்கள் பங்கெடுத்து நான் பார்த்ததுமில்லைப்பா. ஏன்?”

பொதுவெளி அதிலும் குறிப்பாக அரசியல் வெளி என்பது ஆண் மையமாக ஆக்கப்பட்டிருக்கு. கீழ்மட்டநிலையே பெண்கள் பங்கெடுக்கலன்னா எங்கிருந்து எம்.எல்.ஏம், எம்.பி. வருவாங்க நீ சொல்லு கண்ணு?”

அதென்னவோ நீங்க சொல்றது சரிதான்பா.”

பொதுவாவே சமூகத்துல அரசியல் அறிவு குறைவா இருக்கு. பெண்களுக்கு அரசியலெல்லாம் எதுக்கு? பெண்ணுடலில் கெளரவம், புனிதம் எல்லாம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், அவள் வெளியே போனால் அது கெட்டுவிடும் எனச் சமூகம் புறக்கணிப்பதெல்லாம் மிகப்பெரிய பின்னடைவு, கிராம அளவுல பண்பாட்டுத் தளத்தில் பெண்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்படணும். அவர்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்படணும். அவர்களுக்கான உரிமைகளைப் பேசவாவது இந்தச் சமூகத்தில் அனுமதிக்கப்படணும்.”

அரசியல் அறிவியல் படிப்போ ஏதோ கடைசியா தேர்ந்தெடுக்கிற மதிப்பில்லாத படிப்பா பார்க்கப்படுது. அதனை விரும்புவர்களும் எடுத்துப் படிப்பதில்லை. விரும்பிப் படிக்கணும்னு இருக்கறவங்களுக்குப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்திருக்கலாம். படிப்பெல்லாம் வருமானம் கிடைக்குமா என்று பார்த்தே தேந்தெடுக்கப்படுவது வேதனைக்குரியது.”

அரசியல்னா நேர்மையா இருக்க முடியாது. பல தில்லுமுல்லுகள் பண்ணும் அப்படிங்கிற எழுதப்படாத விதி வேற இருக்கு. அரசியலில் நேர்மையா இருக்கணுங்கிற விழிப்புணர்வு எல்லோர்கிட்டயும் வரணும்.”

உங்களை மாதிரி அப்பா தன் குழந்தைக்குப் பொதுவெளியைப் பயில வாய்ப்பை ஏற்படுத்தணும். கிராம அளவிலிருந்து பெண்களுக்கு உரிமைகள் கேட்கும். அங்கீகரிக்கப்படும் வெளி ஏற்படணும். ஆனா, பல பெண்கள் பங்கெடுத்தால்தான் ஒரு போராட்டமே வெற்றி பெறுது. பெண்கள் போராட்டத்துல பங்கெடுக்கத்தான் போராட்டமே வலுப் பெற்று வெற்றி பெறுது.”

நீ சொல்றது சரிம்மா. அதானலதான் சமூகத்துல பாதி எண்ணிக்கையில் இருக்கற பெண் சக்தியை இந்தச் சமூகம் பயன்படுத்தினாதான் முன்னேறும் கண்ணு. பெண்ணை வெளில விடாம வைச்சிருந்தா சமூகம் தான் பின்னோக்கிச் செல்லும் தென்றல்.”

நம் சமூகத்துல மாற்றம் நடக்கும்னு நான் நம்பறேன்பா. நேரு எழுதின உலக வரலாறு ஓர் பார்வை புத்தகத்தை நூலகத்துல பார்த்தேன். அதை எடுத்துப் படிக்கறேன். அப்புறம் அரசியல் தலைவர்கள் பற்றியும் படிக்கணும்னு ஆர்வம் வந்திடுச்சுப்பா. செய்தித்தாள் படிச்சிட்டு நண்பர்களோடு உரையாடறேன். அவங்களும் செய்தித்தாள் படிக்கத் தொடங்கிருப்பாங்கப்பா. சீரியல் பத்தி பேசிக்கிட்டிருந்த நட்புக்குழு இப்போ நாட்டு நடப்பைப் பேசறோம்பாஎன்று பெருமிதத்துடன் சொன்னாள் தென்றல்.

இப்படியெல்லாம் அப்பா உரையாடியதன் விளைவோ என்னவோ அரசியல் அறிவியல் எடுத்துப் படித்து இன்று நகராட்சிக்கு சேர்மனா அமர்ந்தாள் தென்றல். தன் அப்பாவின் உரையாடல்களை அசைபோட்டபடி நாளை நகராட்சிக் கூட்டத்திற்குத் தயாரானாள். மிக இளம் வயதில் அந்த நாற்காலியில் அமர்ந்த பெண் என்ற பெயரையும் கைக்கொண்ட பெருமையைக்கொண்டவள் தென்றல் என்று தொலைக்காட்சிப் பெட்டியெல்லாம் ஊரெல்லாம் கூவ, அவள் பெற்றோருக்குப் பெருமிதம் ததும்ப, அவள் பலருக்கு முன்னோடியாக இருக்கிறாள் என்பதை மறுக்க முடியாது. மாற்றம் சமத்துவம் மலர பரவட்டும்.

(தொடரும்)
படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰