என் கேள்வி : சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?
என் கேள்வி :
சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?
சொந்தமாக மிகவும் கஷ்டப்பட்டு கடன்
வாங்கி
வீடு
கட்டும் நடுத்தர மக்களுக்கு நான்
ஏதாவது
ஒரு
பயனுள்ள தகவல்
தர
வேண்டும். அது
மிக
முக்கியமானதாக இருக்க
வேண்டும். நீங்கள் இன்று
இல்லாவிட்டாலும் நாளைக்கு வீடு
கட்டுவதற்கு நான்
சொல்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதனால்
தயவு
செய்து
எல்லோரும் தொடர்பு படியுங்கள். வாருங்கள் பதிலுக்கு போகலாம்!!
வீட்டைக் கட்டிப் பார்!
கல்யாணம் பண்ணிப்பார்!! , என்று
பெரியவர்கள் சொல்வார்கள். கல்யாணம் செய்வது எவ்வளவு கடினம்
என்று,
90's kids 2K kids ஐ
கேட்டால் கூட
சொல்லி
விடுவார்கள். ஆனால்
இன்றைய
நிலவரப்படி வீடு
கட்டுவது அதைவிட
கடினம்.
அது
எவ்வளவு கடினம்
என்று
அவ்வளவு எளிதாக
சொல்ல
முடியாது. என்னைப் போல்
ஒரு
அனுபவஸ்தன் மட்டுமே சொல்ல
முடியும்.
என்னைப் பற்றி
ஒரு
சிறு
குறிப்பு. நான்
1990 முதல்,
வீடு
கட்டுவதற்கு வரைபடங்கள் மற்றும் அது
சம்பந்தமான படிப்பு, கணக்கு
போன்றவற்றை செய்கிறேன். அப்போது பேப்பர் பென்சில் கொண்டு
செய்தேன். இப்போது கம்ப்யூட்டர் கொண்டு
செய்கிறேன். அது
ஒன்றுதான் வித்தியாசம்.
வீடு
கட்டும் கட்டுமான பொருட்கள், மனையின் விலை
மற்றும் கட்டுவதற்கு கூலி
போன்றவற்றையும் பல
வருடங்களாக நான்
கவனித்து வந்துள்ளேன். வீடு
கட்டுவதற்கு, வெறும்
வரைபடம் போட்டால் மட்டும் ஒரு
இன்ஜினியர் திறமைசாலி என்று
சொல்ல
முடியாது. தன்னுடைய விரல்
நுனிகளில், ஒரு
வீட்டிற்கு தேவையான பொருட்கள் எவ்வளவு என்று
சொல்லத் தெரிய
வேண்டும். ஏற்கனவே இது
சம்பந்தமாக நான்
சில
பதில்கள் எழுதினாலும், மீண்டும் நான்
உங்களுக்கு சில
விஷயங்கள் சொல்கிறேன்.
நான்
கிட்டத்தட்ட ஒரு
ஆயிரம்
கட்டிடங்களுக்கு வரைபடம் போட்டு
உள்ளேன். அதில்
நிறைய
பேர்,
எஸ்டிமேட் மற்றும் approval போன்ற விஷயங்களையும் என்னையே கவனிக்க சொல்லுவார்கள். இன்னும் சில
பேர்
கட்டிடம் கட்ட,
கான்ட்ராக்டர் நிர்ணயம் செய்வது முதல்
வீடு
கட்டி
முடியும் வரை
முழு
பொறுப்பை மேற்பார்வை செய்ய
கேட்டுக் கொள்வார்கள்.
அப்படி
பல
கட்டிடங்கள் நான்
கடைசி
வரை
இருந்து கட்டி
முடித்த அனுபவத்தில், ஒரு
சில
விஷயங்கள் மாறாமல் நம்
நாட்டில் தொடர்வதை கண்டேன். அங்கேதான், நமக்கு
அறிவு
தேவை.
இந்த
இடத்தில் நீங்கள் ஜெயித்து விட்டால், உங்கள்
கனவு
இல்லத்தை அழகாக
கட்டி
முடிக்கலாம்.
அப்படி
என்ன
விஷயங்கள் அவ்வளவு பொதுவானதாக கட்டுமான துறையில் உள்ளது?
1.
முதலில் Cost எனப்படும் கட்டுமான பொருட்கள் விலை.
டெக்னிக்கல் விஷயங்களை விட,
பைனான்ஸ் அதாவது
பணம்
சம்பந்தப்பட்ட விஷயத்தை நான்
முதலில் சொல்வதற்கு ஒரு
காரணம்
உண்டு.
கட்டுமான துறை
பற்றி,
நான்
சொல்வதை அப்படியே கேட்கும் வீடு
கட்டுபவர்கள், பண
விஷயத்தில் கேட்பதில்லை. இதில்தான் பல
பிரச்சினைகள் உருவாகின்றன.
2.
கட்டுமான மேலாண்மை என்றால் கட்டிடம் கட்டும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, Project Flow, Time and Cost Management தான் கட்டுமான துறையில் ரொம்ப
முக்கியம்.
3.
இப்பொழுது பெரும்பாலான கல்லூரிகளில், இந்தப்
படிப்பை சரியாக
சொல்லிக் கொடுப்பது இல்லை.
அதனால்
இப்பொழுது இருக்கும் இன்ஜினியர்களுக்கு, ஒரு
கட்டிடத்தை கட்டி
முடிக்க, Project மேனேஜ்மென்ட் செய்வதற்கான அடிப்படை இன்ஜினியரிங் அறிவு
கூட,
இப்போது படித்து முடித்த மாணவர்களிடம் இல்லை.
வெறும்
பட்டப்
படிப்பை வைத்துக்கொண்டு, நீங்கள் நல்ல
கட்டிடம் கட்ட
முடியாது. அறிவு
மற்றும் திறமையை குறிப்பாக கணித
திறமை
இல்லாதவர்கள் இன்ஜினியரிங் படிப்பது அர்த்த
மற்ற
செயல்.
4.
இந்தக்
கணக்கு
போடும்
திறமை,
நீங்கள் கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கும், அந்தக்
கட்டிடம் கட்டி
முடிப்பதற்கான நேர
மேலாண்மை மற்றும் பொருளாதார விலைவாசி நிலவரம் போன்றவற்றை கணிக்க
உதவும்.
5.
ஒரு
உதாரணம் சொல்கிறேன். நான்
சில
கல்லூரிகளுக்கு, Parryware கம்பெனி சார்பாக, Sanitary மற்றும் Electrical பற்றி 3D பற்றி
seminar எடுக்கச் சென்றபோது, இப்போது உள்ள
கல்லூரி மாணவர்கள் பலருக்கும், இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதில்
தெரியவில்லை. சாதாரணமாக ஒரு
கன
அடி
தண்ணீர் எவ்வளவு லிட்டர்? ஒரு
ஏக்கர்
என்பது
எவ்வளவு சென்டுகள் வீட்டின் உள்ளே
மின்சார விளக்குகள் ஒளி
யின்
அளவு
Lumens என்றால் என்ன?
நாம்
ஏன்
குறிப்பிட்ட கம்பிகளை (Tor steel Fe415 ) கட்டுமானத்தில் பயன்படுத்துகிறோம்? Sanitation and open space போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு கூட
இந்த
காலத்து மாணவர்களுக்கு பதில்
தெரியவில்லை.
6.
பல
விஷயங்கள், நம்
பாடத்
திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை.
குறிப்பாக கணிதம்
மற்றும் விஞ்ஞானம் போன்றவற்றில் இப்போதுள்ள மாணவர்களின் அறிவு
மிகவும் பின்
தங்கி
உள்ளது.
பணத்திற்காக படிப்பதால், இப்பொழுது உள்ள
மாணவர்களுக்கு படிப்பின் மீது
அக்கறை
இல்லை.
நல்ல
வேலை
கிடைத்தால் போதும்
என்றுதான் இப்பொழுது நினைக்கிறார்கள். ஆனால்
கொடுத்த வேலையை
சிறப்பாக செய்து
முடிப்பவர்தான் இன்ஜினியர். ஒரு
இன்ஜினியரிங் வேலை
செய்வதற்கு, கணித
அறிவு
மிக
மிக
அடிப்படை. இப்பொழுது கம்ப்யூட்டர் கால்குலேட்டர் கொண்டு
மிகவும் தவறாக
கணக்குகள் போட்டு
கட்டிடம் கட்டுகிறார்கள்.
7.
எனவே
கணித
அறிவு
கட்டிடம் கட்டி
முடிப்பதற்கு மிக
மிக
அவசியம். இந்த
கணித
அறிவு
உங்களிடம் இல்லாவிட்டால், நீங்கள் எத்தனை
டிகிரி
வாங்கி
வைத்தாலும் உங்களால் ஒரு
கட்டிடம் கட்ட
முடியாது.
8.
குறிப்பாக இந்த
கணித
அறிவு,
ஒரு
கட்டிடம் கட்டி
முடிப்பதற்கு PERT / CPM போன்ற கணக்குகள் மட்டும் அல்ல,
எவ்வளவு பணம்
பொருட்களுக்கு செலவு
செய்ய
வேண்டும், எவ்வளவு பணம்
வேலையாட்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை
ஒரு
இன்ஜினியர் துல்லியமாக சொல்ல
வேண்டும்.
9.
ஒரு
இன்ஜினியர் இந்த
கணக்கு
பண
விவாகரத்தை துல்லியமாக சொல்ல
முடியாத காரணத்தால், கட்டிடம் கட்டும் மேஸ்திரி கொத்தனார் மற்றும் பெயிண்டர் போன்றவர்களிடம் வீடு
கட்டுபவர்கள் விலை
பற்றி
பேச
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதன்
விளைவாக, நிலத்திற்கு கூடுதல் விலை
மட்டுமல்லாமல், கட்டுமான பொருள்களுக்கும் கூடுதல் விலை
கொடுத்து, வேலை
செய்வதற்கான கூலி
மிக
அதிகம்
கொடுத்து கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை
விரயம்
செய்கிறார்கள்.
10.
இப்பொழுது படித்தவர்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் வேலைக்கு ஆகும்
செலவை,
அந்த
வேலை
செய்யும் கொத்தனார் பிளம்பர் மற்றும் கட்டிட
வேலை
செய்யும் மேஸ்திரியிடம் கேட்டு
தெரிந்து கொள்கிறார்கள். வீடு
கட்டுபவர்கள், கேட்டால் கூட
பரவாயில்லை. இப்பொழுது படித்த
இன்ஜினியர்கள் கூட,
கொத்தனாரிடம் கணக்கு
கேட்கிறார்கள். கொத்தனார் சொல்லும் கணக்கை
வைத்துக்கொண்டு, நீங்கள் கட்டிடம் கட்டுவதற்கு, உங்களுக்கு எதற்கு
இன்ஜினியரிங் என்ற
படிப்பு தேவை?
இன்ஜினியரிங் படிப்பது என்பது
வேலை
செய்து
பணம்
சம்பாதிக்க அல்ல,
நல்ல
கட்டிடம் கட்டி
திறமையாக வேலையை
முடிப்பது தான்.
இங்கே
நாம்
எடுத்துக் கொள்ள
வேண்டிய விஷயம்,
குறை
மாணவர்களிடம் இல்லை.
ஆனால்
ஆசிரியர்களிடம் அவர்கள் எடுத்துச் செல்லும் பாடத்திட்டத்தில் கண்டிப்பாக இருக்கிறது.
இந்தக்
குறை
ஏன்
தென்படவில்லை?
காரணம்
என்
பையனுக்கு ஒரு
நல்ல
வேலை
கிடைத்தால் போதும்,
கல்வியின் தரம்
பற்றி
நான்
கவலைப்படவில்லை என்று
சில
பெற்றோர்கள் அந்தக்
கல்வியை, அதன்
தரத்தை
மாற்றி
விட்டார்கள்.
Campus இன்டெர்வியூ நடத்தும் நிறுவனங்கள், புகழ் பெற்ற கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் தான்
எடுத்துக் கொள்வார்கள். கொடுமை
என்னவென்றால், ஒரு
மாணவனின் திறமையை கல்லூரியை வைத்து
தான்
இன்று
எடை
போடுகிறார்கள். இது
தவறான
போக்கு.
அதனால்தான் சொல்கிறேன் புகழ்பெற்ற கல்லூரி, பட்டப்படிப்பு எல்லாம் "மாப்பிள்ளை என்ன
படிச்சிருக்கார்?" என்ற பெண்
பார்க்கும் கேள்விக்கு பதில்
சொல்ல
மட்டும் தான்
உதவி
செய்யும். ஆனால்
ஒரு
திறமையான இன்ஜினியருக்கு அது
அளவுகோல் அல்ல!!
இன்று
எல்லா
கல்லூரிகளும், "Industrial standard " என்ன என்று தெரியாமல், ஏதோ
கற்பனை
உலகத்தில் வாழ்கிறார்கள்.கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது, மீட்டர் களில்.
ஆனால்
நம்
அன்றாட
வாழ்வில் கட்டிடம் கட்டுவது அடி
கணக்கில்!! 1 அங்குலம் என்பது,
25.4 மில்லி
மீட்டர். ஒரு
சுவற்றின் அளவு
9 அங்குலம், அல்லது
4.5 அங்குலம். இந்த
4.5 அங்குலம் என்பதை
எப்படி
எழுத
வேண்டும் தெரியுமா? 0.375!
இந்த
கணக்குகள் எல்லாம் பாடத்திட்டத்தில் கிடையாது. ஆனால்
நீங்கள் கணக்கு
போட
இதெல்லாம் தேவை.
இவை
அனுபவத்தில் தான்
தெரிந்து கொள்ள
வேண்டும்.
தஞ்சாவூர் கோவில்
கட்டும்போது இந்த
அங்குலம் கூட
கிடையாது. ஆனால்
எனக்கு
ஒரு
ஸ்தபதி,
கோவில்
கட்டும் சாத்திரம் கற்றுக் கொடுத்தால், நான்
ஒரு
மாணவனை
போல்
கற்றுக்கொண்டு, கோவில்
வரைபடம் போடுவேன். தஞ்சாவூர் கோவிலில் கற்றுக்கொள்ள என்ன
இருக்கிறது என்று
கேட்பது மேற்கத்திய கல்வி
!! தஞ்சாவூர் கோவிலை
பற்றி
கற்றுக்கொள்ள இன்னும் நிறைய
பாக்கி
இருக்கிறது என்பது
என்னுடைய வாதம்!
எனக்கு
வாய்ப்பு கிடைத்தால், அமெரிக்கா சென்று
அடுக்குமாடி கட்டிடத்தை கற்றுக் கொள்வதை விட,
தஞ்சாவூர் கோவில்
பற்றிய
கல்வியை கற்றுக் கொள்வதில் தான்
ஆர்வம்
காட்டுவேன். இன்றைய
கல்விமுறை, தவறான
பாதையில் பயணிக்கிறது.
இப்போது இந்த
பதில்
நமது
கல்வி
அல்லது
பாடத்திட்டத்தை பற்றி
இல்லை.
வீடு
கட்டுபவர்கள் செய்யும் தவறை
பற்றியும், அதை
எப்படி
சரி
செய்வது என்பது
பற்றி!!
அளவுகள் மட்டுமல்ல, பணத்தை
எப்படி
கையாள்வது என்று
எந்த
சிவில்
இன்ஜினியருக்கும் கல்லூரிகளில் சொல்லித் தருவதில்லை. இதையும் நாம்
அனுபவத்தில் தான்
கற்றுக் கொள்ள
முடியும்!
இங்கேதான் நான்
மிக
முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். சொந்தமாக வீடு கட்டுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, பேசிய தொகையை விட அதிகமாக பணம் கொடுத்து கட்டிடத்தை கட்டி முடிப்பது!! அதாவது கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர், எப்படியாவது உங்களிடம் அதிகமாக பணத்தை, கடைசியில் வசூலித்து விடுவார்.
இங்கே
தான்
நான்
மிக
முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் ஒரு
கட்டுமான ஒப்பந்தம், Construction Agreement போடுவது எதற்காக? குறிப்பிட்ட பணத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் வீட்டை கட்டி முடிப்பதற்காகத்தானே?
ஒரு
காண்ட்ராக்டர் 2000 ரூபாயில் நான்
வீடு
கட்டுகிறேன் என்று
சொல்லி
ஒப்பந்தம் செய்தால், அது
அவருடைய லாபம்
சேர்த்துதான். அதுவும் தவிர,
முதலிலேயே Centering Scofolding போன்ற சார
கொம்புகள் வாங்குவதற்கு construction equipments போன்ற பல
வகைகள்
எல்லாவற்றையும் சேர்த்து தான்
2000/-.
ஆனால்
இப்படி
இருக்க,
சில
காண்ட்ராக்டர்கள், உங்களிடம் அதிகம்
பணம்
பறிப்பதற்கு, "ஜல்லி போடுவதற்கு பலகை
வாங்க
வேண்டும், Advance ஒரு லட்ச
ரூபாய்
கொடுங்க!" என்று கேட்பார்.
அக்ரீமெண்ட் என்பது
படிக்காதவர்கள் மத்தியில், ஒரு
சீரியஸான விஷயமே
இல்லை.
அக்ரிமெண்டில் பத்து
லட்சம்
என்று
சொல்லிவிட்டு, கூசாமல் மேலே
5 லட்சம்
கேட்பார்கள்.
இப்படி
இருக்கும் போது
இடையில் திடீரென்று, ஒரு
லட்ச
ரூபாய்
அதிகம்
கேட்டால், என்ன
ஆகும்?
இப்போது நீங்கள் தான் வீடு கட்டுபவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். வீடு கட்டும் மேஸ்திரி திடீரென்று ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார். பலகை வாங்க
வேண்டும். இப்போது உங்களுக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல் இப்படித்தான் இருக்கும்!
என்ன
மேஸ்திரி ? முதல்
மாடி
வருவதற்கு முன்பு,
15 லட்ச
ரூபாய்
வாங்கி
விட்டீர்கள். ஆனால்
ஒப்பந்தப்படி பத்து
லட்சம்
தான்
வாங்க
வேண்டும். இப்போது திடீரென்று மேலும்
ஒரு
லட்சம்
ரூபாய்
கேட்கிறீர்கள்!! நான்
எப்படி
கொடுப்பது?
சார்
மொத்த
அமௌன்ட் எவ்ளோ?
25 லட்சம்!!!
இன்னும் பத்து
லட்சம்
பாக்கி
இருக்கு. நான்
அந்த
பத்து
லட்சத்தில் தான்
கேட்கிறேன்!! பலகை
வாடகைக்கு கொடுப்பவர், பணம்
கொடுத்தால்தான் பலகை
எடுக்க
விடுவார்!! உங்களுக்கு தளம்
போட
வேண்டுமென்றால், நீங்கள் கொடுத்து தான்
ஆக
வேண்டும்.
நீங்கள் இப்போது கையை
பிசைந்து கொண்டு
யோசிப்பீர்கள்.
உடனே முக்கியமான ஒரு விஷயம் சொல்லுவார்!!
நான்
இதுக்கு முன்னாடி டாக்டர் வீடு
கட்டினேன். அதற்கு
முன்பு
ஒரு
போலீஸ்
இன்ஸ்பெக்டர் வீடு
கூட
கட்டி
உள்ளேன். எல்லோருமே, தண்ணீர் குடிக்க காசு,
டீ
குடிக்க காசு
என்று
தனியாக
10,000 ரூபாய்
கொடுப்பார்கள். சில
Builder கள்
தளம்
போடும்
பொழுது,
நூறு
பேருக்கு சரவணபவனில் சாப்பாடு வாங்கி
கொடுப்பார். நான்
அப்படியெல்லாமா உங்களிடம் கேட்கிறேன்?? இது
எல்லோரும் கொடுக்கும் வழக்கம்!!!
மனதுக்குள் நீங்கள் " எல்லோரும் கொடுப்பார்களா?? அப்ப
நாமும்
கொடுத்து தான்
ஆக
வேண்டும்!!" என்று முடிவை
கட்டி
விடுவீர்கள்.
செக்
இல்லையே!!
பரவாயில்லை சார்,
பக்கத்துல தான்
ஏடிஎம்
இருக்கு. ஏடிஎம்ல எடுத்து குடுங்க!! ( எந்த
ஏடிஎம்மில் பணம்
இருக்கும், எந்த
ஏடிஎம்
வாரி
வாரி
கொடுக்கும் என்று
அவருக்கு நன்றாக
தெரியும் )
நீங்களும் ஏடிஎம்மில் பணம்
எடுத்து கொடுத்து விடுவீர்கள்!!
இப்படி
நைசாக
பேசி
பேசி
வாங்கி
கட்டிடம் பூசு
வேலை
நடந்து
முடிக்கும் பொழுது,
24 லட்சம்
வாங்கி
இருப்பார்.
அப்போதுதான் என்னிடம் வருவீர்கள்.
ராஜேஷ்,
இதுவரை
கட்டிடம் கட்ட
எவ்வளவு ஆகியிருக்க வேண்டும்??
என்ன
சார்,
கரெக்டாக சொன்னால், 16 லட்ச
ரூபாய்
கொடுத்து இருக்க
வேண்டும். நீங்க
கொஞ்சம் தாராள
மனசு,
18 லட்சம்
கொடுத்து இருப்பீங்க!!
அதுதான் இல்லை!!
24 லட்சம்
வாங்கிவிட்டார் கான்ட்ராக்ட்ர்!!
என்ன
சொல்றீங்க?? இன்னும் பாத்ரூம் போடவில்லை, பெயிண்டிங் நடக்கவில்லை, எலக்ட்ரிக்கல் வேலை
உள்ளது,
மொட்டை
மாடியில் வெதர்
இன்
கோஸ்
போட
வேண்டும், டைல்ஸ்
போட
வேண்டும், வீட்டை
சுற்றி
காம்பவுண்ட் சுவர்
கட்ட
வேண்டும்!! இதைத்
தவிர
கதவு
ஜன்னல்!!
இன்னும் ஏழு
லட்சம்
பத்தாது. போன
வருடத்தை விட
இந்த
வருடம்
மரம்
விலை
ஏறி
விட்டது. அனேகமாக இன்னும் பத்து
லட்சம்
ஆகும்,
நீங்கள் பேசின
மொத்த
பணத்தையும் இப்போதே கொடுத்து விட்டீர்கள். மீதி
ஒரு
லட்சத்தில் இதையெல்லாம் செய்ய
முடியாது!!!
இல்லை
வீட்டை
சுற்றி
சுவர்
கணக்கில் வராது!!
தண்ணி
தொட்டி
கணக்கில் வராது!!
இதெல்லாம் extra என்று சொல்லுகிறார் கான்ட்ராக்டர்!!
நீங்கள் முன்னமே பேசி இருக்க வேண்டும்!!
முதலில் இதெல்லாம் சொல்லவில்லை!!
இதற்காகத்தான் என்னைப் போன்ற
ஒரு
இன்ஜினியர் இடம்
நீங்கள் கட்டுமான பொருட்கள் கூலி
போன்ற
கணக்குகள் போட்ட
Estimate, Stage payment போன்ற
விஷயங்கள் வாங்கிக் கொள்ள
வேண்டும். அதன்படி ஸ்டிட்ரிக்கிட் ஆக
நடக்க
வேண்டும்!!
என்ன
செய்வது??
இப்படித்தான் எல்லா இடங்களிலும், பேசிய தொகையை விட கூடுதலாக எப்படியோ வாங்கி விடுகிறார்கள்!!
நான் இதுவரை பலமுறை இதுபோன்று நடந்து பார்த்து விட்டேன். வீடு கட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை!!
நான்
பார்த்ததில், பத்து
பேரில்
எட்டு
பேர்
பேசின
தொகையை
விட
அதிகமாக கொடுத்து தான்
வீட்டை
முடித்துள்ளார்கள்.
ஏதாவது காரணம் சொல்லி முதலிலேயே பணத்தை வாங்கி விடுவது தான், இந்த அடிப்படை பிரச்சனைக்கே காரணம்.
ஆனால்
பணம்
கொடுக்காத, மோசமான
owner களும்
நாட்டில் உண்டு.
ஆனால்
அவர்களை காட்டி,
கான்ட்ராக்டர்கள் தப்பிக்க முடியாது.
பெரும்பாலும் ஏமாறுபவர், கட்டுமானத்துறை பற்றி தெரியாத வீடு கட்டுபவராக தான் இருக்கிறார்.
எனவே
நீங்கள் வீடு
கட்டும் போது,
உங்களுடைய மொத்த
Project details என்னைப் போன்ற ஒரு இன்ஜினியரிடம் காட்டி, எந்த கட்டத்தில் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? கட்டுமான பொருட்கள் சரியாக
போடப்படுகிறதா? என்று
பண
விஷயத்திலும், கொஞ்சம் கரராக
நடந்து
கொள்ள
வேண்டும்.
நீங்கள் பணத்தை கொடுத்து விட்டால் திரும்ப வாங்க முடியாது இங்கே!!
நீங்கள் அவர்களை, வீட்டில் போய்
தேடினால், அவர்கள் ஆளே
கிடைக்க மாட்டார்கள்!!
அந்த
காலத்தில் எல்லாம் செல்போன் கிடையாது. நான்
அவர்கள் தங்கி
இருக்கும் ஒரு
பெரிய
குடியிருப்புக்குள் சென்று
தேடினால் கூட
கிடைக்க மாட்டார்கள்.
உடனே
நீங்கள் சொல்லலாம், "இப்போதுதான் செல்போன் இருக்கிறதே? செல்போனை வைத்து
ஈசியாக
பிடித்து விடலாம்??"
நீங்கள் வேலை
கொடுக்கும் வரை,
அந்த
காண்ட்ராக்டர் உங்களுக்கு பல
கால்கள், பலமுறை
பேசியிருப்பார்.
ஆனால்
பணம்
நிறைய
கொடுத்த பிறகு,
யாருமே
செல்போனை எடுக்க
மாட்டார்கள். செல்போன் என்பது,
தங்களுடைய வசதிக்காக தான்.
அடுத்தவர்களுக்காக அல்ல
என்பது
நமது
நவீன
கொள்கை.
செல்போன் தொடர்பு கொள்ள
முடியாது. ஸ்விட்ச் ஆஃப்
ஆகி
இருக்கும். பணத்தை
இழந்தவனுக்கு தான்,
இந்த
செல்போன் என்பது
வேஸ்ட்
என்று
நன்கு
புரிந்து இருக்கும்!!
ஒரு
படத்தில் " சோ "அழகாக ஒரு
வசனம்
சொல்லுவார்!!
படம்
ஆயிரம்
பொய்
!
ஜெய்சங்கர் : எந்த
குதிரையை வேகமாக
ஓடும்?
சோ
: குதிரையை விட
மனிதன்
வேகமாக
ஓடுவான்!
ஜெய்சங்கர் : உளறாதே!!
மனிதன்
எப்படி
அவ்வளவு வேகமாக
ஓடுவான்?
சோ
: டேய்!
நீ
ஒரு
மனிதனிடம் கடன்
கொடுத்துப் பார்.
பணத்தை
வாங்கிக் கொண்டு
அவன்
எவ்வளவு வேகமாக
ஓடுகிறான். ( பல
வருடங்கள் முன்னே
சோ
சார்
சொன்ன
விஷயம்
)
நீங்கள் ஒருவர்
உங்கள்
கண்ணில் இருந்து மறைய
வேண்டும், அவர்
கண்
காணாமல் போக
வேண்டும் என்று
நினைத்தீர்கள் என்றால், அவருக்கு பணம்
நிறைய
கொடுத்து பாருங்கள்!
கடைசியில் சாவி
வாங்கும் பொழுது,95%
பணம்
தான்
ஒரு
கான்ட்ராக்டர் உங்களிடம் வாங்கி
இருக்க
வேண்டும். 5% Retention Amount என்று ஒரு
செக்யூரிட்டி டெபாசிட் போல்,
உங்களிடமே இருக்க
வேண்டும்.
எனக்கு
பரிபூரண திருப்தி, என்று
நீங்கள் மனதார
நினைத்த பின்
தான்
கடைசியில், ஒரு
தட்டில் துணிமணிகளுடன், ஏன்
ஸ்வீட்
பழங்களுடன் கூட
அந்த,
பிடித்த வைத்த
பணத்தை
கொடுக்கலாம்.
Retention என்பது சில சமயம்
ஒரு
ஆண்டு
கழித்து கூட
கொடுக்கலாம். எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்த பின்பு கொடுப்பதுதான் இந்த பணம்!!
ஆனால்
பெரும்பாலும், கட்டுமானத்துறையில் இதை
யாரும்
கடைப்பிடிப்பதில்லை. கடைசியில் ஏமாறுபவர் நுகர்வோராக தான்
இருக்கிறார். கொஞ்சம் விழிப்புணர்வு தேவை.
அதற்குத்தான் என்னைப் போன்ற
ஆட்கள்
தேவை
என்று
சொல்கிறேன். இதைப்
படிக்கும் நீங்கள், வீடு
கட்டுவதற்கு வெறும்
படம்
மட்டும் போட்டால் பத்தாது, பணம்
எப்படி
கொடுக்க வேண்டும் என்று
முதலிலேயே திட்டம் போட்டுக் கொள்ள
வேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைத்தபடி உங்கள்
கனவு
இல்லத்தை கட்ட
முடியும்.
நான்
முதலிலேயே சொன்னேன் அல்லவா,
80 களில்
ஒரு
சதுர
அடி
200 ரூபாய்
க்கு
வீடு
கட்டினார்கள். இன்று
ஒரு
சதுர
அடி
2000 ரூபாய்க்கு வீடு
கட்டுகிறார்கள். Trend, Fashion, டெக்னாலஜி கட்டுமான தொழில்நுட்பம் கட்டுமான பொருட்கள் எல்லாம் மாறிவிட்டது.
ஆனால்,
அன்று
இருபது
ரூபாய்
ஏமாற்றியவர்கள் , இன்று
இரண்டு
லட்ச
ரூபாய்
ஏமாற்றுகிறார்கள். இந்த
Trend மட்டும் நம்
நாட்டில் மாறவே
இல்லை.
Moral Science என்ற
அடிப்படைக் கல்விக்கு, தென்
கொரியா
போன்ற
நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆனால்
நம்
நாட்டில் ஒண்ணாம் கிளாஸ்
படிக்கும் குழந்தை செல்போன் வைத்துக் கொண்டு
விளையாடுகிறது.
செல்போன் தயாரிக்கும் தென்கொரியா குழந்தை, சுத்தம் சுகாதாரம், நேர்மை
பற்றி
அடிப்படைக் கல்வி
கற்கிறது. நம்
கல்வித் திட்டத்தில், எது
முக்கியமோ அதை
படிக்காமல், இன்ஜினியரிங் படித்து எந்த
பயனும்
இல்லை.
எவ்வளவு வசதி
இருந்தாலும், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற
பணத்தாசை நம்மிடையே இன்னும் மறையவில்லை. அன்று,
சுவற்றுக்குப் பின்னால் மங்காத்தா என்று
சீட்டாட்டம் ஆடியவர்கள் இன்று
Online Rummy ஆடுகிறார்கள். அன்று
இரண்டு
ரூபாய்க்கு குப்பை
சினிமா
காட்டியவர்கள் இன்று
2000 ரூபாய்க்கு அதே
குப்பை
கதையை
சினிமாவாக காட்டுகிறார்கள்! நல்ல விஷயங்கள் மட்டும்தான் மாறிவிட்டது. மோசமான விஷயங்கள் மாறவே இல்லை!! அப்படியே வேறு ரூபத்தில் உள்ளது!!!
அன்று,
ஐந்து
பைசா
ஏமாற்றியவர்கள் இன்று
ஐந்து
லட்சம்
ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுபவனை விட
ஏமாறுபவர்கள் மீது
தான்
தவறு
என்று
சொல்வது ஓரளவு
உண்மைதான்.நீங்கள் ஏமாற
கூடாது
என்பதற்காகத்தான் இந்த
பதிவு
ஏமாற்றுபவர்களை நாம்
திருத்த முடியாது, ஆனால்
நாம்
ஏமாறாமல் உஷாராக
இருக்க
கற்றுக் கொள்ள
வேண்டும். அதுவும் குறிப்பாக பள்ளியில் ஏமாந்தால், கல்வி
காலி.
திருமணத்தில் ஏமாந்தால் நிம்மதி இல்லை.
வீடு
கட்டும் விஷயத்தில் ஏமாந்தால் சொத்து
இல்லை.
இந்த
காலத்தில் சொத்து
இல்லை
என்றால் ஒருவரும் மதிக்க
மாட்டார்கள்.
நீங்கள் சொந்தமாக உங்களுக்கென்று ஒரு
வீடு
கட்டுவது அவசியம். தேவையில்லாத விஷயத்தில் பணத்தை
செலவு
செய்து,
நாமே
அடுத்தவருக்கு தேவையில்லாமல் அதிகம்
கொடுத்து, பணத்தை
ஏமாறக்கூடாது. மற்ற
பொருட்கள் வாங்கும் போது
ஏமாந்தால், உங்களுக்கு நஷ்டம்
சில
ஆயிரங்கள் மட்டும் தான்.
ஆனால்
வீடு
கட்டும் போது
ஏமாந்தால் அது
லட்சங்களில் மாறும்.
அதில்
இன்னொரு வீடு
கட்டலாம். புரிந்திருக்கும் என்று
நினைக்கிறேன். மிக்க
நன்றி!
![]()
நீங்கள் நினைத்த வீட்டை
கட்டி,
வாழ்க
வளமுடன் என்று
வாழ்த்துகிறேன்!!
சுவையான Trivia தகவல் வழக்கம் போல்
::
நான்
ஒரு
இன்ஜினியர் மட்டுமல்ல ஒரு
ஆசிரியரும் கூட.
ஆசிரியர் என்று
சொல்வதில் சந்தோஷப்படுவேன். ஒரு
ஆசிரியராக இடையில் கேட்ட
இரண்டு
கேள்விகளுக்கு விடை
இதோ
::
ஒரு
கன
அடி
தண்ணீர் எவ்வளவு லிட்டர்?
28.3 லிட்டர்கள்!
ஒரு
ஏக்கருக்கு எவ்வளவு சென்டுகள்?
100 சென்ட்!!
கூடுதல் தகவல்.
ஒரு
சென்ட்
435.6 சதுர
அடிகள்.
எப்படி
வந்தது?
அந்த
காலத்தில் ஒரு
பிரிட்டிஷ் Survey chain நீளம் 66 அடி!
ஒரு
செயின்
66 x 66=4356 10 சதுரமாக அளக்கும் போது
வரும்
அளவு
43560 சதுர
அடிகள்
= ஒரு
ஏக்கர்!
நாம்
ஏன்
முறுக்கிய கம்பி
RTS Steel பயன்படுத்துகிறோம்?
கான்கிரீட்டுக்கும் கம்பிக்கும் பிடிமானம் அதிகமாக இருக்கும். முன்பு
MS rod வழுவழுப்பான இரும்பு கம்பிக்கு Hook போட
வேண்டும். அந்த
காலத்தில் எல்ஐசி
கட்டிடம் இதில்
தான்
கட்டப்பட்டது. ஆனால்
இன்று,
நாம்
உபயோகப்படுத்தும் கம்பிகள், Ribbed Tor Steel என்ற முறுக்கு எறிய
கம்பிகள்!
நன்றி உங்கள் கனவு இல்லம் நிறைவேற ..வாழ்த்துக்கள்
சிவக்குமார் VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் .


Comments
Post a Comment