கிராமத்து அத்தியாயம் ..
மக்களின் வாழ்வியல் ..
ஆற்று குளியல் ..
ஆற்று நீரில் படுத்து உருண்டு உற்சாகமாக குளியல் !
குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ?
நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை,தாடை,மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும்.
எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.
Comments
Post a Comment