கேள்வி :  பங்குச்சந்தை ஒரு இலாபகரமான தொழிலாக இருந்தும், பல வருடங்கள் இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெரும்பாலான பங்கு தரகர்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெரும் பணக்காரர்கள் ஆவது இல்லை?


என் பதில் : 


அப்படி ஒன்றும் இல்லை, பொதுவாக ஓரளவு பணம் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் தான் பணக்காரன் என்று எல்லேரிடமும் பெறுமையாக காட்டிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டு எதாவது விஷேசத்திற்கு வருபவர்கள் கழுத்து நிறைய நகைகளை மாட்டிக்கொண்டு வறுவார்கள் அவர்கள் ஓரளவுக்கு பணம் உள்ளவர்கள் middle class மக்கள். ஆனால் உண்மையான பணக்காரர்கள் கழுத்தில் ஒரே ஒரு Chain மட்டும் போட்டுக்கொண்டு வறுவார்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். 


பொதுவாக நீங்களே ஒரு தொழிலில் இருந்து உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் வருமான வரி கட்ட வேண்டி வரும் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் நான் இத்தனை வருடம் உசுர குடுத்து கஷ்டப்பட்டு உழைப்பை போட்டு எப்படி இலகுவாக சம்பாரிப்பது என்ற முறையை நான் கண்டுபிடித்திருப்பேன்? நான் எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பேன் அப்பொழுதெல்லாம் இந்த அரசு அய்யோ பாவம் ரொம்ப நஷ்டபட்டுவிட்டான் இவருக்கு ஊக்கதொகை கொடுப்போம் என்று கொடுத்ததா? அப்பொழுது எல்லாம் கண்டுக்காத அரசுக்கு இப்பொழுது நான் நன்றாக சம்பாரிக்கும் பொழுது அரசாங்கம் வந்து Easy-யாக வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி விடுவதா என்று எல்லோறுக்கும் தோன்றும் அதுவும் பஙகுச்சந்தையில் இருக்கின்றவருக்கு புரியும் நஷ்டம் என்றால் எப்படி இருக்கும் என்று. அதுவும் உண்மையான தினசரி வர்த்தகருக்கு புரியும். வரி என்ற பெயரில் பிடுங்கிவிடுவார்களே என்ற அச்சத்தில் மிகவும் அமைதியாகி விடுவார்கள். 



ஏழை என்ற தோற்றத்தை காண்பிக்க தொடங்கிவிடுவார்கள். பணம் கையில் இருப்பதால் அக்கம் பக்கத்தினர் வந்து கடன் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இல்லை என்றால் மனஸ்தாபம் ஏற்படும். இன்னும் நிறைய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளது. அது பணக்காரர் ஆகும்பொழுது புரியும். ஆகவே பெறும்பான்மையாக பங்குச்சந்தையில் நிறைய பணம் ஈட்டுபவர்கள் வெளியே தன்னை காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை. ஏனென்றால் பங்குச்சந்தையில் சம்பாரிப்பவர் என்றாலே பொதுவாக சூதாட்டம் என்று கூறுபவர்கள் அதிகம் ஏதோ சுழ்ச்சி செய்து அடுத்தவர் பணத்தை பிடுங்குபவர்கள் என்ற எண்ணம். ஆகவே தான் யாராக இருந்தாலும் பங்குச்சந்தையில் இருந்து சம்பாரித்த பணத்தை தனக்கென்று வேறு சிறு தொழில்களை துடங்கி அதில் இருந்து லாபம் வருவதாக காட்டிக்கொள்வார்கள்.


நிறைய பங்குச்சந்தையில் சம்பாதிப்பவர்கள் சந்தையை புரிந்து கொண்டு சம்பாதிக்கும் ஆட்களுக்கு தெரியும். 10வருடம் ஆகியும் பங்குச்சந்தையில் சம்பாதிக்காத ஆட்கள் உண்டு. இவர்கள் தனக்கென்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு 1வாரம் நல்ல வருமானம் பாரத்ததும் இது தான் பங்குச்சந்தை என்று புரிந்துகொண்டேன் இந்த முறையை யாருக்கும் சொல்ல கூடாது என்றும் அடுத்தவர்கள் செய்வது எல்லாம் பொய் என்றும் நான் சரியான முறையை கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து தான் தான் பங்குச்சந்தையின் கடவுள் என்றும் என்னுவார்கள். 


அடுத்தத 2வது வாரம் நஷ்டம் ஆகும் என்ன ஆயிற்று என் சம்பாதிக்கும் முறைக்கு? அதனை சரி செய்யலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கி அதை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். மறுபடியும் 1 வாரம் கழித்து அவர் முறை லாபத்தை தரும் அப்பாடி அதான பார்த்தேன் என் முறையாவது தோற்பதாவது என்று பித்திக்கொள்வார்கள். இப்படியே மாரி மாரி லாபம், நஷ்டம் என்று வருடக்கடைசியில் கணக்கு போட்டால் நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இந்த முறையை சரி செய்யலாம் என்று வருடக்கணக்கில் குண்டாசட்டியில் குதிரை ஓட்டுவார்கள் அதன் புரிதல் இல்லாமல். நாலு பேர் என்ன செய்கின்றார்கள் என்று நாமலும் அதை செய்து பார்த்து சரியான முறை எது என்ற விதத்தை கற்றுக்கொள்ளலாம் என்று முன் வருவது இல்லை. 


இது தான் சரியான முறை என்று வேறு இல்லவே இல்லை என்று அந்த சிறு வட்டத்திற்குள்ளயே தான் இருப்பார்கள் இவர்களுக்கு வருமானம் வருவது போல் இருக்கும் ஆனால் மாதம் கடைசியிலோ இல்லை வருடக்கடைசியிலோ பார்க்கும்பொழுது நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இவர்களால் 40வருடம் ஆனாலும் சம்பாதிக்க முடியாது. பங்குச்சந்தையில் நஷ்டம், லாபம் தரக்கூடிய எல்லா முறைகளையும் கற்க வேண்டும் அப்பொழுது இந்த நேரம் தவறான சமிக்கையை மார்க்கெட் காட்டுகின்றது இந்த நேரத்தில மார்கெட்டில் நுழையக்கூடாது என்று தெரிந்து தவிர்க்க வேண்டும். 


சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தனக்கு மார்கெட் எப்படி போனாலும சம்பாதிக்கும் திறமை உள்ளது என்று தவறான நேரத்தில் மூக்கை நுழைத்து மூக்குடைபடுவது. அதை அடுத்தவர்க்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது. எடுத்துக்காட்டு நான் உப்பு விற்க போனேன் மழை வந்தது நான் பொறிகடலை விற்க போனேன் காற்று வந்து எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விட்டது என்று கால நிலையின் மேல் பழி போடுவது. ஏன் மழையும், காற்றும் வருடம் முழுவதும் ஒரு நாள் விடாமல் வருகின்றதா என்னா? அதற்கென்று சில காலங்கள் உள்ளது அந்த காலங்களை தவிர்த்துவிடுங்கள். 


ஏற்ற காலத்தில் ஏற்ற தொழிலை செய்யங்கள் லாபம் வரும். எப்பொழுதும் அவசரம் தான் நான் இன்றைக்கே பணக்காரன் ஆகவேண்டும் தினமும் கண்டிப்பாக லாபம் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம். இது தான் சந்தைக்கோ அல்லது தொழிலிற்கோ ஆகாத பிடிவாத குணங்கள். இந்த காலங்களில் அமைதி காக்க வேண்டும் அப்பொழுது தான் சுயக்கட்டுப்பாடு வரும். சரியான காலத்தில் சரியான முதலீடு மூலமாக சம்பாதிக்க முடியும் அதை விட்டு விட்டு பங்குச்சந்தையில் சம்பாதிக்க முடியாதவர்கள் நடந்து முடிந்த செய்திகளை தங்களது Youtube சேனல்லி போட்டு சந்தையில் சம்பாதிக்க முடியாமல் செய்திகளை கூறி அனைவரையும் தங்களது சேனலை தினமும் பார்க்க வைத்து சமபாரிப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்தியை பார்த்து அடுத்த நாள் அந்த பங்கை வாங்குவது பின் நஷ்டம் தான். செய்தி என்பது நடந்து முடிந்ததை கூறுவது. முடிந்ததை வைத்து என்ன செய்ய முடியும்? சந்தையில் என்ன நடக்கின்றது என்பது அறிவை வளர்ப்பதற்கு தேவை இந்த முடிந்து போன செய்திகள். ஆனால் பங்குச்சந்தையில் சம்பாரிப்பதற்கு தேவை நடக்க போரதை முன்கூட்டியே தெரிந்து முதலீடு செய்து ஏறின பின்பு விற்று லாபம் பார்ப்பதே சரியான முறை. 


இதை சொன்னால் அதெப்படி செய்திகள் வருவதற்கு முன்பே தெரிந்துகொள்வது? இவன் முட்டாளா இருக்கானே என்று தான் என்னை எல்லோரும் கூறுவார்கள். ஏனென்றால் ஒரு 15 வருடத்திற்குள் தொழில்நுட்பத்தில் அவ்வளவு மாற்றம். இன்று டீவி செய்திகள் தான் உலகம் காலையில் டீவியை போட்டால் 24 மணி நேரமும் டீவி. இதில் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு சேனலை ஆரம்பித்து இஷ்டத்திற்கு செய்திகளை மாற்றி மாற்றி பொய் புழுகுவது இது தெரியாத மக்கள் இது தான் உலகம் என்று மூளையில் பதிவு செய்துகொண்டனர். சற்று யோசித்துப் பாருங்கள் நமது அப்பா அம்மா காலத்தில் இப்படியா டீவிக்கு அடிமையாக இருந்தார்கள்? முதலில் அவர்கள் காலத்தில் டீவி என்பது குறைவு. 


பொதிகை சேனல் மட்டும் தான் அப்பொழுது இருந்தவர்களுக்கு அறிவு இல்லாமலா இருந்தது? ஆயுள் காலமும் நீடித்திருந்தது. ஆனால் இன்று எல்லாத்திற்கும் டீவியை பார்ப்பது ஏன் சாப்பிடும் சாப்பாட்டிற்கு கூட டீவியில் சொல்லுவதை தான் சாப்பிடும் நிலை இன்று ஆகிவிட்டது என்ன சொல்லி என்ன செய்ய? பேசினால் பேசிக்கொண்டே போவேன். டீவி செய்தியை வைத்து உங்களால் சம்பாதிக்க முடியாது. 


நீண்ட ஆயுளையும் பெற முடியாது. ஒரு மனிதனை 3மாதம் ஒரு பழக்கத்தை தொடரந்து செய்ய வைத்தால் அவன் தானாகவே இது உண்மை என்று மனதில் தானாக பதிந்துவிடும் அவனே மாறி விடுகின்றான். பங்குச்சந்தையில் பணக்காரர் ஆனவர்கள் உண்டு வெளியே காட்டிக்கொள்வது இல்லை இது தான் என் பதிவு.. 


நன்றி..


சிவக்குமார்  VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰