பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே குழந்தைகள்!  


குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன்னால் பெற்றோராகிய நாம், சில விஷயங்களை நம் மனத்தோடு பேசி, நமக்கு நாமே விழிப்புணர்வையும் தெளிவையும் ஏற்படுத்திக்கொள்வோம்.குழந்தைகளை எதற்காக நாம் நல்வழிப்படுத்த வேண்டும்? ஏனென்றால் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம்; குழந்தைகள் அது மாதிரியாக நடந்துகொள்ளவில்லை.

சரி, குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

அவர்கள் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும்.

ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

பொய் சொல்லவே கூடாது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

எந்தத் தவறுமே செய்யக் கூடாது.

நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்க வேண்டும்.

நம் குழந்தைகள் முதலில் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அதன் பின்னர், நாம் தான் ஒவ்வொன்றாகச் சொல்லித்தர ஆரம்பித்தோம். நன்றாகக் கவனியுங்கள், நாம் சொல்லித் தருவதைத் தான் குழந்தைகள் சொல்கிறார்கள். ஒவ்வொரு செயலிலும் சாப்பிடும் முறை தொடங்கி, அன்றாட நடவடிக்கைகள் எதுவாயினும் அவை நம்மிடமிருந்து கற்றுக்கொண்டவை தான்.

அப்படியெனில், மேற்கூறியவை எல்லாம் உங்கள் எதிர்பார்ப்பாக இருந்தால், முதலில் நீங்கள் அவற்றை எல்லாம் செய்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். பொய் சொல்லாமல், மிகவும் ஒழுக்கமாக, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நாம் ஒவ்வொருவரும் நடந்து வருகிறோமா?

குழந்தைகள் மாசில்லா கண்ணாடிகள். ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சொல்லிலும் நம்மைதான் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்றால், நாம் முதலில் அவற்றை எல்லாம் செய்ய வேண்டும்.

என்னைப் போன்று கண்கள், என் அப்பா மாதிரி பற்கள், என் அம்மா போல கன்னங்கள் என்று விவரிக்கும் நாம், அவர்களின் பழக்கங்களும் அப்படியே நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்பதை ஏன் மறந்துவிடுகிறோம்?

குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் அது உங்கள் பிடிவாதம் தான். ஒருவேளை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக அது உங்கள் குணம் என்பதை மறவாதீர்கள்.

ஒரு வீட்டில் குழந்தைகளின் தந்தை கோபம் வந்தால், பலமாகக் கத்துகிறார் அல்லது பொருள்களை உடைக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் வளரும் சிறிய வயது குழந்தையும் கோபம் வந்தால் கத்திப் பேச வேண்டும், சத்தமாகப் பேச வேண்டும், பொருள்களை உடைக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ளும். இப்போது அந்தக் குழந்தையும் கோபம் வந்தால் பொருள்களை எடுத்து உடைக்கும். உடனே பெற்றோர், குழந்தையை அதட்டுவார்கள், தண்டிப்பார்கள். அப்போது அந்தக் குழந்தை, அடுத்த முறைதான் இவ்வாறு பொருள்களை எடுத்து உடைத்தால் அம்மாவிடம் இருந்து, அப்பாவிடமிருந்து தண்டனை கிடைக்கும். என்னால் அவர்களை எதிர்க்க இயலாது என உணர்ந்துகொண்டு, பொருள்களை எறிவதையோ கத்திப் பேசுவதையோ நிறுத்திவிடும்.

ஆனால், இதே குழந்தைகள் பதின் பருவத்தையோ இளம்பருவத்தை அடையும்போதோ தான் பெற்றோரைவிடப் பலசாலியாக உணரும்போது கண்டிப்பாக இதே நடத்தையைக் கையெடுத்துக்கொள்வார்கள். அவர்களும் இதே முறையை, கோபம் வந்தால், அந்தக் கோபத்தைக் கண்டிப்பாகச் சத்தமாகப் பேசியோ பொருள்களை உடைத்தோ தான் வெளிப்படுத்துவார்கள்.

இளவயதிலேயே விதைக்கப்பட்ட ஒரு விதை சூழ்நிலை காரணமாக முளைவிட முடியவில்லை; இப்போது சூழ்நிலை சரியாக அமைந்தது முளைவிட்டுவிட்டது. இதுதான் சில இளைஞர்களிடம் திடீரென்று காணப்படும் மாற்றத்திற்குக் காரணம்.

குழந்தை தான் கற்ற ஒரு நடத்தையை வெளிப்படுத்த முடியாமல் நடந்துகொள்வதற்குக் காரணம், உங்களை வெற்றிகொள்ள முடியாது என்ற எண்ணம் மட்டுமே. மேலும், இந்தத் தருணம் தான் குழந்தைகளிடம், ”வலியது மட்டுமே வாழும்என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

சில நேரத்தில், நாம் அளிக்கும் தண்டனைகள் குழந்தைகளிடம் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்னவோ உண்மைதான். ஆனால், கூடவே அது பயத்தையும் பாதுகாப்பு உணர்வின்மையையும் உருவாக்கிவிட்டுச் செல்கிறது. அதுவே, தன்னை எல்லையற்ற ஆற்றல்களைக்கொண்ட ஒருவர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, உணர்ந்துகொள்வதற்கு மிகத் தடையாக அமைந்துவிடுகிறது.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்; குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதோ ஒன்று உங்களுக்குச் சரியாகப்படவில்லை என்றால் அதன் மூலக் காரணம் என்னவென்று பாருங்கள். கண்டிப்பாக அது குழந்தைகளாக இருக்கவே முடியாது. அது வளர்ந்த ஒரு நபராகத்தான் இருக்க முடியும். சுற்றுச்சூழலாக மட்டுமே இருக்க முடியும்.


அது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்; அண்டைவீட்டாராக, உறவினர்களாக, நண்பர்களாக, ஆசிரியர்களாகக்கூட இருக்கலாம். நிறைய விஷயங்கள் நம் வீட்டுத் தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர்.

மேலும், நம்மில் எத்தனை பேர், பெற்றோராக இருத்தல் என்பது கடினமான, அர்ப்பணிப்பு மிகுந்த, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க வேலை என்பதை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளோடு பெற்றோராக ஆனோம்? (இந்தக் கேள்வி கண்டிப்பாகக் குற்ற உணர்வு ஏற்படுத்துவதற்காக அல்ல; சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே.)

பெற்றோராக இருத்தல் என்பது ஒரு மிகக் கடினமான வேலை என்பதை இந்தச் சமுதாயம் சொல்லித் தராமல், பெற்றோராக ஆவதற்கான வேறு சில காரணங்களை நியமித்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அது ஒரு தேர்வு என்பதைச் சொல்லித் தரவே இல்லை. இன்னும் ஒரு க்ரூப் கல்யாணம் முடிந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்; குழந்தை பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்; குழந்தைக்கு நான்கு வயது ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்; குழந்தை பள்ளிக்குச் சென்றால் சரியாகிவிடும்; இன்னும் அடுக்கிக்கொண்டே போகிறார்களே தவிர, அது ஒரு நீண்ட நாள் பொறுப்பு என்ற உண்மையைக் கடைசிவரை சொல்லித் தருவதில்லை.

இறுதியாக நான் பெற்றோருக்குச் சொல்ல விரும்புகிற முதல் விஷயம், இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு குழந்தையும் அளவுகடந்த அன்புக்கு மட்டுமே உரியவர்கள். அவர்களை நல்வழிப்படுத்தத முயற்சிப்பதற்கு முன்னால் அவர்கள் செய்யும் தவறுகளில் நமக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். மாற வேண்டியது நாமும் தான் என்பதையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

பெற்றோராக ஆவதற்கு தங்களை முழுவதுமாகத் தயார்படுத்திக்கொண்டு, குழந்தை வளர்ப்பில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, குழந்தைகளை முழுமூச்சாக, முழுக் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் வளர்த்துவரும் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்தப் பெற்றோரைச் சந்திக்கும் வரை நானும் இதையெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றே கருதினேன்; இப்போது நான் உங்களிடம் சொல்ல விரும்புகிற இரண்டாவது விஷயம், “மேற்கூறிய குணங்களுடன் கூடிய ஒரு பெற்றோராக இருப்பது சாத்தியம்; இதைச் சில பெற்றோர் கடைப்பிடித்து வருகிறார்கள்என்பதை நினைவில் வையுங்கள்.

அந்தச் சாத்தியத்தை மகிழ்ச்சியோடு செயல்படுத்த தொடங்கி வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:


ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰