கேள்வி : 




5G என்றால் என்ன? 5G தொழில்நுட்பம் உண்மையில் நமக்கு நன்மை தருமா இல்லை நமக்கு ஆபத்தான விஷயமா?


 


 பதில் : 


 


 


5G என்றால் என்ன என்று மிகவும் எளிமையாக உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன். பிறகு அது ஆபத்தான விஷயமா இல்லை நன்மை தரும் விஷயமா என்று விளக்குகிறேன்.


5G என்றால் ஐந்தாவது தலைமுறை தொலைத் தொடர்பு என்று பொருள். ஒயர் இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் தொடர்பு கொள்வது தான் இந்த 1G, 2G, 3G, 4G தொழில்நுட்பங்கள்.




நான் எல்லா தலைமுறை அறிவியல் வளர்ச்சியும் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் ரேடியோ மட்டும் கேட்ட நான், தமிழ்நாட்டிற்கு தொலைக்காட்சி வந்ததை பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன், நம் ஊரில் கேஸ் அடுப்பு, பிரஷர் குக்கர் அறிமுகப்படுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.


குக்கர் வெடித்து விடுமா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இப்போது சிரிப்பு வந்தாலும், அன்றைய காலகட்டத்தில் அது நியாயமான கேள்வி!


5G, 5ஜி அலைவரிசை என்ற விஞ்ஞானம் இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. நல்லவேளை அறிவியல் பூர்வமாக 5ஜி அலைக்கற்றை பற்றி நாம் விவாதிக்கிறோம். இதற்கு முன்பு 4G, 3G போன்றவை வந்தாலும், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்று 2G தான்!


ராஜா மற்றும் கனிமொழி தயவில் 2ஜிக்கு கிடைத்த விளம்பரம், நம்ம ஊரில் வேறு எந்த ஜிக்கும் கிடைக்கவில்லை. அரசியலை விட்டு விட்டு அறிவியலை மட்டும் பார்த்தோம் என்றால், 5ஜி தொழில்நுட்பம் ஒரு தொலைத் தொடர்பு பரிணாம வளர்ச்சி. இதற்கு முன்பு இருந்தவை 0G, 1G, 2G, 3G, 4G தொழில்நுட்பங்கள். இப்பொழுது இருப்பது, 4G LTE, Vo LTE!




Vo LTE என்றால் Voice over Long term evolution தொழில்நுட்பம் என்று பாடம் எடுக்க ஆரம்பித்தால், நீங்கள் இதை மூடி வைத்துவிட்டு விக்ரம் 2 கமலஹாசன் பற்றி அல்லது நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணத்துக்குப் பிறகு எங்கே ஹனிமூன் சென்றார்கள்? என்று சீரியஸ் ஆக படிக்க ஆரம்பித்து விடுவீர்கள். எனவே Technical Terms குறைத்துக் கொண்டு, இயன்ற அளவு எளிமையாக உங்களுக்கு 5G பற்றி விளக்குகிறேன்.


நான் சிறுவனாக இருந்த பொழுது, கோவையிலிருந்து சென்னைக்கு ,சென்னையிலிருந்து மதுரை செல்ல வேண்டும் என்றால் மீட்டர் கேஜ் ரயில் வண்டி மட்டும் தான் இருக்கும். முதன் முதலில் வைகை எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாக மாறியது.


1980ஆம் வருடம் சேரன் எஸ்பிரஸில் கோவை  டு சென்னை ,வைகை எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே வேகமான ரயில் என்று நான் சிறுவனாக இருக்கும்போது நினைத்தேன். ஆனால் விஷயம் தெரிந்தவர் ஒருவர் சொன்னார், மும்பைக்கும் புது டெல்லிக்கும் இடையே பறக்கும் ராஜதானி எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே வேகமான ரயில் என்று எனக்கு எடுத்துச் சொன்னார்.


அது எப்படி ராஜதாணி எக்ஸ்பிரஸ், நம் தமிழ்நாட்டின் வைகை எக்ஸ்பிரஸ் வண்டியை விட வேகமாக செல்லலாம்?என்று அப்பொழுது தமிழ்நாட்டின் சார்பாக நான் கோபப்பட்டேன். தமிழ்நாட்டிற்கு வேகமான ரயில் கிடையாதா?? என்ன அக்கிரமம் !! என்று அன்று சின்ன பையன் என் கோபத்தில் நியாயம் இல்லை.


காரணம், அறிவியல்!!


வைகை எக்ஸ்பிரஸ் அப்பொழுது, மீட்டர் கேஜ் என்று குறுகிய பாதையில் சென்றது. ஆனால் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில் அப்போது 80ஆம் வருடம் Broad gauge அகல பாதையில் ரயில் சென்றதால், அது இரண்டு மடங்கு வேகத்தில் சென்றது.


நாம் உபயோகிக்கும் டேட்டா Data (audio video) போன்றவை ஒரு ரயில் என்றால், அது பயணம் செய்யும் தண்டவாளம் தான் 4ஜி 5ஜி போன்ற அலைகற்றை!


இப்பொழுது உங்களுக்கு எளிமைப்படுத்துகிறேன்.


1G என்பது ஒரு குதிரை வண்டியில் ஐந்து பேர் மதுரையில் இருந்து மேலூர் வரை பயணம் செய்தது.


2G என்பது ஒரு பாண்டியன் போக்குவரத்து பஸ்சில் 50 பேர் மதுரையில் இருந்து திருச்சி வரை பயணம் செய்தது.


3G என்பது ஒரு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 பேர் மதுரையில் இருந்து சென்னை வரை எட்டு மணி நேரத்தில் பயணம் செய்தது.


4G என்பது அகலப்பாதை ரயிலில் 1000 மனிதர்கள் வேகமாக 5 மணி நேரத்தில் அதே தூரத்தை பயணம் செய்வது.


5G என்பது புல்லட் ட்ரெயின் மூலம் Magnetic Track மேலே மணிக்கு 500 km வேகத்தில், அலுங்காமல் குலுங்காமல் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தை போல் ஒரு மணி நேரத்தில் 5000 மனிதர்கள் பயணம் செய்வது!


இதற்கு அடுத்து 6G என்பது மதுரையில் இருந்து ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் செல்வது. இது இன்னும் வரவில்லை.


அவ்வளவு ஏன், 5G இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாடு, தென்கொரியா மட்டும் தான்.


நான் ஏற்கனவே ஒரு பதிலில் சாம்சங் நிறுவனம் பற்றி எழுதும்பொழுது, தென்கொரியாவின் வளர்ச்சி பற்றி எழுதி இருந்தேன். தென்கொரியாவின் வளர்ச்சிக்கு காரணம் கல்விக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.


5G தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு டிசம்பர் 2018. கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதாரம் பாதிப்படையாத ஒரே நாடு தென்கொரியாதான்! காரணம் 5g தொழில்நுட்பம் அங்கே முறையாக செயல்படுத்தப்பட்டது தான்!!




ஒயர்கள் இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் 1980 களில் வெறும் பேச மட்டும் செய்தது Analog மூலம் தொலைத் தொடர்பு கொண்டதுதான் முதல் தலைமுறை அதாவது 1G!


பேசுவது மற்றும் Text மெசேஜ் செய்ய டிஜிட்டல் முறையை பயன்படுத்திய தொலைத்தொடர்புதான் நம்ம ராசா புகழ் 2ஜி!


பேசுவது, (voice ), எழுத்து (Text Message) மற்றும் ஆடியோ வீடியோ மல்டிமீடியா இரண்டு ஃபோன்களுக்கு இடையே அனுப்புவது தான் 3ஜி தொழில்நுட்பம் இது 2000 ஆம் ஆண்டு பிரபலமானது.


இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பம்தான் 4ஜி! முழு பெயர், 4G Vo LTE. இது இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டதன் காரணமாக, long term evolution என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.


அடுத்து வருவது தான் நமது கதாநாயகன் 5ஜி! இதை பெருமளவு உலகத்தில் அறிமுகப்படுத்திய கம்பெனி குவால் காம் , Qualcomm என்ற சீன தொலைத்தொடர்பு நிறுவனம்.


சரி எப்படி இந்த வேகம் அதிகம் ஆயிற்று? இந்த வேகத்திற்கு என்ன பயன்?


முதலில் நான் சொன்ன 3g 4g பயன்படுத்திய ரேடியோ அலைகள் குறைந்த Frequency மற்றும் அதன் அலையின் நீளம் wavelength கொஞ்சம் சிறியது.




ஆனால் 5g அலை வரிசை என்பது மில்லி மீட்டர் அலைகள் என்று அழைக்கப்படும் MM wave என்ற அலை வரிசையில் Broadband என்று அகலமான பாதையில் விரைய போகிறது.


இந்த அலை வரிசையை நீங்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மொத்த மின்காந்த அலைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.




மின்காந்த அலைகள் என்பது, ரேடியோ அலைகள் ஆரம்பித்து நாம் பார்க்கும் சூரிய ஒளி இன்ஃப்ரா ரெட் புற ஊதா கதிர்கள் எக்ஸ் ரே காமா கதிர்கள் என்று மிகவும் ஒரு பெரிய ராஜபாட்டை!


இதில் 5G பயன்படுத்துவது மைக்ரோ Wave அலைவரிசை.




கொஞ்சம் நிறுத்துங்கள்!! மைக்ரோ வேவ் அடுப்பு இயங்கும் அலைவரிசை என்பது ஒரு பொருளை சூடாக்கி வேகவைக்கும் சக்தி கொண்டது. அப்படி என்றால் 5g நம்மை சூடாக்கி ரேடியேஷன் மூலம் கொன்று விடாதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.


மைக்ரோவேவ் மட்டுமல்ல, சூரிய ஒளி கூட ஒரு ஆளைக் கொல்லும். ஒரு லென்ஸ் வைத்து சிறுவயதில் நாம் சூரிய ஒளியை குவித்து ஒரு பஞ்சை கொளுத்துவோமே நினைவு உள்ளதா?


அதுபோல் குவிப்பது தான் மைக்ரோவேவ் அடுப்பு. ஒரு சதுர இன்ச் பரப்பளவில் எவ்வளவு சக்தி பாய்கிறது, என்பதை வைத்துத்தான் அது நமக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும்.




தொலைத்தொடர்பு என்பது மகாசக்தி வாய்ந்த ஒரு விஷயம் இல்லை. சூரிய ஒளி பரவலாக மேலே படுவது போல், 5ஜி அலைவரிசை என்பது, 30 Ghz முதல் 300 Ghz இலக்கத்தில் பாய்வதால், அது பாதிப்பை ஏற்படுத்தாது.


இந்த அலை நம்மை கொன்றுவிடும் என்றால், ஏற்கனவே நாம் உபயோகித்த ரேடியோக்கள், ஸ்மார்ட் போன்கள்கள் நம்மை ஏற்கனவே கொன்று இருக்க வேண்டும். அதே ரேடியோ அலை தான்!


இன்னும் சொல்லப்போனால் பட்டையாக உள்ளதால், இந்த மில்லி மீட்டர் அலைகள் ஒரு சுவற்றைத் தாண்டி கூட ஊடுருவ முடியாது.




இதுதான் 5g தொழில்நுட்பத்திற்கு ஒரு பெரிய சவால். எளிதில் தடை படுவதால், பல இடங்களில் அங்கங்கே சிறிய செல்கள் வைத்து MIMO, massive மிமோ என்ற தொழில்நுட்பம் மூலம் எக்கச்சக்க செய்திகளை எடுத்துச் சொல்லும்! கட்டிடம் கட்டும் இடத்தில், பல பேர் தள்ளித்தள்ளி நின்று கொண்டு செங்கல்களை தூக்கிப்போட்டு பிடித்து வெகு தூரம் எடுத்துச் செல்வது போல், ஏகப்பட்ட ஆன்டனாக்கள் தாண்டி நமக்கு வந்து சேரும் இந்த 5g தொழில்நுட்பம்!




இவ்வளவு எக்கச்சக்க டேட்டா நமக்கு எதற்கு? இப்போது இருக்கும் 4ஜி போதாதா? இதுவே வேகமாக தானே உள்ளது!! என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது.


இது இரண்டு போன்கள் மட்டும் பேசிக்கொள்ளும் தொழில்நுட்பம் இல்லை. வருங்காலம் என்பது போன்கள் மட்டுமல்ல.




IOT என்று அழைக்கப்படும் Internet of Things என்று இரண்டு இயந்திரங்கள் இன்டர்நெட் மூலம் இணைப்பது தான் எல்லா வேலைகளையும் செய்ய உதவி செய்யும்.


அதாவது சென்னையில் இருந்தபடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே நிற்கும் ஒரு டாக்ஸியில் உங்கள் காதலியை நீங்கள் ஏற்றலாம். அந்தக் கார், உங்கள் காதலியை தானாக ஏற்றி க்கொண்டு உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். அப்புறம் என்ன, கல்யாணம் தான்!!


அது மட்டும் அல்ல, நியூயார்க்கில் இருக்கும் ஒரு வயதான பெண்மணிக்கு, சென்னையில் இருக்கும் ஒரு டாக்டர் Robotic Surgery மூலம் மூட்டு வலியை வைத்தியம் செய்யலாம்.


இந்த அற்புதம் நிகழக் காரணம், Broadband மூலம் ஒரே நேரத்தில் பல சங்கதிகளை (Data tranmission ) கொண்டு செல்லும் அகலம் மட்டுமல்ல.


Latency என்று ஒரு சமாச்சாரம். இது மிக மிக முக்கியம். ஒரு பொருளை நாம் பார்த்து, Reaction செய்யும் வேகம், அதில் ஏற்படும் தொய்வு தான் இந்த லேட்டனசி என்று சொல்வார்கள்.


உதாரணமாக நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள். குறுக்கே ஒரு வயதானவர் திடீரென்று வந்து விடுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில், நடக்கும் இதை நீங்கள் பார்த்துவிட்டு நல்ல வேளையாக உடனே பிரேக் அடிக்கிறீர்கள். நீங்கள் பிரேக் அடிக்கவில்லை என்றால் அங்கே ஒரு ஆக்சிடென்ட், விபத்து உயிரிழப்பு நடக்க வாய்ப்பு உண்டு.


இவை அனைத்தையும் உங்கள் மூளை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் 1/4 வினாடிகள். உங்கள் கண்கள் அதைப் பார்த்து மூளை வேலை செய்து கால்கள் பிரேக் அடிக்க இந்த நேரம் தேவை. அதாவது பார்த்த செய்தி, மூளைக்குச் சென்று செயல்படுத்த நமக்கு குறைந்தபட்சம் கால் 1/4 வினாடியாவது தேவை.


ஆனால் 5G தொழில்நுட்பம் மூலம் தானாக ஓடும் ஒரு தானியங்கி கார், செய்திகள் சென்று வருவதற்கு, தொய்வு மிகவும் கம்மியாக இருக்கும். அதாவது, 1/1000 ஒரு மில்லி செகண்ட் வேகத்தில், பெரியவர் கார் குறுக்கே வருவதைப் பார்த்து, காரின் பிரேக்குகள் தானாக செயல்படுத்தப்பட்டு கார் நின்று விடும். கார் குறுக்கே வந்த வயதானவர் கண்டிப்பாக உயிர் பிழைப்பார். விபத்துக்கள் குறைப்பதற்கு இந்த Latency அதாவது தொய்வில்லாமல் வேகமாக ஒரு இயந்திரம் வேலை செய்ய 5G அத்யாவசியமாகிறது. டிரைவர் இல்லாத ஒரு தானியங்கி கார் வருங்காலத்தில் சரியாக செயல்பட இந்த 5ஜி தொழில்நுட்பம் அவசியமாகிறது.


மேலே சொன்ன டாக்டர், Surgery செய்யும் போது வேறு ஒரு இடத்தில் ரத்தம் பொத்துக்கொண்டு வந்தால், அவர் ஒரு பட்டனை அமுக்கினால் நியூயார்க்கில் உள்ள ஒரு ரோபோ தன் இயந்திர கரங்களால் உடனே அந்த ரத்தத்தை நிறுத்த வேண்டும்.


இப்பொழுது மனிதர்கள் வேலை செய்வதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு AI என்று அழைக்கப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வேலை செய்யும் போது, இந்த நொடிப்பொழுது தாமதம் கூட அதன் செயல்பாட்டை தடுத்துவிடும்.


AI அதாவது செயற்கை நுண்ணறிவு நாளை ரோபோக்கள் உங்கள் வேலைகளை தொய்வில்லாமல் நொடிப்பொழுதில் செய்ய வேண்டும் என்றால் connection line இல் லேட்டனசி அதாவது தொய்வு என்பது மிக மிக கம்மியாக இருக்க வேண்டும். அதை சாதிப்பது தான் 5ஜி தொழில்நுட்பம்.


இது போன்று பல பல சாகசங்களை நீங்கள் 5ஜி தொழில்நுட்பம் மூலம் சாதிக்கலாம்.




இது உடல் நிலைக்கு அந்த அளவுக்கு தீங்கானது அல்ல என்று இதுவரை படித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.


மனித உடலுக்கு தீங்கு செய்யும் விஷயங்களை, கேன்சர் உண்டாக்கும் பொருட்களை உலக சுகாதார நிறுவனம் WHO வகைப்படுத்தியுள்ளது.


இதற்கு IARC Monograph list of carcinogens என்று ஒரு பட்டியல் உள்ளது. அதாவது நாம் உபயோகப்படுத்தும் பொருளை கேன்சர் உண்டாக்கக் கூடியதுதானா என்று தரவரிசைப்படுத்துவார்கள்!


இதை group 1, 2, 2A 2B,3 என்று சொல்வார்கள். கண்டிப்பாக கேன்சர் வராது என்றால் அது 3 என்று வகைப்படுத்தப்படும்.


வரும் ஆனா வராது என்றால் 2A. உதாரணமாக சோற்றுக்கற்றாழை 2A. Asbestos என்ற பொருள் கண்டிப்பாக கேன்சர் உண்டாக்கும். அது 1 என்று வரிசைப்படுத்தி உள்ளது. ஆனால் 5ஜி கதிர இயக்கம் 2B, அதாவது மோசமான பட்டியலில் இல்லை!!


எனவே இது உடல் நலத்திற்கு ஆபத்தானது இல்லை, என்று நாம் உறுதியாக சொல்ல முடியும்.


ஆனால் வேறு ஒரு தீங்கு வர வாய்ப்பு உள்ளது.




நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் ஒரு மானிட்டர் ஒரு சிபியு CPU ஒரு சிஸ்டம் இருக்கும். 5G பயன்பாட்டுக்கு வந்து விட்டால், இனி கம்ப்யூட்டர் தேவையில்லை. வெறும் மானிட்டர் போதும்.


Cloud Computing என்ற தொழில்நுட்பத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ரிமோட் கம்ப்யூட்டரில் சென்னையில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யலாம். உங்கள் மென்பொருளை விலை கொடுத்து வாங்க தேவையில்லை. வாடகை கொடுத்தால் போதும். சீனாவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் உட்கார்ந்த கொண்டு தமிழ்நாட்டில் ஒரு கட்டடமே கட்டலாம்.


இங்கு பல இன்ஜினியர்கள், பல கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம், இந்த 5G தொழில்நுட்பம் மூலம் வருங்காலத்தில் சாத்தியம் ஆகலாம்!


ஆனால், எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் நாம் தடுக்க முடியாது. நடப்பது நடக்கும். ஆனால் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று, 5 ஜி தொழில்நுட்பத்தை நாம் வரவேற்க வேண்டும். அதை பயன்படுத்தி நம் நாட்டை எப்படி முன்னேற்றுவது, நம்முடைய வாழ்க்கை தரத்தை நாம் எப்படி முன்னேற்றுவது என்று நாம் சிந்திக்க வேண்டும்! 




நன்றி!!🙏📚✍️🖨️⌨️💻📱🖥️

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰