கேள்வி : குதிரைகளின் பரிணாமம் & வரலாற்றுச் சிறப்புமிக்க குதிரைகள் பற்றி கூற முடியுமா ?



என் பதில் : 📚✍️



கற்காலத்தில் மனிதன் எதிரிகளிடம் இருந்தும், கொடிய மிருகங்களிடம் இருந்தும் தப்பவேண்டி, அதற்கு வாகாக ஒரு மிருகத்தை பழக்க நினைத்தான், அவன் கண்காணித்ததில் மிக வேகமாக ஓடக்கூடியதாகவும் பழக்குவதற்கும் எளிதாகவும் இருந்த மிருகம் குதிரைதான்! அதை பழக்க ஆரம்பித்தது மனித நாகரீகத்தின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு எனலாம்.

குதிரையை பழக்க ஆரம்பித்தபிறகுதான் மனிதன் தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தான், நிறைய புது இடங்களை கண்டுபிடித்தான், வளர்ச்சி பெற்றான். சரி.. முன்னுரை போதும்...

இன்றிலிருந்து சுமார் நான்கரை கோடி வருடங்கள் முன்பு, நிறைய கால்களுடன் பூச்சியாக சுற்றிக்கொண்டிருந்த உயிரினம், மெல்ல பரிணமித்து, EOHIPPUS என்கிற உயிரினமாக உருவாகியது. "யோஹிபஸ்" பார்க்க குதிரையிலும் சேராமல், கழுதையிலும் சேராமல் ஒரு மாதிரி மான் போல இருந்தது.

அதன்பின் சிலகோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மெல்லப்பரிணமித்து சிலபல கட்ட வளர்சிகளில் இன்றுள்ள குதிரையின் உருவெடுத்தது. (இப்போது நம்மிடம் உள்ள குதிரைகளின் இனங்கள் மொத்தம் 12)

குதிரையின் பரிணாம வளர்ச்சி

குதிரைகளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பந்தம், மற்றும் புரிதல்களை பற்றி வராலாற்றில் ஏகப்பட்ட குறிப்புகள் உண்டு. தன் எஜமானனின் மன ஓட்டத்தை நுகரும் திறன் குதிரைகளுக்கு உண்டு, கணநேரத்தில் எஜமானன் மனநிலையை உணர்ந்து செயல்படும் அறிவு குதிரைகளுக்கு உண்டு. போரில் அடிபட்டு மயங்கியவர்களை மிகச்சரியாக வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்த குதிரைகள் பற்றிய கதைகள் ஏராளம்.

வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் சில குதிரைகள்.

சேதக் (chetak)

ராஜபுத்திர மன்னன் மஹாராணா ப்ராதாப்பின் குதிரைதான் இந்த சேத்தக் (பஜாஜ் ஸ்கூட்டர்க்கு இந்த பெயர் வைத்ததற்கும் இந்த குதிரைதான் காரணம் )

21 ஜூன் 1576 அன்று, முகலாயர்களுடன் ஏற்பட்ட சண்டையில் ரானாபிரதாப்பின் குதிரையான சேத்தக் படுகாயமடைந்தது, அந்த சூழலிலும் எஜமானருக்கு விசுவாசமாக உயிர் போகும்வரை போராடியது. அது செத்து வீழ்ந்த இடத்தில் கதறியழுத மகாராஜா, அது உயிர்விட்ட ராஜ்சமந்த் என்கிற இடத்தில் சேத்தக்குக்கு சமாதி கட்டினார் ! இன்றளவும் சேத்தக்கை வழிபடுபவர்கள் உண்டு.

புசிபலஸ் (Bucephalus)

வரலாற்றில் முதன்முதலாக பிரபல அந்தஸ்து பெற்ற குதிரைதான் புசிபலஸ் !

இந்த புசிபலஸ் குதிரைதான் அலெக்சாண்டர் வெற்றிபெற்ற பல போர்களில் அவரை சுமந்துச்சென்றது. வரலாற்றில் இந்த குதிரையை பற்றி நிறைய குறிப்புகள் உண்டு, அதன் கம்பீரமே மிரட்டுமாம் காண்பவர்களை !

அலெக்சாந்தர் இந்த் குதிரையை தனக்காக தேர்ந்தெடுத்தபோது அவருடைய வயது 13, அப்போதிருந்து அந்த குதிரையை அவர் பிரியவே இல்லை ! இந்திய போர் வரை....

கிமு 326, இந்தியாவில் போரஸ் என்கிற மன்னனுடன் ஏற்பட்ட போரில், குதிரையை கொன்றால்தான் அலெக்சாண்டரை வீழ்த்த முடியும் என்று நினைத்த யாரோ குதிரையை சின்னாபின்னமாக்க, படுகாயங்களோடு செத்து செத்து வீழ்ந்தது புசிபலஸ்...!

அழுது புரண்ட அலெக்சாண்டர், அந்த இறந்த குதிரையின் நினைவால் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில், ஜீலம் நதிக்கரையில் ஒரு ஊருக்கே தன் குதிரையின் பெயரை சூட்டினான். பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிளவுபட்டபிறகு, அந்த பெயர் நீக்கப்பட்டு, அந்த நகருக்கு பாலியா என்ற பெயர் வைக்கப்பட்டது !

டிராவலர் ( Traveller)

ஜெனரல் ராபர்ட் என்பவரின் குதிரையின் பெயர்தான் "டிராவலர்"

அமெரிக்க உள்நாட்டு போர் சமயங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது இந்த குதிரைதான். போர்களில் அந்த குதிரையின் சாகசத்தை பேசாத ஆட்களே கிடையாது, அவ்வளவு சாமர்த்தியம், அறிவு, தைரியம்.. அப்படி பல சிறப்பு மிக்க குதிரையான ட்ராவலரை, அதன் எஜமானரே சுட்டுக்கொன்றார். காரணம், அதற்கு உண்டான தீர்க்க முடியாத நோய். கொன்றுவிட்டு அழுது புலம்பியபடி அவர் சொன்னது.. " ட்ராவலரின் வலியை என்னால் தாங்க முடியவில்லை " !

மாரேங்கோ (marengo)

மாவீரன் நெப்போலியனின் குதிரையின் பெயர்தான் மாரேங்கோ, எகிப்த்திய குதிரை 1799 ல் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டது. வரலாற்றில் இந்த குதிரைக்கென தனி பெயர் உண்டு, ஒவ்வொரு போரிலும் தன் எஜமானரை காப்பற்றும் விதத்தில் முன் யோசனையோடு செயல்படும் குதிரை என்று இதற்கு பெயர் உண்டு !

பல போர்களில் அது தன் புத்திசாலித்தனத்தை காட்டி நெப்போலியனுக்கு பிடித்த நண்பனாக வலம்வந்த இந்த குதிரை, புகழ்பெற்ற வாட்டர் லூ போரில் நெப்போலியன் தோற்ற பிறகு, எதிரிகள் வசமானது. ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்த பிரிட்டன் அதிகாரி லார்ட் பீட்டர், மாரேங்கோவை கொல்லாமல் தன்னுடன் கொண்டுசென்றுவிட்டார் ! அதன்பின் இங்கிலாந்தில் வசித்த மாரேங்கோ 1831 ல் மரணமடைந்தது. இன்றும் இதன் எலும்புகூட்டை chelsea வில் அமைந்துள்ள national army musium இல் காணலாம் !

சார்ஜென்ட் ரேக்லஸ் ( Sergeant Reckless)

குதிரைக்கு பெயர் சார்ஜெண்டா ? ஆம். இந்த சார்ஜென்ட் ரேக்லஸ் குதிரை உலகப்புகழ் பெற்ற போர் குதிரைகளில் ஒன்று !

மங்கோலியாவில் இருந்து 1952 ல் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டதுதான் "சார்ஜென்ட் ரேக்லஸ்" அமெரிக்க கப்பற்படை அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்டு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போர்க்கருவிகள் கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டது !

புத்திசாலி குதிரை என வரலாற்றில் அக்குதிரை இடம்பெற காரணம், பலமுறை ஆட்கள் இல்லாமல் தனியாக பொருட்களை சுமந்து சரியான இடத்திற்கு கொண்டுசென்றதுதான் ! ரேக்லசின் ரெக்கார்ட் தெரியுமா ? 1953 நடந்த ஒரு சண்டையின் போது, ஒரே நாளில் 51 முறைகள் தனியாக ட்ரிப் அடித்தது !

1954 ல் சர்வீசில் இருந்து ரிட்டயர்ட் ஆனது ரேக்லஸ், அதன் பின் பண்ணையில் மரியாதையாக வைக்கப்பட்டு, 1968 ல் இறந்து போனது. லைப் மேகசினில் "100 ஆல் டைம் அமெரிக்கன் ஹார்ஸ்" இடம் பிடித்தது ரேக்லசின் சாதனைகளில் ஒன்று !

குதிரைகள் புகழ் பாடுவதை இத்தோடு நிறுத்திவிட்டு, HORSE POWER என்று நாம் குறிப்பிடுகிறோம் அல்லவா ? அது என்ன என்று பார்ப்போம்.


அதென்ன ஹார்ஸ் பவர் ?

குதிரை சக்தியைத்தான் ஹார்ஸ் பவர் என்கிறோம். ஒரு குதிரை சக்தி என்பது ஒரு ஹார்ஸ் பவர். ஒகே! ஒரு குதிரை சக்தி என்பது என்ன? அதற்கு குதிரையை ஏன் அளவுகோல் ஆக்குகிறோம் ?

குதிரையின் வேகம், தோராயமாக 20 மைல்கல் / ஒருமணிக்கு, அதை சக்தியாக மாற்றும்போது ஒரு குதிரை சக்தி என்பது 746 வாட்கள். (746 watts) இந்த கணக்கீட்டின்படி 1500 (1492) வாட்கள் இரண்டு குதிரை சக்தி எனப்படுகிறது.

இந்த கணக்கில்தான் மோட்டார் வாகனங்களுக்கும், எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் துறைகளிலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது !

நன்றி ....🥰🙏

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰