கணக்கு வருடம் ஆரம்பிக்கும் நாள் .....2022-2023....
ஆண்டின் முழு வருட கணக்கு முடிவு நாளாக நிர்ணயித்தது யார்?
ஓர் ஆண்டு தொடங்கும் நாள் முதல் இறுதி நாள் வரை நாம் செலவழிக்கும், வரவு வைக்கும் பணம் ஏராளம். அதேபோல, வங்கிகளில் அன்றாடம் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருப்பது நிதர்சனம். வங்கி என்பது மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பு என்றாலும், அதன் பட்ஜெட் கணக்கு சரி பார்த்து ஒரு ஆண்டுக்கான வரவு செலவுகளை கணக்கிட்டு, நடந்து முடிந்த வருடத்துக்கான மொத்த கணக்கினை மார்ச் 31-ம் தேதி முடித்து ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டுக்கான கணக்கினை புதிதாக ஆரம்பிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
ஓர் ஆண்டின் முதல் மாதம் ஜனவரி எனும்போது டிசம்பர் 31-ம் நாள் கணக்கினை முடித்து, ஜனவரி 1-ம் நாளில் இருந்துதானே புதுக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்? இந்த சந்தேகத்துக்கு விடை தேடியபோது சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.
பிரிட்டிஷ் அரசு நம் நாட்டில் நுழையும் முன்பு, முகலாய அரசர்கள் இந்தியாவை ஆண்டு வந்தனர். அந்த முகலாய அரசர்களின் பூர்வீகம் உஸ்பகிஸ்தான், சமர்காண்ட் போன்ற பகுதிகளைச் சார்ந்தது. அவர்கள் அங்கிருந்து இந்தியா வருகையில் தட்பவெட்ப நிலை மாறுபட்டது. வெயில் காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த இடத்துக்கே சென்றுவிடுவர். காரணம், இந்தியாவைவிட அவர்கள் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவு. ஜகாங்கிர் காலத்தில் அவர்கள் மார்ச் மாதத்தில் வடக்கே பனிப்பிரதேசங்களை நோக்கிச் செல்வர். அவர்கள் அங்கு செல்லும் முன் கடந்த ஆண்டுக்கான வரவு- செலவு கணக்கினை முடித்துவிட்டுக் கிளம்புவர். இங்கிருந்துதான் மார்ச் 31-ல் ஒரு வருட வங்கி கணக்கு முடிக்கப்படும் வழக்கம் ஆரம்பமானது.
இதனை உற்றுக் கவனித்த ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் இங்கு இல்லாத அந்த சமயத்தில் இந்தியாவைக் கைப்பற்றினர் என்கிறது வரலாறு. ஆக, அவர்களும் முகலாய அரசர்கள் பின்பற்றிய அந்த வழக்கத்தையே தொடர்ந்து வந்தனர். முகலாய அரசர்கள் காலத்தில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது என்றால் அது வரலாற்றின் வடிவம் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் ஹிந்தி வருட பிறப்பு எனப்படும் `வைஷாகா` என்னும் பண்டிகை ஏப்ரல் முதல் நாள் வரும். அதைக் கருத்தில் கொண்டு இந்த முறை செயல்படுத்தப்பட்டது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல் ஆண்டின் கடைசி மாதங்களில் தான் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரும். அந்த சமயங்களில் மக்களிடையே வரவு செலவு தொடர்ந்து இருக்கும். விழாக்கள் முடிந்து மக்கள் இயல்பு நாட்களுக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும். இந்த காரணத்தில் தான் டிசம்பர் இறுதி நாளை ஆண்டின் கணக்கு முடிவு நாளாக வைக்காமல் மார்ச் 31-ம் நாளை ஆண்டின் வங்கி கணக்கு முடிவு நாளாக அமைத்து அதனைத் தொடர்ந்து பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த நாள் வெவ்வேறு மாதங்களில் வருகிறது. இந்தியாவில் மார்ச் 31 ஆண்டு முழு வருட கணக்கு முடிவு நாளாக இருக்கிறது. அவ்வளவே.
Sivakumar Kumar
Wish you all a very happy
new financial year
2022-23
May the new Financial Year bring
More success & achievements
Sets new records and landmarks....
இந்த நாள் இனிய நாளாக அமைய நல்
வாழ்த்துகள்
!!With
best wishes
.....Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms..Whatsapp
siva19732001@gmail.com
Comments
Post a Comment