மத்தியத் தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன்
அவர்களுக்கு உடுமலைவரலாற்று
நூல் பரிசளிப்பு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
கீழடியை சமூகத்தளத்திற்குக் கொண்டு வந்த தொல்லியலாளர் இந்தியத் தொல்லியல் துறையில் பெங்களுர், டெல்லி, கோவா, கல்கத்தா என இந்தியாவின் பெரும்பாலான தொல்லியல் சார்ந்த இடங்களில் பணியாற்றி வருபவர்.
கீழடி தொல்லியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற குரல் கொடுத்து வருபவர். தற்போது சென்னை மத்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக
இருந்து வருகிறார்.
இவர் பழனி பகுதியைச் சேர்ந்தவர். பிறந்தது முதல் மேல்நிலைக்கல்வி வரை பழனியில் படித்து வளர்ந்தவர். இந்தியஆட்சிப்பணித் தேர்வில் இந்திய அளவில் 15 உயர் அதிகாரிகளுள் ஒருவராக வெற்றி பெற்று தொல்லியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு நமது உடுமலை வரலாற்று நூலான தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வழங்கப்பட்டது. இதைப் பார்த்த அவர் மிகவும் பெருமையாகப் பேசினார். தென்கொங்கின் பெரும்பாலான பகுதிகள் இருந்தாலும் பொருந்தல் அகழ்வாய்வைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதையும் கூறினார் .
பொருந்தல் அகழ்வாய்வு பேகனின் ஆட்சிப்பகுதி இருந்த பகுதி என்றும் தெரிவித்தார். கொங்கு பகுதியில் ஏராளமான அகழ்வாய்வுப் பகுதி இருப்பதைத் தெரிவித்தோம். கரை வழிநாடான கல்லாபுரம், கடத்தூர், கொமரலிங்கம். கண்ணாடிப்புத்தூர் பகுதிகளை தாம் பார்க்க விரும்புவதாகவும்
தெரிவித்தார்.
தென்கொங்கின் தலைநகராக விளங்கிய கொழுமம், கொமரலிங்கம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களைப் பற்றிக் கேட்டறிந்தார்.
கொழுமம் வீரசோழீஸ்வரர்
கோயில் குறித்தும், கடத்தூர் மருதீசர் கோயில் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கடத்தூர் கொங்கு விடங்கீஸ்வரர்
கோயில் கல்வெட்டுகள்
குறித்தும் கேட்டறிந்தார்.
உடுமலைப்பேட்டை பகுதியில் இது போன்று வரலாற்றுப்பணிகளை
செய்யும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களையும் கேட்டறிந்து வாழ்த்திப்பாராட்டினார்.
கட்டாயம் உடுமலைப்பகுதிக்கு
வருவதாகவும் கூறினார்.
தென்கொங்கின் தொன்மங்கள் நூல் கட்டாயம் அனைத்து வரலாற்று ஆசிரியப்பெருமக்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயன்படும் எனவும் தெரிவித்தார்.
தொல்லியல் ஆய்வறிஞர் பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோமவாரப்பட்டி,
குரும்பபாளையம், மெட்ராத்தி, போன்ற பகுதிகளைக் குறித்தும் கேட்டறிந்தார்.
உடுமலை வரலாற்றுப் பணிகளை வாழ்த்திய தொல்லியல் ஆய்வறிஞர் மதிப்புமிகு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்
நன்றிகளையும் பதிவு செய்வோம்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
உடுமலை வரலாறு 22.07.2022
Comments
Post a Comment