சேமிப்பின் அவசியமும், சிக்கலில்லாத முதலீடும்! -1

 

சேமிப்பின் அவசியமும், சிக்கலில்லாத முதலீடும்! -1




-செழியன் ஜானகிராமன்📚✍️


 


பணத்தை சேமிப்பது ஒரு கலை! பண முதலீட்டில் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அதைவிட பெரிய கலை! இங்கு நம் அரசாங்கம் பாதுகாப்பான சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் செய்துள்ள வாய்ப்புகள் என்னென்ன? அதைக் கடந்து நாம் என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்!


பணத்தை சேமிக்கத் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்ய கஷ்ட்டப்பட  வேண்டியதில்லை. இருந்தாலும், காலம் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோமே தவிர, எளிதாகச் செய்யக் கூடிய முதலீட்டை 95 சதவிகிதம் மக்கள் செய்வதில்லை.


பலரும் பணத்தைச் சேமித்தால் போதும் அவையே நம் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று நினைத்து விடுக்கின்றனர். ஆனால், சேமிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றாது. என்பதைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.


முதலில் சேமிப்பு-முதலீடு இரண்டிற்கான வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.. நம் சமூகம் உங்கள் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்திச் சேமியுங்கள் என்று கற்றுக் கொடுத்துள்ளது. நம் முன்னோர்களும் இதை வலியுறுத்திச் சொன்னார்கள்.


ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம் தன் சம்பாத்தியத்தில்  குறைந்தது 10 சதவிகிதம் சேமிக்க வேண்டும்.  பெண்கள் சிறு தொகையை அஞ்சறை பெட்டியில் போட்டு வைப்பார்கள். ஆண்கள் பீரோவில், பெட்டியில் வைப்பார்கள். அடுத்த மாதம் இது போல் சேமிக்க மீண்டும் உழைக்க வேண்டும். ஆக, உழைத்தால் மட்டும் தான் சேமிக்க முடியும்!  ஆனால், இவர்கள்  ஏன் எளிதாக செய்யக் கூடிய முதலீட்டை அதன் பிறகு யோசிப்பதில்லை?


விலைவாசி உயர்வை உங்கள் சேமிப்புடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.  அது தெரிந்துவிட்டால் சேமிப்பு மட்டும் நம்மைப் பாதுகாக்காது என்று புரியவரும்.


சேமிப்பு–முதலீடு என்ன வித்தியாசம் ?


மாதம் ஆயிரம் ரூபாய் என்று  12 மாதம் எடுத்து பீரோவில் வைத்தால் வருடம் முடிவில் பன்னிரெண்டாயிரம் ரூபாயாக இருக்கும். பீரோவில் இருக்கும் பன்னிரெண்டாயிரம் ரூபாய் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் பன்னிரெண்டாயிரம் மட்டுமே மதிப்பு. காரணம் அந்த பணம் உங்கள் பீரோவில்  இருப்பதால் .யோசித்துப் பாருங்கள். ஆறு மாதம் முன்பு வாங்கிய பொருட்கள் தற்பொழுது அதே விலை கொடுத்தா வாங்குகிறோம்? நிச்சயம் விலை ஏறி இருக்கும். ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பொருள் ஒரு வருடத்தில் கொஞ்சமாவது விலை ஏறி இருக்கும். அதாவது, வாங்கும் பொருள் ஒன்றுதான் ஆனால் பணம் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம்.


பெட்ரோல்-டீசல், கேஸ்  விலை உயர்வு இதற்குச் சிறந்த உதாரணம். இந்த விலை உயர்வுதான் பணவீக்கம்(Infltation) என்று அழைக்கப்படுகிறது.


பொருட்களின் விலை உயர்கிறது! ஆனால், பீரோவில் உங்கள் ஆயிரம் ரூபாய்,  ஆயிரமாகவே இருக்கிறதே! அவையும் உயர வேண்டும் அல்லவா? பீரோவில் வைத்து இருந்தால் எப்படி உயரும்?


வங்கி தான் வாங்கும் வாடிக்கையாளர் பணத்தைப் பலருக்குக் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நமக்குக் கொடுக்கிறார்கள். அதே வங்கி நம்மிடம் வாங்கிய பணத்தை யாருக்கும் கொடுக்காமல் லாக்கரில் வைத்து இருந்தால் நமக்கு எப்படி வட்டி கொடுப்பார்கள்?  வங்கி தன் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும்?


வங்கி செய்வது தான்  முதலீட்டு வகை ஆகும். அந்த முறையை நாமும் செய்யத் தொடங்க வேண்டும். அதற்காக மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று இல்லை. அதைத் தவிர, நிறைய முறைகள் அரசு நமக்கு உருவாக்கிக் கொடுத்து உள்ளது.


முதலீடு என்றால் என்ன?


பணத்தைச் சேமிக்கிறதுக்காக நாம் உழைக்க வேண்டும். நாம் சேமித்த பணம், விலை அதிகமாகும் பொருட்களை வாங்கும் அளவு  நமக்காக வளர வேண்டும்.


பணம் எப்படி வளரும்?  உங்கள் பணம் நீங்கள் செய்யும் முதலீடு வகையில் உங்களுக்காக வளரும்!


 


உதாரணம் கொண்டு பார்த்தால் எளிதில் புரிந்துவிடும்.


பீரோவில் பணம் வைப்பதற்குப் பதில் வங்கி FD(Fixed Deposit) போடலாம், குறைவான வட்டி வரும் என்றாலும், நீங்கள் சேமித்த பணம் உங்களுக்காக பெருகி சிறிது சம்பாதிக்கும்.


பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்தால் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும். வங்கி போன்று நிலையான வருமானம் கொடுக்காது.  குறையலாம்-ஏறலாம்.  ஆனால், வங்கி வட்டியை விட அதிகம் சம்பாதிக்கும்.


பரஸ்பர நிதி நிறுவனங்கள் உங்கள் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் ஏறிக் கொண்டே போகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நீண்ட வருடங்கள் காத்திருந்தால் லாபம் வரவே அதிக வாய்ப்பு.


தினச் செலவுகள், மாதச் செலவுகள், மருத்துவச் செலவுகள் இவற்றுக்கு வேண்டிய பணத்தை மட்டும் பீரோவில் வைத்து இருங்கள். இதைத் தவிர்த்து மீதி இருக்கும் பணம் முழுவதும் முதலீடு செய்து விடுங்கள்.


நம் நாட்டில் அரசு அனுமதியுடன் நிறைய முதலீடு முறைகள் உண்டு. அரசே நிறையச் சேமிப்பு முறைகளையும் உருவாகியுள்ளது ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இவை எதுவும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. அரசும் இதற்கு பெரிதாக முயற்சி எடுப்பதில்லை  அதனால்தான் வட்டி அதிகம் கொடுக்கும் மோசடி கும்பலிடம், சீட்டு மோசடி, க்ரிப்டோகரன்சி மோசடி செய்யும் நபர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.


அதனால் நாம் முழுமையாக அரசு உருவாக்கிய முதலீடு முறைகள், வங்கிகள் உருவாக்கிய முதலீடு முறைகள், பரஸ்பர நிதி முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.


பாதுகாப்பான முதலீடு– புரிந்து கொள்ளப்பட்ட  முதலீடு


பொதுவாக அனைவரும் ஒரே குரலில் சொல்வது நாங்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால், உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது பாதுகாப்பான முதலீடு அல்ல. புரிந்து கொள்ளப்பட்ட முதலீடே ஆகும்.


அது என்ன புரிந்து கொள்ளப்பட்ட  முதலீடு?


நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். யாரிடம் பணம் கொடுக்கிறோம் , அவர்கள் அந்த பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள், அரசு அனுமதி வாங்கி உள்ளார்களா? அவர்களின் விதி முறைகள் என்ன? இதில் உள்ள ரிஸ்க் என்ன? போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நம் பணத்தைக் கொடுக்க வேண்டும். இது தான் புரிந்து கொள்ளப்பட்ட முதலீடு ஆகும்.


பாதுகாப்பு என்று ஒரு வாசகத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் செய்யும் முதலீடு முழுவதும் தெரிந்து கொண்டீர்களா? புரிந்து கொண்டீர்களா? என்று பாருங்கள்.


இன்சூரன்ஸ் முகவர் சொல்வதால் மருத்துவ பாலிசி எடுக்கிறோம்! ஆனால், அந்த பாலிசியின் நன்மைகள் என்ன? எந்த நோய்க்கு கிளைம் உண்டு அல்லது இல்லை எனத் தெரிந்து கொள்ளாமல் மருத்துவ பாலிசி எடுத்தால் போதும் அனைத்து நோய்களுக்கும் நாம் மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் மற்றும்  இன்சூரன்ஸ் நிறுவனமே தொகையைக் கட்டிவிடும்  என்று நினைத்து விடுகிறோம்.  ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்று நீங்கள்  மருத்துவமனையில் சேரும்பொழுதான் தெரியவரும். .


மருத்துவமனையில் சேரும் போது தான் இதற்கெல்லாம் பணம் தர மாட்டோம் நீங்களே செலுத்த வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் சொல்லும். உங்கள் பாலிசியிலேயே அதெல்லாம் குறிப்பிட்டு உள்ளோம், முகவர் சொல்லியிருப்பாரே என்று சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனம் கையை விரிக்கும் பொழுதுதான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கோம் என்று தெரியவரும்.  அந்த நேரம் நாம் விவாதம் செய்து கொண்டு இருக்க முடியாது. முகவரை அழைத்து சத்தம் போட்டுக் கொண்டு இருக்க முடியாது.


கடன் வாங்கி மருத்துவமனையில் தொகையைக் கட்டி வெளியே வருவோம். ஆக, இந்த பாலிசியை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாததே முக்கிய காரணம் ஆகும். பெரும்பாலான முகவர்கள்  கமிஷன் அதிகம் கிடைக்கும் வகையில்  விற்பனை செய்வார்கள். நாமும் அவரை நம்பி எடுப்போம். பொதுவாக யாரையும் நம்பி எடுப்பதைவிட எடுக்கும் பாலிசி, செய்யும் முதலீடு  முழுவதும் நமக்குத் தெரிந்து உள்ளதா?  என்று பார்த்து வாங்க வேண்டும்.


முதலீடு வகைகள்


இந்தியாவில் முதலீடு செய்யும் 95 சதவிகிதம் மக்கள் வங்கி FDயில் பணம் போடுவதையே விரும்புகிறார்கள். பாதுகாப்பு, நிலையான வட்டி முக்கிய காரணம் ஆகும். வங்கி பாதுகாப்பு என்பதில் உண்மை என்றாலும், ஒரு வேளை வங்கி திவாலாகி மூடும் நிலை உருவானால், நீங்கள் போட்டுள்ள பணத்தில் பாதி மட்டுமே திரும்பக் கொடுப்பார்கள்..


பொதுத்துறை வங்கி,  அஞ்சலகம்  மத்திய அரசு நிறுவனங்களாகும்! அதனால், மக்களுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள். பாதுகாப்பு தான்! ஆனால், அதையும் தாண்டி இருக்கும் பல முதலீடு முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலீடு முறைகளும் தொடர்ந்து பார்க்கலாம்.


உங்களுக்கு ஏற்ற முதலீட்டை நீங்களே தேர்ந்து எடுங்கள்


சேமித்த பணத்தில் விலை  உயரும் பொருட்களை வாங்க முடியாது. அதனால் சேமித்த பணத்தை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு பொருட்கள் விலை உயர்ந்தாலும் வாங்க முடியும். இதன் மூலம் விலைவாசி உயர்வை நம்மால் சமாளிக்க முடியும்.


சேமிப்போம்-முதலீடு செய்வோம். தொடர்ந்து பேசுவோம்..!


கட்டுரையாளர்;🥰🌴🌈செழியன் ஜானகிராமன்📚✍️

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰