கரைவழி நாடும் நாகரீகமும் - உருவான விதம்
கரைவழி நாடும் நாகரீகமும் - உருவான விதம் அனைவருக்கும் அன்பு வணக்கம். 2022 ஏப்ரல் 16 க்குப் பிறகு மீண்டும் ஒரு மண்சார்ந்த பெருநூல் வெளியிட்டு விட்டோம். அனைத்தையும் ஆவணப்படுத்தும் நாம் இந்த கடந்த இரண்டாண்டு நிகழ்வுகளையும் கொஞ்சம் அசைபோடுவோம். நூலைப்பற்றியும், நல்ல மனிதர்களைப்பற்றியும் கணக்கு வரவு செலவுகளையும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இது ஆறாவது ஆண்டு 2024 கரை வழி நாடும் நாகரீகமும். கடந்த 2022 செப்டம்பர் 5 ஆம் நாள் தலைவர் திரு. குமாரராஜா இல்லத்தில் சில கசப்பான நிகழ்வுகளுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தென்கொங்கின் தொன்மங்கள் எனது பெயரில் வரவேண்டும் மற்ற பெயரில் வரக்கூடாதெனவும் இறுதியாக உறுதி செய்ப்பட்டு பல்வேறு மன நெருக்கடிகளுக்குப் பிறகு நூல் வெளிவந்துவிட்டது. அதற்கடுத்த சென்னை தொல்லியல் துறை அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராக திருமதி. மூர்த்தீஸ்வரி இருக்கும்போது அவர்தான் இந்த அமராவதி நதிக்கரையினைப் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுகள் குறித்தும், இந்த நதிக்கரையிலிருந்து உருவான நாகரீகத்தைய